லேவியராகமம் 7:1-38

7  பின்பு அவர், “‘குற்ற நிவாரண பலிகளுக்கான சட்டம் இதுதான்:+ இந்தப் பலி மிகவும் பரிசுத்தமானது.  தகன பலிக்குரியதை வெட்டும் இடத்தில் குற்ற நிவாரண பலிக்குரியதையும் வெட்ட வேண்டும். அதன் இரத்தத்தைப்+ பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+  அதன் கொழுப்பு முழுவதையும் குருவானவர் கடவுளுக்குச் செலுத்த வேண்டும்.+ கொழுப்பு நிறைந்த வாலையும், குடல்களின் மேலுள்ள கொழுப்பையும்,  இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், செலுத்த வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் அவர் எடுக்க வேண்டும்.+  யெகோவாவுக்குத் தகன பலியாக அதைப் பலிபீடத்தின் மேல் குருவானவர் எரிக்க வேண்டும்.+ அது குற்ற நிவாரண பலி.  குருமார்களாகச் சேவை செய்யும் ஆண்கள் எல்லாரும் அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அது மிகவும் பரிசுத்தமானது.+  பாவப் பரிகார பலிகளுக்கான சட்டம் குற்ற நிவாரண பலிகளுக்கும் பொருந்தும். குற்ற நிவாரண பலியைச் செலுத்தி பாவப் பரிகாரம் செய்கிற குருவுக்குத்தான் அந்த இறைச்சி சொந்தமாகும்.+  ஒருவன் கொண்டுவருகிற தகன பலியின் தோல்+ அந்தப் பலியைச் செலுத்துகிற குருவுக்குத்தான் சொந்தமாகும்.  அடுப்பிலோ வாணலியிலோ வட்டக் கல்லிலோ செய்து கொண்டுவரப்படும் எல்லா உணவுக் காணிக்கையும்+ அதைச் செலுத்துகிற குருவுக்குத்தான் சொந்தமாகும்.+ 10  ஆனால், எண்ணெய் கலந்தோ+ எண்ணெய் கலக்காமலோ+ செய்து கொண்டுவரப்படும் உணவுக் காணிக்கை எல்லாவற்றையும் ஆரோனின் மகன்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாரும் அதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். 11  யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலிகளுக்கான+ சட்டம் இதுதான்: 12  அதை நன்றி தெரிவிக்கும் பலியாகச்+ செலுத்தினால், எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகள், எண்ணெய் தடவிய புளிப்பில்லாத மெல்லிய ரொட்டிகள், வறுத்த நைசான மாவில் எண்ணெய் ஊற்றி பிசைந்து சுடப்பட்ட வட்ட ரொட்டிகள் ஆகியவற்றையும் அதனோடு சேர்த்து செலுத்த வேண்டும். 13  நன்றி தெரிவிக்கச் செலுத்தப்படும் சமாதான பலிகளுடன் சேர்த்து, புளித்த மாவினால் செய்யப்பட்ட வட்ட ரொட்டிகளையும் செலுத்த வேண்டும். 14  ஒவ்வொரு விதமான ரொட்டியிலிருந்தும் ஒன்றை எடுத்து யெகோவாவுக்குப் பரிசுத்த பங்காகப் படைக்க வேண்டும். இவையெல்லாம் சமாதான பலிகளின் இரத்தத்தைத் தெளிக்கிற குருவுக்குச் சொந்தமாகும்.+ 15  நன்றி தெரிவிக்கச் செலுத்தப்படும் சமாதான பலியின் இறைச்சியை அதே நாளில் சாப்பிட வேண்டும். அடுத்த நாள் காலைவரை அதில் எதையும் மீதி வைக்கக் கூடாது.+ 16  ஒருவன் கொண்டுவரும் பலி, நேர்ந்துகொண்டதை நிறைவேற்றும் பலியாகவோ+ அவனாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலியாகவோ+ இருந்தால் அதே நாளில் சாப்பிட வேண்டும். மீதியிருந்தால் அடுத்த நாளிலும் சாப்பிடலாம். 17  ஆனால், மூன்றாம் நாள்வரை மீந்திருக்கும் இறைச்சியை எரித்துவிட வேண்டும்.+ 18  சமாதான பலியைக் கொண்டுவந்தவன் அதன் இறைச்சியை மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அவனைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்தப் பலியால் அவனுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது. அது கடவுளுக்கு அருவருப்பாக இருக்கும். அதில் கொஞ்சம் சாப்பிட்டால்கூட அந்தக் குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்படுவான்.+ 19  தீட்டான எதன் மீதாவது அந்த இறைச்சி பட்டால் அதைச் சாப்பிடக் கூடாது. அதை நெருப்பில் சுட்டெரித்துவிட வேண்டும். தீட்டுப்படாத எல்லாரும் சுத்தமான இறைச்சியைச் சாப்பிடலாம். 20  யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலியின் இறைச்சியைத் தீட்டான ஒருவன் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்.+ 21  ஒருவன் தீட்டான மனிதனையோ+ அசுத்தமான மிருகத்தையோ+ தீட்டாகவும் அருவருப்பாகவும் இருக்கிற ஒன்றையோ+ தொட்டுவிட்டு, யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட சமாதான பலியின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்’” என்றார். 22  பின்பு யெகோவா மோசேயிடம், 23  “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘காளை, செம்மறியாட்டுக் கடாக் குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக் கூடாது.+ 24  தானாகச் செத்துப்போன மிருகத்தின் கொழுப்பையும் வேறொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் மற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.+ 25  யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தும் மிருகத்தின் கொழுப்பை ஒருவன் சாப்பிட்டால் அவன் கொல்லப்பட வேண்டும். 26  நீங்கள் குடியிருக்கும் எந்த இடத்திலும் பறவைகளின் இரத்தத்தையோ மிருகங்களின் இரத்தத்தையோ சாப்பிடக் கூடாது.+ 27  இரத்தத்தைச் சாப்பிடுகிறவன் கொல்லப்பட வேண்டும்’”+ என்றார். 28  அதன்பின் யெகோவா மோசேயிடம், 29  “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்துகிறவன் அதில் ஒரு பங்கை யெகோவாவுக்கென்று கொண்டுவர வேண்டும்.+ 30  யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலியாக மார்க்கண்டத்தையும்* கொழுப்பையும்+ தன் கையிலேயே கொண்டுவர வேண்டும். அதை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+ 31  குருவானவர் அதன் கொழுப்பைப் பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும்.+ ஆனால், மார்க்கண்டம் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சொந்தமாகும்.+ 32  நீங்கள் சமாதான பலியாகச் செலுத்துகிற மிருகங்களின் வலது காலை எடுத்து குருவானவருக்குப் பரிசுத்த பங்காகக் கொடுக்க வேண்டும்.+ 33  சமாதான பலிகளின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் மகனுக்கு அந்த வலது காலைப் பங்காகக் கொடுக்க வேண்டும்.+ 34  இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்துகிற சமாதான பலிகளிலிருந்து, அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய காலையும் குருமார்களாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகத் தந்திருக்கிறேன்.+ 35  யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிகளிலிருந்து எடுக்கப்படும் இந்தப் பங்கை குருமார்களாகிய ஆரோனுக்காகவும் அவனுடைய மகன்களுக்காகவும் ஒதுக்கி வைக்க வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்கள் யெகோவாவுக்குக் குருத்துவச் சேவை செய்ய நியமிக்கப்பட்ட நாளில் அந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது.+ 36  இந்தப் பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று அவர்களை அபிஷேகம் செய்த+ நாளில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார். இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குச் சட்டமாக இருக்கும்’” என்றார். 37  தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி,+ குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படும் பலி,+ சமாதான பலி+ ஆகியவற்றுக்கான சட்டங்கள் இவைதான். 38  சீனாய் மலையில் யெகோவா கொடுத்த இந்தச் சட்டங்களின்படியே,+ யெகோவாவுக்குப் பலிகள் செலுத்த வேண்டுமென்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு சீனாய் வனாந்தரத்தில் மோசே கட்டளை கொடுத்தார்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “நெஞ்சுப் பகுதியையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா