கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 3:1-18

3  மறுபடியும் எங்களைப் பற்றி நாங்களே சிபாரிசு செய்கிறோம் என்று நினைக்கிறீர்களா? சிலரைப் போல், சிபாரிசுக் கடிதங்களை உங்களிடம் காட்டுவதோ உங்களிடமிருந்து வாங்குவதோ எங்களுக்கு அவசியமா?  எங்கள் இதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மக்களாலும் அறியப்பட்டும், வாசிக்கப்பட்டும் வருகிற எங்கள் சிபாரிசுக் கடிதம் நீங்கள்தான்.+  ஊழியர்களாகிய நாங்கள்+ எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது மையினால் அல்ல, உயிருள்ள கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் அல்ல,+ இதயப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.+  கிறிஸ்துவின் மூலம் கடவுள்மேல் நாங்கள் வைத்திருக்கிற நம்பிக்கையால் இப்படிச் சொல்கிறோம்.  எங்களுடைய சொந்த முயற்சியால் போதிய தகுதி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுள்தான் எங்களுக்குப் போதிய தகுதியைக் கொடுத்திருக்கிறார்.+  எழுதப்பட்ட சட்டத்தின்படி அல்ல, தன்னுடைய சக்தியின்படி புதிய ஒப்பந்தத்தின்+ ஊழியர்களாக இருக்க அவர்தான் எங்களுக்குப் போதிய தகுதியைக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், எழுதப்பட்ட சட்டம்+ மரணத் தீர்ப்பு கொடுக்கிறது,+ கடவுளுடைய சக்தியோ உயிர் கொடுக்கிறது.+  மரணத்தை ஏற்படுத்துகிறதும் கற்களில் எழுத்துக்களாகப் பொறிக்கப்பட்டதுமான அந்தச் சட்டம்+ மகிமையுள்ளதாக இருந்தது. அந்த மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்ததால்,+ இஸ்ரவேல் மக்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. மறைந்துபோகவிருந்த சட்டமே அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால்,  கடவுளுடைய சக்தியின் ஊழியம்+ இன்னும் எந்தளவு மகிமையுள்ளதாக இருக்கும்!+  தண்டனைத் தீர்ப்பு வழங்குகிற சட்டமே+ அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால்,+ நீதியை வழங்குகிற ஊழியம் இன்னும் எந்தளவு மகிமையுள்ளதாக இருக்கும்!+ 10  சொல்லப்போனால், ஒருகாலத்தில் மகிமையுள்ளதாக இருந்ததும்கூட அதைவிட மகிமையானது வந்ததால் அதன் மகிமையை இழந்துபோனது.+ 11  மறைந்துபோகவிருந்ததே அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால்,+ நிலையானது இன்னும் எந்தளவு மகிமையுள்ளதாக இருக்கும்!+ 12  இப்படிப்பட்ட நம்பிக்கை எங்களுக்கு இருப்பதால்,+ எந்தத் தயக்கமும் இல்லாமல் நாங்கள் பேசுகிறோம். 13  மறைந்துபோகவிருந்த மகிமையை* இஸ்ரவேல் மக்கள் உற்றுப்பார்க்கக் கூடாது என்பதற்காக மோசே முகத்திரை+ போட்டுக்கொண்டதைப் போல் நாங்கள் போட்டுக்கொள்வதில்லை. 14  அந்த மக்களுடைய மனம் மழுங்கியிருந்தது.+ இப்போதும்கூட, பழைய ஒப்பந்தம் வாசிக்கப்படும்போது அதே முகத்திரை அவர்களிடமிருந்து நீக்கப்படாமல் இருக்கிறது.+ ஏனென்றால், அது கிறிஸ்துவின் மூலம்தான் நீக்கப்படுகிறது.+ 15  சொல்லப்போனால், மோசேயின் புத்தகங்கள் வாசிக்கப்படும்போது+ இந்நாள்வரை அவர்களுடைய இதயத்தை ஒரு திரை மறைத்திருக்கிறது.+ 16  ஆனால், ஒருவர் யெகோவாவிடம்* திரும்பும்போது, அந்தத் திரை நீக்கப்பட்டுவிடுகிறது.+ 17  யெகோவா* காணமுடியாத உருவத்தில்* இருக்கிறார்;+ யெகோவாவின்* சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு.+ 18  நாம் எல்லாரும் முகத்திரை இல்லாமல் யெகோவாவின்* மகிமையைக் கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறோம். இப்படி, யெகோவாவின்* செயலுக்கு ஏற்றபடியே மகிமைக்குமேல் மகிமை பெற்று அவர் சாயலாக மாற்றப்படுகிறோம்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “விளைவை; முடிவை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “பரலோகத்துக்குரிய உடலில்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அல்லது, “காணமுடியாத உருவத்தில் இருக்கிற யெகோவாவின்.” இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா