கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 5:1-21

5  நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நம்முடைய பூமிக்குரிய வீடாகிய இந்தக் கூடாரம் அழிந்துபோனால்,+ பரலோகத்தில் நிலையான ஒரு வீடு கடவுளிடமிருந்து நமக்குக் கிடைக்கும்; அது கைகளால் கட்டப்படாத கட்டிடமாக இருக்கும்.+  பூமிக்குரிய வீடாகிய இந்த உடலில் இருக்கும்போது நாம் மனம் குமுறுகிறோம். பரலோக வீடாகிய உடலை அணிந்துகொள்வதற்கு மிகவும் ஏங்குகிறோம்.+  அதை அணிந்துகொள்ளும்போதுதான் நாம் நிர்வாணமாகத் தெரிய மாட்டோம்.  சொல்லப்போனால், இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் மனபாரத்தின் காரணமாகக் குமுறுகிறோம். ஏனென்றால், இதைக் களைந்துபோட நாம் விரும்புவதில்லை, மற்றொன்றை அணிந்துகொள்ளவே விரும்புகிறோம்.+ சாவுக்குரிய ஒன்றுக்குப் பதிலாக வாழ்வுக்குரிய ஒன்றையே பெற விரும்புகிறோம்.+  இதற்காக நம்மைத் தயார்படுத்தியவர் கடவுள்தான்.+ நமக்குக் கிடைக்கப்போகிற ஆஸ்திக்கு உத்தரவாதமாக* அவர் தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுத்தார்.+  அதனால், எப்போதும் மிகுந்த தைரியத்துடன் இருக்கிறோம். அதோடு, இந்த உடலில் குடியிருக்கும்போது நம் எஜமானிடமிருந்து தூரத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்.+  ஏனென்றால், நாம் கண்ணால் பார்க்கிறபடி நடக்காமல் விசுவாசத்தின்படி நடக்கிறோம்.  நாம் மிகுந்த தைரியத்தோடு இருக்கிறோம்; இந்த உடலில் குடியிருக்காமல் நம் எஜமானோடு குடியிருக்கவே அதிகமாக ஆசைப்படுகிறோம்.+  நாம் அவரோடு குடியிருந்தாலும் சரி, குடியிருக்காவிட்டாலும் சரி, அவருக்குப் பிரியமானவர்களாக இருப்பதையே நம் குறிக்கோளாக வைத்திருக்கிறோம். 10  நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக நிற்க வேண்டும். அப்போது, நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்துவந்த நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி பலன் பெறுவோம்.+ 11  நம் எஜமானுக்குப் பயந்து நடக்க வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருப்பதால், எங்களுடைய வார்த்தைகளைக் கேட்கும்படி மக்களை ஊக்குவித்து வருகிறோம். ஆனால், நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது கடவுளுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் மனசாட்சிக்கும் நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். 12  மறுபடியும் எங்களை உங்களிடம் சிபாரிசு செய்வதாக நினைக்க வேண்டாம். நீங்கள் எங்களைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் சொல்கிறோம். அப்போது, இதயத்தைப் பார்க்காமல் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்துப் பெருமையடிக்கிறவர்களுக்கு உங்களால் பதில் சொல்ல முடியும்.+ 13  நாங்கள் பைத்தியமாக இருக்கிறோம் என்றால்,+ அது கடவுளுக்காகத்தான்; நாங்கள் தெளிந்த புத்தியோடு இருக்கிறோம் என்றால், அது உங்களுக்காகத்தான். 14  கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டியெழுப்புகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் அவர் ஒருவரே இறந்தார்.+ சொல்லப்போனால், எல்லாரும் இறந்த நிலையில் இருந்தார்கள். 15  அவர் எல்லாருக்காகவும் இறந்திருப்பதால், வாழ்கிறவர்கள் இனி தங்களுக்காக வாழாமல்+ தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம். 16  அதனால், நாங்கள் இனிமேல் யாரையும் மனித கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டோம்.+ கிறிஸ்துவை மனித கண்ணோட்டத்தில்* ஒருவேளை பார்த்திருந்தாலும் இனிமேல் ஒருபோதும் அப்படிப் பார்க்க மாட்டோம்.+ 17  ஒருவன் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருந்தால் அவன் புதிய படைப்பாக இருக்கிறான்.+ பழையவை ஒழிந்துபோய்விட்டன, இதோ! புதியவை தோன்றியிருக்கின்றன. 18  எல்லாம் கடவுளிடமிருந்தே வந்திருக்கின்றன. அவர்தான் கிறிஸ்துவின் மூலம் எங்களைத் தன்னோடு சமரசமாக்கி,+ சமரசமாக்கும் ஊழியத்தை எங்களிடம் ஒப்படைத்தார்.+ 19  அதாவது, உலக மக்களுடைய குற்றங்களை நினைத்துப் பார்க்காமல்,+ கிறிஸ்துவின் மூலம் அவர்களைத் தன்னோடு சமரசமாக்கி,+ சமரசமாக்கும் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.+ 20  அதனால், நாங்கள் கிறிஸ்துவின் சார்பில்+ தூதுவர்களாக இருக்கிறோம்.+ ‘கடவுளோடு சமரசமாகுங்கள்’ என்று கிறிஸ்துவின் சார்பில் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் மூலம் கடவுளே உங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். 21  கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாகும்படி,+ பாவமே செய்யாத அவரைக்+ கடவுள் நமக்காகப் பாவப் பரிகார பலியாகக் கொடுத்தார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “முன்பணமாக.”
வே.வா., “உடலில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா