லேவியராகமம் 3:1-17

3  பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும்.  பலியாகச் செலுத்தப்படும் மாட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வெட்டப்பட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.  அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+  இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+  ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+  ஒருவன் ஆடுகளில் ஒன்றை யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்த விரும்பினால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எந்தக் குறையும் இல்லாததைச் செலுத்த வேண்டும்.+  செம்மறியாட்டுக் கடாக் குட்டியை அவன் செலுத்த விரும்பினால், அதை யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும்.  பலியாகச் செலுத்தப்படும் ஆட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.  சமாதான பலியிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பை யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ முதுகெலும்பின் பக்கத்திலுள்ள கொழுப்பு நிறைந்த வால் முழுவதையும், குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள எல்லா கொழுப்பையும், 10  இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ 11  குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.+ 12  ஒருவன் வெள்ளாட்டைப் பலியாகச் செலுத்த விரும்பினால், அதை யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். 13  அதன் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும். 14  யெகோவாவுக்குத் தகன பலியாக, குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ 15  இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து தகன பலியாகச் செலுத்த வேண்டும். 16  குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். அது வாசனையான தகன பலி. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே சொந்தம்.+ 17  கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் சாப்பிடவே கூடாது.+ நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, தலைமுறை தலைமுறைக்கும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நல்லுறவு.”
அதாவது, “சமாதான பலியில் கடவுளுடைய பங்காக.”
அதாவது, “சமாதான பலியில் கடவுளுடைய பங்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா