2 சாமுவேல் 9:1-13

9  பின்பு தாவீது, “சவுலின் குடும்பத்தில் இன்னும் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? நான் அவர்களுக்கு மாறாத அன்பு காட்ட வேண்டும். யோனத்தானுக்காக அப்படிச் செய்ய விரும்புகிறேன்”+ என்று சொன்னார்.  சீபா+ என்பவன் சவுலின் வீட்டில் வேலைக்காரனாக இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ராஜா அவனிடம், “நீதான் சீபாவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “உங்கள் வேலைக்காரனாகிய சீபா நான்தான்” என்று சொன்னான்.  ராஜா அவனிடம், “சவுலின் குடும்பத்தில் இன்னும் யாராவது உயிரோடு இருக்கிறார்களா? கடவுள் காட்டுவது போல நானும் அவர்களுக்கு மாறாத அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். சீபா அவரிடம், “யோனத்தானின் மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு இரண்டு கால்களும் ஊனம்”+ என்று சொன்னான்.  அதற்கு ராஜா, “அவன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டார். அதற்கு சீபா, “அவர் லோ-தேபாரில் குடியிருக்கிறார், அம்மியேலின் மகனான மாகீரின்+ வீட்டில் இருக்கிறார்” என்று சொன்னான்.  உடனே தாவீது ராஜா ஆள் அனுப்பி, லோ-தேபாரில் அம்மியேலின் மகனான மாகீரின் வீட்டிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு வந்தார்.  சவுலின் பேரனும் யோனத்தானின் மகனுமாகிய மேவிபோசேத் தாவீதின் முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்தார். அப்போது தாவீது, “மேவிபோசேத்!” என்று கூப்பிட்டார். அதற்கு அவர், “சொல்லுங்கள், எஜமானே” என்று சொன்னார்.  தாவீது அவரிடம், “பயப்படாதே, உன் அப்பா யோனத்தானுக்காக நான் உனக்கு மாறாத அன்பு காட்டுவேன்.+ உன் தாத்தா சவுலுக்குச் சொந்தமான எல்லா நிலங்களையும் திருப்பித் தருவேன். இனி எப்போதும் நீ என் மேஜையில் சாப்பிட வேண்டும்”+ என்று சொன்னார்.  அப்போது அவர் சாஷ்டாங்கமாய் விழுந்து, “இந்தச் செத்த நாய்க்குப்+ போய்க் கருணை காட்டுகிறீர்களே, எனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்டார்.  ராஜா உடனே சவுலின் வேலைக்காரன் சீபாவை வரவழைத்து, “இறந்துபோன உன் எஜமான் சவுலுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சொந்தமான எல்லாவற்றையும் அவருடைய பேரனிடம் கொடுக்கிறேன்.+ 10  நீயும் உன் மகன்களும் உன் வேலைக்காரர்களும் அவனுடைய நிலத்தில் பயிர்செய்ய வேண்டும். உன் எஜமானுடைய பேரனின் குடும்பம் சாப்பிடுவதற்காக விளைச்சலைக் கொடுக்க வேண்டும். ஆனால், உன் எஜமானுடைய பேரன் மேவிபோசேத் இனிமேல் என் மேஜையில்தான் சாப்பிடுவான்”+ என்று சொன்னார். சீபாவுக்கு 15 மகன்களும் 20 வேலைக்காரர்களும் இருந்தார்கள்.+ 11  அதற்கு சீபா, “ராஜாவே, நீங்கள் கட்டளை போட்டபடியெல்லாம் அடியேன் செய்வேன்” என்று சொன்னான். இளவரசர்களில் ஒருவரைப் போல மேவிபோசேத்தும் தாவீதின்* மேஜையில் சாப்பிட்டார். 12  மேவிபோசேத்துக்கு ஒரு மகன் இருந்தான், அந்தச் சிறுவனின் பெயர் மிக்கா.+ சீபாவின் வீட்டிலிருந்த எல்லாரும் மேவிபோசேத்துக்கு வேலைக்காரர்களாக ஆனார்கள். 13  இரண்டு கால்களும் ஊனமாக இருந்த+ மேவிபோசேத் எருசலேமில் குடியிருந்தார். அவர் தினமும் ராஜாவின் மேஜையில் சாப்பிட்டார்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “என்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா