1 நாளாகமம் 2:1-55

2  இஸ்ரவேலின்+ மகன்கள்: ரூபன்,+ சிமியோன்,+ லேவி,+ யூதா,+ இசக்கார்,+ செபுலோன்,+  தாண்,+ யோசேப்பு,+ பென்யமீன்,+ நப்தலி,+ காத்,+ ஆசேர்.+  யூதாவின் மகன்கள்: ஏர், ஓனேன், சேலா. இவர்கள் மூவரும் சூவாவின் மகள் மூலம் அவருக்குப் பிறந்தவர்கள். அவள் கானான் தேசத்து பெண்.+ யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான், அதனால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.  யூதாவின் மருமகள் தாமார் மூலம் அவருக்குப் பிறந்த மகன்கள்: பாரேஸ்,+ சேராகு. யூதாவுக்கு மொத்தம் ஐந்து மகன்கள்.  பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+  சேராகுவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தர்தா. மொத்தம் ஐந்து பேர்.  கர்மீயின் மகன்* ஆக்கர்;* இவன், கடவுள் அழிக்கச் சொல்லியிருந்த பொருள்களைத் திருடி அவருக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டான்.+ இதனால், இஸ்ரவேலர்களுக்கு அழிவு வந்தது.  ஏத்தானின் மகன்* அசரியா.  எஸ்ரோனின் மகன்கள்: யெர்மெயேல்,+ ராம்,+ கெலுபா.* 10  ராமின் மகன் அம்மினதாப்; அம்மினதாபின்+ மகன் நகசோன்.+ இவர் யூதா வம்சத்துக்குத் தலைவர். 11  நகசோனின் மகன் சல்மா.+ சல்மாவின் மகன் போவாஸ்.+ 12  போவாசின் மகன் ஓபேத். ஓபேத்தின் மகன் ஈசாய்.+ 13  ஈசாயின் மூத்த மகன் எலியாப், இரண்டாம் மகன் அபினதாப், மூன்றாம் மகன் சிமேயா,+ 14  நான்காம் மகன் நெதனெயேல், ஐந்தாம் மகன் ரதாயி, 15  ஆறாம் மகன் ஓத்சேம், ஏழாம் மகன் தாவீது.+ 16  இவர்களுடைய சகோதரிகள்: செருயா, அபிகாயில்.+ செருயாவின் மகன்கள்: அபிசாய்,+ யோவாப்,+ ஆசகேல்+ ஆகிய மூவர். 17  அபிகாயிலின் மகன் அமாசா.+ இஸ்மவேலனான யெத்தேர் அமாசாவின் தகப்பன். 18  எஸ்ரோனின் மகன் காலேபுக்கு* அவருடைய மனைவி அசுபாள் மூலமாகவும் எரீயோத் மூலமாகவும் மகன்கள் பிறந்தார்கள்; அவளுடைய மகன்கள்: ஏசேர், சோபாப், அர்தோன். 19  அசுபாள் இறந்த பின்பு எப்பிராத்+ என்பவளை காலேப் திருமணம் செய்தார்; அவள் அவருக்கு ஹூரைப்+ பெற்றாள். 20  ஹூரின் மகன் ஊரி; ஊரியின் மகன் பெசலெயேல்.+ 21  கீலேயாத்தின்+ தகப்பன் மாகீர். எஸ்ரோன் 60 வயதில் மாகீரின்+ மகளைத் திருமணம் செய்து அவளோடு உறவுகொண்டார். அவள் அவருக்கு செகூப்பைப் பெற்றாள். 22  செகூப்பின் மகன் யாவீர்;+ கீலேயாத் பிரதேசத்தில் 23 நகரங்கள் இவருக்குச் சொந்தமாக இருந்தன. 23  பின்பு, கேசூரிலும்+ சீரியாவிலும்+ உள்ள மக்கள் யாவீரின் வம்சத்தாரிடமிருந்து அவோத்-யாவீரைக்+ கைப்பற்றினார்கள்; அதோடு, கேனாத்+ அதன் சிற்றூர்கள்* என மொத்தம் 60 நகரங்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லாரும் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீரின் வம்சத்தார். 24  காலேப்-எப்பிராத்தாவில் எஸ்ரோன்+ இறந்த பின்பு அவருடைய மனைவி அபியா அவருக்கு அசூரைப்+ பெற்றாள்; இவர் தெக்கோவாவின்+ தகப்பன்.* 25  எஸ்ரோனின் மூத்த மகனாகிய யெர்மெயேலின் மகன்கள்: மூத்த மகன் ராம்; பின்பு பூனா, ஓரென், ஓத்சேம், அகியா. 26  யெர்மெயேலுக்கு இன்னொரு மனைவி இருந்தாள், அவளுடைய பெயர் அத்தாராள். அவள் ஓனாமின் தாய். 27  யெர்மெயேலின் மூத்த மகனான ராமின் மகன்கள்: மாத்ஸ், யாமின், எக்கேர். 28  ஓனாமின் மகன்கள்: சம்மாய், யாதா. சம்மாயின் மகன்கள்: நாதாப், அபிசூர். 29  அபிசூரின் மனைவி அபியாயேல்; அவள் அவருக்கு அக்பானையும் மோளித்தையும் பெற்றாள். 30  நாதாபின் மகன்கள்: சேலேத், அப்பாயிம். ஆனால், சேலேத் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனார். 31  அப்பாயிமின் மகன்* இஷி. இஷியின் மகன்* சேசான்; சேசானின் மகன்* அக்லாய். 32  சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் மகன்கள்: யெத்தேர், யோனத்தான். யெத்தேர் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனார். 33  யோனத்தானின் மகன்கள்: பேலேத், சாசா. இவர்கள் யெர்மெயேலின் வம்சத்தார். 34  சேசானுக்கு மகன்கள் இல்லை, மகள்கள் மட்டுமே இருந்தார்கள். சேசானுக்கு எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்; அவனுடைய பெயர் யர்கா. 35  சேசான் தன்னுடைய வேலைக்காரன் யர்காவுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார். அவள் அவனுக்கு அத்தாயைப் பெற்றாள். 36  அத்தாயின் மகன் நாத்தான். நாத்தானின் மகன் சாபாத். 37  சாபாத்தின் மகன் எப்லால். எப்லாலின் மகன் ஓபேத். 38  ஓபேத்தின் மகன் யெகூ. யெகூவின் மகன் அசரியா. 39  அசரியாவின் மகன் ஏலெஸ். ஏலெசின் மகன் எலியாசா. 40  எலியாசாவின் மகன் சிஸ்மாய். சிஸ்மாயின் மகன் சல்லூம். 41  சல்லூமின் மகன் எக்கமியா. எக்கமியாவின் மகன் எலிஷாமா. 42  யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின்*+ மகன்கள்: மூத்த மகனும் சீப்பின் தகப்பனுமாகிய மேசா, எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்கள். 43  எப்ரோனின் மகன்கள்: கோராகு, தப்புவா, ரெக்கேம், சேமா. 44  சேமாவின் மகன் ரெஹேம். இவருடைய மகன் யோர்க்கேயாம். ரெக்கேமின் மகன் சம்மாய். 45  சம்மாயின் மகன் மாகோன், மாகோனின் மகன் பெத்-சூர்.+ 46  காலேபின் மறுமனைவியான ஏப்பாள், ஆரானையும் மோசாவையும் காசேசையும் பெற்றாள். ஆரானின் மகன் காசேஸ். 47  யாதாயின் மகன்கள்: ரெகெம், யோதாம், கேசாம், பேலேட், ஏப்பா, சாகாப். 48  காலேபின் மறுமனைவியான மாக்காள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள். 49  பிற்பாடு அவள் மத்மன்னாவின்+ தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும்+ தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள். காலேபின்+ மகள் அக்சாள்.+ 50  இவர்களே காலேபின் வம்சத்தார். எப்பிராத்தாவின்+ மூத்த மகனான ஹூரின்+ மகன்கள்: கீரியாத்-யெயாரீமின்+ தகப்பன் சோபால், 51  பெத்லகேமின்+ தகப்பன் சல்மா, பெத்-காதேரின் தகப்பன் ஆரேப்பு. 52  கீரியாத்-யெயாரீமின் தகப்பனான சோபாலின் மகன்கள்: ஆரோவே மற்றும் மெனுகோத்தியரில் பாதிப் பேர். 53  கீரியாத்-யெயாரீமில் இருந்த வம்சத்தார்: இத்தரியர்கள்,+ பூகியர்கள், சுமாத்தியர்கள், மிஸ்ராவியர்கள். இவர்களில் இருந்தே சோராத்தியர்களும்+ எஸ்தாவோலியர்களும்+ வந்தார்கள். 54  சல்மாவின் வம்சத்தார்: பெத்லகேமியர்கள்,+ நெத்தோபாத்தியர்கள், ஆத்ரோத்-பெத்-யோவாபியர்கள், மானகாத்தியரில் பாதிப் பேர், சோரியர்கள். 55  யாபேஷில் வசித்த எழுத்தர்களின் வம்சத்தார்: திராத்தியர்கள், சிமாத்தியர்கள், சுக்காத்தியர்கள். ரேகாப் வம்சத்தாரின்+ மூதாதையான அம்மாத்தின் வழிவந்த கேனியர்கள்+ இவர்களே.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மகன்கள்.”
அர்த்தம், “அழிவைக் கொண்டுவருபவன்.” யோசு 7:1-ல், ஆகான் என்றும் அழைக்கப்படுகிறான்.
நே.மொ., “மகன்கள்.”
18, 19, 42 வசனங்களில் காலேப் என்றும் அழைக்கப்படுகிறார்.
9-ஆம் வசனத்தில் கெலுபா என்றும் அழைக்கப்படுகிறார்.
வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்கள்.”
இந்த அதிகாரத்தில் இருக்கிற சில பெயர்கள், ஆட்களைக் குறிக்காமல் இடங்களைக் குறிக்கலாம். ‘தகப்பன்’ என்பது அந்த நகரத்தை உருவாக்கியவரைக் குறிக்கலாம்.
நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “மகன்கள்.”
9-ஆம் வசனத்தில் கெலுபா என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா