2 நாளாகமம் 27:1-9

27  யோதாம்+ ராஜாவானபோது அவருக்கு 25 வயது. அவர் 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள்.+  யோதாம் தன்னுடைய அப்பா உசியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ ஆனால், தன்னுடைய அப்பாவைப் போல் யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே அத்துமீறி நுழையவில்லை.+ இருந்தாலும், மக்கள் இன்னமும் மோசமான காரியங்களைத்தான் செய்துகொண்டிருந்தார்கள்.  யெகோவாவுடைய ஆலயத்தின் ‘உயர்ந்த நுழைவாசலை’+ அவர் கட்டினார். ஓபேலில்+ இருந்த மதில்மேல் நிறைய கட்டுமான வேலைகளைச் செய்தார்.  அதோடு, யூதாவின் மலைப்பகுதியில்+ நகரங்களைக் கட்டினார்.+ காட்டுப்பகுதிகளில் கோட்டைகளையும்+ கோபுரங்களையும் கட்டினார்.+  அம்மோனியர்களின்+ ராஜாவோடு போர் செய்து, கடைசியில் வெற்றி பெற்றார். அதனால், அம்மோனியர்கள் அந்த வருஷம் அவருக்கு 100 தாலந்து* வெள்ளியையும் 10,000 கோர் அளவு* கோதுமையையும் 10,000 கோர் அளவு பார்லியையும் கொடுத்தார்கள். அடுத்த வருஷமும் அதற்கடுத்த வருஷமும் இதேபோல் கொடுத்தார்கள்.+  யோதாம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் வழியில் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், அவர் நாளுக்கு நாள் வலிமையுள்ளவராக ஆனார்.  யோதாம் செய்த எல்லா போர்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும் இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+  அவர் 25 வயதில் ராஜாவாகி, 16 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+  யோதாம் இறந்துபோனதும்,* ‘தாவீதின் நகரத்தில்’+ அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆகாஸ் ராஜாவானார்.+

அடிக்குறிப்புகள்

ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு கோர் அளவு என்பது சுமார் 220 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா