ஆதியாகமம் 10:1-32
10 நோவாவின் மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியவர்களின் வரலாறு இதுதான்.
பெருவெள்ளம் வந்த பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
2 யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக், தீராஸ்.
3 கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத், தொகர்மா.
4 யாவானின் மகன்கள்: எலிஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம்.
5 இவர்களுடைய வம்சத்தார் அவரவர் மொழியின்படியும், குடும்பத்தின்படியும், தேசத்தின்படியும் தீவுகளில்* பரவியிருந்தார்கள்.
6 காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
7 கூஷின் மகன்கள்: சிபா, ஆவிலா, சப்தா, ராமாகு, சப்திகா.
ராமாகுவின் மகன்கள்: சேபா, தேதான்.
8 கூஷுக்கு நிம்ரோது பிறந்தான். இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான்.
9 இவன் பெரிய* வேட்டைக்காரனாக இருந்தான், யெகோவாவையே எதிர்த்தான். அதனால்தான், “யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல” என்ற வழக்குச்சொல் வந்தது.
10 அவன் முதன்முதலாக ஆட்சி செய்த நகரங்கள்: சினேயார் தேசத்திலிருந்த பாபேல், ஏரேக், அக்காத், கல்னே.
11 அவன் அந்தத் தேசத்திலிருந்து அசீரியாவுக்குப் போய் நினிவே, ரெகொபோத்-இர், காலாக் ஆகியவற்றையும்
12 நினிவேக்கும் காலாக்குக்கும் இடையில் ரெசேனையும் கட்டினான். இதுதான் மாநகர்.*
13 மிஸ்ராயீமின் மகன்கள்: லூதீம், அனாமீம், லெகாபீம், நப்தூகீம்,
14 பத்ருசீம், கஸ்லூகிம் (இவருடைய வம்சத்தார்தான் பெலிஸ்தியர்கள்), கப்தோரிம்.
15 கானானின் முதல் மகன் சீதோன். இன்னொரு மகன் ஏத்.
16 அதன்பின் எபூசியர்கள், எமோரியர்கள், கிர்காசியர்கள்,
17 ஏவியர்கள், அர்கீயர்கள், சீநியர்கள்,
18 அர்வாதியர்கள், செமாரியர்கள், காமாத்தியர்கள் ஆகியவர்களுக்கு கானான் மூதாதை ஆனான். பிற்பாடு, இந்த கானானியர்களின் குடும்பங்கள் சிதறிவிட்டன.
19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப் பக்கத்திலுள்ள கேரார் வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வரையும் இருந்தது.
20 குடும்பங்களின்படியும், மொழிகளின்படியும், தேசங்களின்படியும், சமுதாயங்களின்படியும் வாழ்ந்துவந்த காமின் சந்ததியார் இவர்கள்தான்.
21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள். அவன் மூத்தவனாகிய யாப்பேத்தின் சகோதரன்,* ஏபேருடைய சந்ததியாருக்கு மூதாதை.
22 சேமின் மகன்கள்: ஏலாம், அஷூர், அர்பக்சாத், லூத், அராம்.
23 அராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
24 அர்பக்சாத்தின் மகன் சேலா. சேலாவின் மகன் ஏபேர்.
25 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒரு மகனின் பெயர் பேலேகு,* ஏனென்றால் அவருடைய வாழ்நாளில்தான் ஜனங்கள் எல்லா இடங்களுக்கும் பிரிந்துபோனார்கள். இன்னொரு மகனின் பெயர் யொக்தான்.
26 யொக்தானின் மகன்கள்: அல்மோதாத், சாலேப், ஆசர்மாவேத், யேராக்,
27 ஹதோராம், ஊசால், திக்லா,
28 ஓபால், அபிமாவேல், சேபா,
29 ஓப்பீர், ஆவிலா, யோபாப்; இவர்கள் எல்லாரும் யொக்தானுக்குப் பிறந்தவர்கள்.
30 இவர்கள் குடியிருந்த பகுதி, மேசாமுதல் கிழக்கத்திய மலைப்பகுதியான செப்பார்வரை பரவியிருந்தது.
31 குடும்பங்களின்படியும், மொழிகளின்படியும், தேசங்களின்படியும் சமுதாயங்களின்படியும் வாழ்ந்துவந்த சேமின் சந்ததியார் இவர்கள்தான்.
32 வம்சங்களின்படியும் தேசங்களின்படியும் வாழ்ந்துவந்த நோவாவுடைய மகன்களின் குடும்பத்தார் இவர்கள்தான். பெருவெள்ளத்துக்குப் பின்பு இவர்களுடைய சந்ததியார்தான் பூமியெங்கும் பரவினார்கள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கடலோரப் பகுதிகளில்.”
^ வே.வா., “பலம்படைத்த.”
^ அநேகமாக, நினிவே, ரெகொபோத்-இர், காலாக், ரெசேன் ஆகிய எல்லா நகரங்களும் சேர்ந்து ஒரு மாநகரமாகக் கருதப்பட்டது.
^ அல்லது, “அவன் யாப்பேத்தின் அண்ணன்.”
^ அர்த்தம், “பிரிவு.”