யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 1:1-20

1  சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களைக் கடவுள் தன்னுடைய அடிமைகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக+ இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தினார்.+ அவர் தன்னுடைய தூதரை அனுப்பி தன்னுடைய அடிமையாகிய யோவானுக்கு+ அடையாளங்கள் மூலம் அதை வெளிப்படுத்தினார்.  இந்த யோவான், கடவுள் கொடுத்த செய்தியையும் இயேசு கிறிஸ்து கொடுத்த சாட்சியையும் பற்றி, அதாவது தான் பார்த்த எல்லா காரியங்களையும் பற்றி, சொல்லியிருக்கிறார்.  இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் இதில் எழுதப்பட்டிருப்பதைக் கடைப்பிடிக்கிறவர்களும் சந்தோஷமானவர்கள்;+ ஏனென்றால், குறித்த காலம் நெருங்கிவிட்டது.  ஆசிய மாகாணத்தில் இருக்கிற ஏழு சபைகளுக்கு+ யோவான் எழுதுவது: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான கடவுளிடமிருந்தும்,”+ அவருடைய சிம்மாசனத்துக்கு முன்னால் இருக்கிற ஏழு சக்திகளிடமிருந்தும்,+  இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைப்பதாக. இவர்தான் “நம்பகமான சாட்சி,”+ “முதன்முதலில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்,”+ “பூமியின் ராஜாக்களுக்குத் தலைவர்.”+ நம்மேல் அன்பு வைத்திருக்கிற இவர்+ தன்னுடைய இரத்தத்தால் பாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்து,+  ராஜாக்களாகவும்,+ தன்னுடைய கடவுளும் தகப்பனுமானவருக்குச் சேவை செய்கிற குருமார்களாகவும்+ நம்மை நியமித்தார்; இவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் சொந்தம். ஆமென்.*  இதோ! இவர் மேகங்களோடு வருகிறார்,+ எல்லா கண்களும் இவரைப் பார்க்கும், இவரைக் குத்தினவர்களும் பார்ப்பார்கள்; பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் இவரைப் பார்த்து துக்கப்பட்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.+ ஆம், ஆமென்.  “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.  இயேசுவின் சீஷனாக+ உபத்திரவத்திலும்+ கடவுளுடைய அரசாங்கத்திலும்+ சகிப்புத்தன்மையிலும்+ உங்களோடு பங்குகொள்கிற உங்கள் சகோதரன் யோவானாகிய நான், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும் பத்மு என்ற தீவில் இருந்தேன். 10  நான் கடவுளுடைய சக்தியால் நம் எஜமானுடைய நாளுக்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது, எனக்குப் பின்னால் எக்காளம்போல் முழங்கிய ஒரு குரலைக் கேட்டேன். 11  அது, “நீ பார்க்கப்போவதை ஒரு சுருளில் எழுதி எபேசு,+ சிமிர்னா,+ பெர்கமு,+ தியத்தீரா,+ சர்தை,+ பிலதெல்பியா,+ லவோதிக்கேயா+ ஆகிய இடங்களில் இருக்கிற ஏழு சபைகளுக்கு அனுப்பு” என்று என்னிடம் சொன்னது. 12  என்னோடு பேசுவது யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத் திரும்பிப் பார்த்தேன். அப்போது, ஏழு தங்கக் குத்துவிளக்குகளையும்,+ 13  அந்தக் குத்துவிளக்குகளுக்கு நடுவில் மனிதகுமாரனைப் போன்ற ஒருவரையும்+ பார்த்தேன். பாதம்வரை நீளமான ஓர் உடையை அவர் போட்டிருந்தார், மார்பில் தங்க இடுப்புக்கச்சையைக் கட்டியிருந்தார். 14  அவருடைய தலைமுடி வெண்கம்பளியைப் போலவும், வெண்பனியைப் போலவும் வெள்ளையாக இருந்தது. அவருடைய கண்கள் தீ ஜுவாலையைப் போல் இருந்தன.+ 15  அவருடைய பாதங்கள், உலையில் தகதகக்கும் சுத்தமான செம்பைப் போல் இருந்தன.+ அவருடைய குரல் சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போல் இருந்தது. 16  அவருடைய வலது கையில் ஏழு நட்சத்திரங்கள் இருந்தன.+ இரண்டு பக்கமும் கூர்மையான நீண்ட வாள் ஒன்று அவருடைய வாயிலிருந்து புறப்பட்டது.+ அவருடைய முகம் நடுப்பகலில் பிரகாசிக்கிற சூரியனைப் போல் இருந்தது.+ 17  நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப் போலாகி அவருடைய பாதத்தில் விழுந்தேன். அவர் தன்னுடைய வலது கையை என்மேல் வைத்து, “பயப்படாதே. முதலானவரும்+ கடைசியானவரும்+ உயிருள்ளவரும்+ நான்தான். 18  மரணமடைந்தேன்,+ ஆனால் இதோ! என்றென்றும் உயிரோடு இருக்கிறேன்,+ மரணத்தின் சாவியும் கல்லறையின்* சாவியும் என்னிடம் இருக்கின்றன.+ 19  அதனால் நீ பார்த்ததையும், இப்போது நடப்பதையும், இதற்குப் பின்பு நடக்கப்போவதையும் எழுது. 20  நீ என்னுடைய வலது கையில் பார்த்த ஏழு நட்சத்திரங்களையும், ஏழு தங்கக் குத்துவிளக்குகளையும் பற்றிய பரிசுத்த ரகசியம் இதுதான்: அந்த ஏழு நட்சத்திரங்கள் ஏழு சபைகளின் தூதர்களைக் குறிக்கின்றன. அந்த ஏழு குத்துவிளக்குகள் ஏழு சபைகளைக் குறிக்கின்றன” என்று சொன்னார்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “அப்படியே ஆகட்டும்.”
கிரேக்க எழுத்துக்களில் ஆல்பா என்பது முதல் எழுத்து, ஒமேகா என்பது கடைசி எழுத்து.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா