1 நாளாகமம் 10:1-14

10  பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போய் ஓடினார்கள்; பலர் கில்போவா மலையில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+  சவுலையும் அவருடைய மகன்களையும் பெலிஸ்தியர்கள் துரத்திக்கொண்டே பக்கத்தில் வந்துவிட்டார்கள்; பின்பு, அவருடைய மகன்களான யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும்+ கொன்றுபோட்டார்கள்.  சவுலை எதிர்த்து அவர்கள் தீவிரமாகப் போர் செய்தார்கள்; கடைசியில் வில்வீரர்கள் அவரைக் கண்டு அவர்மேல் அம்பு எறிந்தார்கள், அவர் காயமடைந்தார்.+  அதனால் சவுல் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்தவனிடம், “உன் வாளை உருவி என்னைக் குத்திப்போடு; இல்லாவிட்டால், விருத்தசேதனம் செய்யாத அந்த ஆட்கள் வந்து என்னைக் கொடூரமாக* கொன்றுவிடுவார்கள்”+ என்று சொன்னார். ஆனால், அவன் மிகவும் பயந்ததால் தன்னால் முடியாதென்று சொல்லிவிட்டான். அதனால், சவுல் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டார்.+  சவுல் இறந்துவிட்டதைப் பார்த்தபோது அவனும் தன்னுடைய வாளை எடுத்துத் தன் உயிரைப் போக்கிக்கொண்டான்.  இப்படி, சவுலும் அவருடைய மூன்று மகன்களும் அவரோடு இருந்த அவருடைய வீட்டார் எல்லாரும் ஒரே நாளில் செத்துப்போனார்கள்.+  இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள் என்பதையும், சவுலும் அவருடைய மகன்களும் இறந்துவிட்டார்கள் என்பதையும் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்துவந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள், பெலிஸ்தியர்கள் வந்து அங்கே குடியேறினார்கள்.  கொல்லப்பட்டவர்களின் பொருள்களை எடுத்துக்கொள்ள அடுத்த நாள் பெலிஸ்தியர்கள் வந்தபோது, சவுலும் அவருடைய மகன்களும் கில்போவா மலையில் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+  அப்போது சவுலிடமிருந்த எல்லாவற்றையும் உருவிக்கொண்டார்கள், அவருடைய தலையை வெட்டினார்கள், அவருடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; பின்பு, தங்கள் கோயில்களிலும்+ மக்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை அறிவிப்பதற்காக பெலிஸ்தியர்களின் தேசமெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். 10  அதன்பின், அவருடைய ஆயுதங்களைத் தங்களுடைய கோயிலில் வைத்தார்கள்; அவருடைய தலையை தாகோனின் கோயிலில்+ தொங்கவிட்டார்கள். 11  பெலிஸ்தியர்கள் சவுலுக்கு இப்படிச் செய்ததை கீலேயாத்திலுள்ள யாபேஸ்+ ஊர் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள்.+ 12  உடனே அங்கிருந்த வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போய், சவுலின் உடலையும் அவருடைய மகன்களின் உடல்களையும் எடுத்துக்கொண்டு யாபேசுக்கு வந்தார்கள்; பின்பு, அவர்களுடைய எலும்புகளை அங்கிருந்த பெரிய மரத்தடியில் புதைத்துவிட்டு,+ ஏழு நாட்களுக்கு விரதமிருந்தார்கள். 13  யெகோவாவுக்கு சவுல் உண்மையாக இல்லாததால் செத்துப்போனார். அவர் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.+ 14  யெகோவாவிடம் விசாரிப்பதற்குப் பதிலாக, ஆவிகளோடு பேசுகிறவளிடம் விசாரித்தார்;+ அதனால், கடவுள் அவரைச் சாகடித்து அவருடைய அரச பதவியை ஈசாயின் மகன் தாவீதிடம் கொடுத்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கேவலப்படுத்தி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா