1 நாளாகமம் 3:1-24

3  எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த மகன்கள்:+ மூத்த மகன் அம்னோன்;+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாம்+ இவனைப் பெற்றாள். இரண்டாம் மகன் தானியேல்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயில்+ இவனைப் பெற்றாள்.  மூன்றாம் மகன் அப்சலோம்;+ கேசூர் ராஜாவான தல்மாயின் மகளாகிய மாக்காள் இவனைப் பெற்றாள். நான்காம் மகன் அதோனியா;+ ஆகீத் இவனைப் பெற்றாள்.  ஐந்தாம் மகன் செப்பத்தியா; அபித்தாள் இவனைப் பெற்றாள். ஆறாம் மகன் இத்ரேயாம்; தாவீதின் மனைவி எக்லாள் இவனைப் பெற்றாள்.  இந்த ஆறு மகன்களும் எப்ரோனில் அவருக்குப் பிறந்தவர்கள்; அங்கே அவர் ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார், 33 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+  எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள்.  அவருக்குப் பிறந்த மற்ற ஒன்பது மகன்கள்: இப்பார், எலிஷாமா, எலிப்பேலேத்,  நோகா, நெப்பேக், யப்பியா,  எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத்.  இவர்கள் எல்லாரும் தாவீதின் மகன்கள்; இவர்களைத் தவிர மறுமனைவிகளின் மகன்களும் இருந்தார்கள். தாமார்+ இவர்களுடைய சகோதரி. 10  சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+ ரெகொபெயாமின் மகன் அபியா,+ அபியாவின் மகன் ஆசா,+ ஆசாவின் மகன் யோசபாத்,+ 11  யோசபாத்தின் மகன் யோராம்,+ யோராமின் மகன் அகசியா,+ அகசியாவின் மகன் யோவாஸ்,+ 12  யோவாசின் மகன் அமத்சியா,+ அமத்சியாவின் மகன் அசரியா,+ அசரியாவின் மகன் யோதாம்,+ 13  யோதாமின் மகன் ஆகாஸ்,+ ஆகாசின் மகன் எசேக்கியா,+ எசேக்கியாவின் மகன் மனாசே,+ 14  மனாசேயின் மகன் ஆமோன்,+ ஆமோனின் மகன் யோசியா.+ 15  யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாம் மகன் யோயாக்கீம்,+ மூன்றாம் மகன் சிதேக்கியா,+ நான்காம் மகன் சல்லூம். 16  யோயாக்கீமின் மகன்* எகொனியா,+ எகொனியாவின் மகன் சிதேக்கியா. 17  சிறைக்கைதி எகொனியாவின் மகன்கள்: சலாத்தியேல், 18  மல்கீராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா. 19  பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சீமேயி; செருபாபேலின்+ மகன்கள்: மெசுல்லாம், அனனியா (அவர்களுடைய சகோதரி செலோமித்); 20  அவருடைய மற்ற ஐந்து மகன்கள்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத். 21  அனனியாவின் மகன்கள்: பெலத்தியா, யெசாயா; யெசாயாவின் மகன்* ரெபாயா; ரெபாயாவின் மகன்* அர்னான்; அர்னானின் மகன்* ஒபதியா; ஒபதியாவின் மகன்* செக்கனியா; 22  செக்கனியாவின் வம்சத்தார்: அவருடைய மகன் செமாயா, செமாயாவின் மகன்கள் அத்தூஸ், ஈகால், பாரியா, நெயாரியா, சாப்பாத் என மொத்தம் ஆறு பேர். 23  நெயாரியாவின் மகன்கள்: எலியோனாய், இஸ்கியா, அசரீக்காம் ஆகிய மூன்று பேர். 24  எலியோனாயின் மகன்கள்: ஒதாவியா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழு பேர்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “மகன்கள்.”
நே.மொ., “மகன்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா