1 நாளாகமம் 18:1-17

18  சில காலம் கழித்து, தாவீது பெலிஸ்தியர்களோடு போர் செய்து அவர்களைத் தோற்கடித்தார்.+ காத் நகரத்தையும்+ அதன் சிற்றூர்களையும்* அவர்களிடமிருந்து கைப்பற்றினார்.  அதன் பின்பு மோவாபியர்களைத் தோற்கடித்தார்;+ அவர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.+  யூப்ரடிஸ்* ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த பகுதியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர+ சோபாவின்+ ராஜா ஆதாதேசர்+ போய்க்கொண்டிருந்தான். காமாத்துக்குப்+ பக்கத்தில் தாவீது அவனைத் தோற்கடித்தார்.  அதோடு, அவனிடமிருந்து 1,000 ரதங்களையும், 7,000 குதிரைவீரர்களையும் 20,000 காலாட்படை வீரர்களையும் பிடித்தார்.+ 100 ரதக் குதிரைகளைத் தவிர, மற்ற எல்லா ரதக் குதிரைகளையும் நொண்டியாக்கினார்.*+  சோபாவின் ராஜாவான ஆதாதேசருக்கு உதவி செய்ய தமஸ்குவைச் சேர்ந்த சீரியர்கள் வந்தபோது, அவர்களில் 22,000 பேரை தாவீது வெட்டி வீழ்த்தினார்.+  அதன் பின்பு, சீரியாவின் தலைநகரான தமஸ்குவில் காவல்படைகளை நிறுத்திவைத்தார். சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, கப்பம் கட்டினார்கள். அவர் போன இடமெல்லாம் யெகோவா அவருக்கு வெற்றி தேடித்தந்தார்.+  ஆதாதேசருக்குச் சேவை செய்த ஆட்களிடமிருந்து வட்டவடிவ தங்கக் கேடயங்களை எடுத்துக்கொண்டு தாவீது எருசலேமுக்கு வந்தார்;  ஆதாதேசரின் ஆட்சிக்குட்பட்ட திப்காத், கூன் ஆகிய நகரங்களிலிருந்து தாவீது ராஜா ஏராளமான செம்பைக் கொண்டுவந்தார். அதை வைத்துதான், ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட தொட்டியையும்+ தூண்களையும் பாத்திரங்களையும்+ பிற்பாடு சாலொமோன் செய்தார்.  சோபாவின்+ ராஜாவான ஆதாதேசரின்+ மொத்த படையையும் தாவீது தோற்கடித்தார் என்பதை காமாத்தின் ராஜாவான தோயூ கேள்விப்பட்டார். 10  உடனே, தாவீது ராஜாவிடம் நலம் விசாரிக்கவும் ஆதாதேசரைத் தோற்கடித்ததற்கு வாழ்த்துச் சொல்லவும் தோயூ தன்னுடைய மகன் ஹதோராமை அனுப்பினார். (ஏனென்றால், ஆதாதேசர் அடிக்கடி தோயூவை எதிர்த்துப் போர் செய்துவந்தான்) தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலவிதமான பொருள்களை தாவீதுக்கு ஹதோராம் கொடுத்தார். 11  தாவீது ராஜா இவற்றை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்.*+ அதோடு, ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள்,+ பெலிஸ்தியர்கள்,+ அமலேக்கியர்கள்+ ஆகிய எல்லா மக்களிடமிருந்தும் எடுத்துவந்த தங்கத்தையும் வெள்ளியையும்கூட அர்ப்பணித்தார். 12  செருயாவின்+ மகனான அபிசாய்+ 18,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வீழ்த்தினார்.+ 13  அதோடு, ஏதோமில் காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+ 14  இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்துவந்தார்.+ தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் நீதி நியாயம் வழங்கிவந்தார்.+ 15  செருயாவின் மகன் யோவாப் படைத் தளபதியாக இருந்தார்.+ அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார். 16  அகிதூப்பின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். சவிஷா செயலாளராக இருந்தார். 17  யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”
அதாவது, “ஐப்பிராத்து.”
அதாவது, “குதிரைகளின் பின்தொடை தசைநார்களை வெட்டினார்.”
நே.மொ., “புனிதப்படுத்தினார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா