Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

லேவியர்+ஆகமம்=லேவியராகமம். அர்த்தம், “லேவியர்களைப் பற்றிய பதிவு.” அதாவது, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்கள்.

  • 1

    • தகன பலி (1-17)

  • 2

    • உணவுக் காணிக்கை (1-16)

  • 3

    • சமாதான பலி (1-17)

      • கொழுப்பையும் இரத்தத்தையும் சாப்பிடக் கூடாது (17)

  • 4

    • பாவப் பரிகார பலி (1-35)

  • 5

    • சில பாவங்களும் அவற்றுக்கான பலிகளும் (1-6)

      • மற்றவர்கள் செய்த பாவங்களைத் தெரிவித்தல் (1)

    • ஏழைகள் செலுத்த வேண்டிய பலியும் காணிக்கையும் (7-13)

    • தெரியாத்தனமாகப் பாவம் செய்தவர்கள் செலுத்த வேண்டிய குற்ற நிவாரண பலி (14-19)

  • 6

    • குற்ற நிவாரண பலி பற்றிய கூடுதல் அறிவுரைகள் (1-7)

    • பலி சம்பந்தமான அறிவுரைகள் (8-30)

      • தகன பலி (8-13)

      • உணவுக் காணிக்கை (14-23)

      • பாவப் பரிகார பலி (24-30)

  • 7

    • பலி சம்பந்தமான அறிவுரைகள் (1-21)

      • குற்ற நிவாரண பலி (1-10)

      • சமாதான பலி (11-21)

    • கொழுப்பையும் இரத்தத்தையும் சாப்பிடக் கூடாது (22-27)

    • குருமார்களுக்கான பங்கு (28-36)

    • பலி பற்றிய அறிவுரைகளின் முடிவுரை (37, 38)

  • 8

    • ஆரோனும் அவருடைய மகன்களும் குருமார்களாக நியமிக்கப்படுகிறார்கள் (1-36)

  • 9

    • ஆரோன் குருத்துவ நியமிப்புக்கான பலிகளைச் செலுத்துகிறார் (1-24)

  • 10

    • யெகோவாவின் நெருப்பு நாதாபையும் அபியூவையும் கொன்றுபோடுகிறது (1-7)

    • குடிப்பது, சாப்பிடுவது சம்பந்தமாக குருமார்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்கள் (8-20)

  • 11

    • சுத்தமான, அசுத்தமான மிருகங்கள் (1-47)

  • 12

    • குழந்தை பிறந்த பிறகு சுத்திகரிப்புக்காகச் செய்ய வேண்டியவை (1-8)

  • 13

    • தொழுநோயாளிகளுக்கான சட்டங்கள் (1-46)

    • உடையில் வரும் தொழுநோய் (47-59)

  • 14

    • தொழுநோயிலிருந்து சுத்திகரிப்பது (1-32)

    • தொழுநோய் பிடித்த வீட்டைச் சுத்திகரிப்பது (33-57)

  • 15

    • பிறப்புறுப்பில் ஒழுக்கு நோயுள்ளவர்கள் தீட்டுள்ளவர்கள் (1-33)

  • 16

    • பாவப் பரிகார நாள் (1-34)

  • 17

    • பலிகளைச் செலுத்துவதற்கான வழிபாட்டுக் கூடாரம் (1-9)

    • இரத்தத்தைச் சாப்பிட தடை (10-14)

    • தானாகச் செத்த மிருகத்தைச் சாப்பிட்டால் செய்ய வேண்டியவை (15, 16)

  • 18

    • முறைகேடான உடலுறவுகொள்வது (1-30)

      • கானானியர்களைப் பின்பற்றக் கூடாது (3)

      • இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்வது (6-18)

      • மாதவிலக்கின்போது உடலுறவுகொள்வது (19)

      • ஆணுடன் ஆண் உறவுகொள்வது (22)

      • மிருகத்தோடு உறவுகொள்வது (23)

      • ‘சுத்தமாக இருங்கள், இல்லாவிட்டால் தேசத்திலிருந்து துரத்தப்படுவீர்கள்’ (24-30)

  • 19

    • பரிசுத்தமாக இருப்பது சம்பந்தமான சட்டங்கள் (1-37)

      • அறுவடையின்போது செய்ய வேண்டியவை (9, 10)

      • காது கேட்காதவனுக்கும் கண் தெரியாதவனுக்கும் கரிசனை காட்ட வேண்டும் (14)

      • இல்லாததையும் பொல்லாததையும் பேசக் கூடாது (16)

      • யார்மேலும் பகை வைத்திருக்கக் கூடாது (18)

      • மாயமந்திரமும் ஆவியுலகத் தொடர்பும் தடை செய்யப்படுகின்றன (26, 31)

      • பச்சை குத்துவதற்குத் தடை (28)

      • மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் (32)

      • மற்ற தேசத்து ஜனங்களை நேசிக்க வேண்டும் (33, 34)

  • 20

    • மோளேகை வணங்குவது; ஆவியுலகத் தொடர்பு (1-6)

    • பரிசுத்தமாக இருப்பதும், பெற்றோருக்கு மதிப்புக் கொடுப்பதும் (7-9)

    • முறைகேடாக உடலுறவுகொள்கிறவர்கள் கொல்லப்படுவார்கள் (10-21)

    • தேசத்திலிருந்து துரத்தப்படாமல் இருக்க பரிசுத்தமாக இருக்க வேண்டும் (22-26)

    • ஆவிகளோடு பேசுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் (27)

  • 21

    • குருமார்கள் தீட்டுப்படாமல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் (1-9)

    • தலைமைக் குருவானவர் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது (10-15)

    • குருமார்களுக்கு உடலில் குறைபாடு இருக்கக் கூடாது (16-24)

  • 22

    • குருமார்கள் தீட்டுப்படாமல் இருப்பதும், பரிசுத்தமான பொருள்களைச் சாப்பிடுவதும் (1-16)

    • குறையில்லாத மிருகங்களின் பலிகளையே கடவுள் ஏற்றுக்கொள்வார் (17-33)

  • 23

    • பரிசுத்தமான நாட்களும் பண்டிகைகளும் (1-44)

      • ஓய்வுநாள் (3)

      • பஸ்கா (4, 5)

      • புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை (6-8)

      • முதல் விளைச்சலைக் காணிக்கையாகக் கொடுப்பது (9-14)

      • வாரங்களின் பண்டிகை (15-21)

      • அறுவடையின்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள் (22)

      • எக்காளம் ஊதி அறிவிப்பு செய்யப்படுகிற பண்டிகை (23-25)

      • பாவப் பரிகார நாள் (26-32)

      • கூடாரப் பண்டிகை (33-43)

  • 24

    • வழிபாட்டுக் கூடாரத்தின் விளக்குகளுக்கான எண்ணெய் (1-4)

    • படையல் ரொட்டிகள் (5-9)

    • கடவுளுடைய பெயரைப் பழித்துப் பேசுபவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் (10-23)

  • 25

    • ஓய்வு வருஷம் (1-7)

    • விடுதலை வருஷம் (8-22)

    • நிலத்தை மீட்டுக்கொள்ளும் விதம் (23-34)

    • ஏழைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் (35-38)

    • அடிமைகள் சம்பந்தமான சட்டங்கள் (39-55)

  • 26

    • சிலைகளை வணங்கக் கூடாது (1, 2)

    • கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்கள் (3-13)

    • கீழ்ப்படியாவிட்டால் வரும் தண்டனைகள் (14-46)

  • 27

    • நேர்ந்துகொண்டவற்றை மீட்டுக்கொள்ளும் விதம் (1-27)

      • ஆட்கள் (1-8)

      • மிருகங்கள் (9-13)

      • வீடுகள் (14, 15)

      • வயல்கள் (16-25)

      • முதல் பிறப்புகள் (26, 27)

    • எந்த நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை (28, 29)

    • பத்திலொரு பாகத்தை மீட்டுக்கொள்ளும் விதம் (30-34)