1 நாளாகமம் 25:1-31

25  பின்பு, தாவீதும் ஆலயக் குழுக்களின் தலைவர்களும் ஆசாப், ஏமான், எதித்தூன் ஆகியோருடைய மகன்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தார்கள்.+ யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் இசைத்து, ஜால்ராக்களைத் தட்டி, தீர்க்கதரிசனம் சொல்வதற்கு அவர்களை நியமித்தார்கள்.+ இப்படிப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர்களைப் பற்றிய விவரம்:  ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெத்தனியா, அஷாரேலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆசாப்பின் மகன்களான இவர்கள் ஆசாப்பின் மேற்பார்வையில் சேவை செய்தார்கள். ராஜாவுடைய மேற்பார்வையில் ஆசாப் தீர்க்கதரிசனம் சொன்னார்.  எதித்தூனின்+ மகன்களில் கெதலியா, சேரீ, யெசாயா, சீமேயி, அஷபியா, மத்தித்தியா+ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் ஆறு பேரும் தங்களுடைய அப்பா எதித்தூனின் மேற்பார்வையில் சேவை செய்தார்கள். அவர்கள் யாழ் இசைத்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள், யெகோவாவுக்கு நன்றி சொல்லி போற்றிப் புகழ்ந்தார்கள்.+  ஏமானின்+ மகன்களில் புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், யெரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பேக்காஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  இவர்கள் எல்லாரும் ஏமானின் மகன்கள்; இவர் உண்மைக் கடவுளிடமிருந்து கிடைக்கும் தரிசனங்களை ராஜாவிடம் சொல்லி அவருக்குப் புகழ் சேர்த்தார். அதனால், ஏமானுக்கு 14 மகன்களையும் 3 மகள்களையும் உண்மைக் கடவுள் கொடுத்தார்.  ஏமானின் மகன்கள் எல்லாரும் தங்களுடைய அப்பாவின் மேற்பார்வையில் யெகோவாவின் ஆலயத்தில் பாடல்களைப் பாடினார்கள். ஜால்ராக்களைத் தட்டி, நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் இசைத்து உண்மைக் கடவுளின் ஆலயத்தில் பாடினார்கள்.+ ஆசாப், எதித்தூன், ஏமான் ஆகியோர் ராஜாவின் நேரடி மேற்பார்வையில் சேவை செய்தார்கள்.  யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதற்கு அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் பயிற்சி பெற்றிருந்தார்கள். மொத்தம் 288 பேரும் வித்வான்களாக இருந்தார்கள்.  இளையவர்கள், மூத்தவர்கள், மாணவர்கள், வித்வான்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாரும் குலுக்கல் முறையில்+ தங்களுடைய வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  முதல் குலுக்கல் ஆசாப்பின் மகன் யோசேப்புக்கு விழுந்தது.+ இரண்டாவது கெதலியாவுக்கு விழுந்தது.+ அவரையும் அவருடைய சகோதரர்களையும் அவருடைய மகன்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர்; 10  மூன்றாவது சக்கூருக்கு விழுந்தது.+ அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 11  நான்காவது இஸ்ரிக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 12  ஐந்தாவது நெத்தனியாவுக்கு விழுந்தது.+ அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 13  ஆறாவது புக்கியாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 14  ஏழாவது எசரேலாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 15  எட்டாவது யெசாயாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 16  ஒன்பதாவது மத்தனியாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 17  பத்தாவது சீமேயிக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 18  பதினொன்றாவது அசரெயேலுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 19  பன்னிரண்டாவது அஷபியாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 20  பதின்மூன்றாவது சூபவேலுக்கு விழுந்தது.+ அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 21  பதினான்காவது மத்தித்தியாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 22  பதினைந்தாவது எரேமோத்துக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 23  பதினாறாவது அனனியாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 24  பதினேழாவது யோஸ்பேக்காஷாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 25  பதினெட்டாவது அனானிக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 26  பத்தொன்பதாவது மலோத்திக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 27  இருபதாவது எலியாத்தாவுக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 28  இருபத்தொன்றாவது ஒத்திருக்கு விழுந்தது. அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 29  இருபத்திரண்டாவது கிதல்திக்கு விழுந்தது.+ அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 30  இருபத்து மூன்றாவது மகாசியோத்துக்கு விழுந்தது.+ அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து மொத்தம் 12 பேர். 31  இருபத்து நான்காவது ரொமந்தியேசருக்கு விழுந்தது.+ அவருடைய மகன்களையும் அவருடைய சகோதரர்களையும் சேர்த்து 12 பேர்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா