ஆதியாகமம் 46:1-34

  • யாக்கோபு குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிமாறிப் போகிறார் (1-7)

  • எகிப்துக்குக் குடிமாறிப் போகிறவர்களின் பெயர்கள் (8-27)

  • கோசேனில் யோசேப்பு யாக்கோபைச் சந்திக்கிறார் (28-34)

46  இஸ்ரவேல் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு* புறப்பட்டார். அவர் பெயெர்-செபாவுக்கு வந்துசேர்ந்தபோது தன்னுடைய அப்பா ஈசாக்குடைய கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தினார்.  அன்றைக்கு ராத்திரி கடவுள் ஒரு தரிசனத்தில், “யாக்கோபே, யாக்கோபே!” என்று கூப்பிட்டார். அதற்கு யாக்கோபு, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார்.  அப்போது அவர், “நான்தான் உண்மைக் கடவுள், நான்தான் உன்னுடைய அப்பாவின் கடவுள். எகிப்துக்குப் போக நீ பயப்படாதே. ஏனென்றால், அங்கே நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்.  நான் உன்னோடு எகிப்துக்கு வருவேன். உன்னை மறுபடியும் அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன். நீ சாகும்போது யோசேப்பு உன் கண்களை மூடுவான்” என்றார்.  அதன்பின் யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டார். அவருடைய மகன்கள் அவரையும் தங்களுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் பார்வோன் அனுப்பியிருந்த மாட்டு வண்டிகளில் ஏற்றினார்கள்.  கானான் தேசத்தில் தாங்கள் சேர்த்திருந்த பொருள்களையும் மந்தைகளையும் கொண்டுபோனார்கள். இப்படி, யாக்கோபு குடும்பமாக எகிப்துக்கு வந்துசேர்ந்தார்.  அவர் தன்னுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லாரோடும் எகிப்துக்கு வந்துசேர்ந்தார்.  எகிப்துக்கு வந்துசேர்ந்த இஸ்ரவேலின், அதாவது யாக்கோபின், மகன்கள் இவர்கள்தான்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்.  ரூபனின் மகன்கள்: ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ. 10  சிமியோனின் மகன்கள்: எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். 11  லேவியின் மகன்கள்: கெர்சோன், கோகாத், மெராரி. 12  யூதாவின் மகன்கள்: ஏர், ஓனேன், சேலா, பாரேஸ், சேராகு. ஏரும் ஓனேனும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள். பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல். 13  இசக்காரின் மகன்கள்: தோலா, புவா, யோபு, சிம்ரோன். 14  செபுலோனின் மகன்கள்: சேரேத், ஏலோன், யாலேயேல். 15  இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள் என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர். 16  காத்தின் மகன்கள்: சிப்பியோன், ஹகி, சூனி, இஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி. 17  ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களுடைய சகோதரி சேராள். பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், மல்கியேல். 18  லாபான் தன் மகள் லேயாளுக்குக் கொடுத்த வேலைக்காரியான சில்பாள் பெற்ற மகன்கள் இவர்கள்தான். இவள் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 16 பேர். 19  யாக்கோபின் மனைவி ராகேல் பெற்றெடுத்த மகன்கள்: யோசேப்பு, பென்யமீன். 20  யோசேப்புக்கு எகிப்து தேசத்தில் பிறந்த மகன்கள்: மனாசே, எப்பிராயீம். இவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் பெற்றெடுத்தாள். 21  பென்யமீனின் மகன்கள்: பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆரேத். 22  ராகேல் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 14 பேர். 23  தாணின் மகன் ஊசிம். 24  நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம். 25  லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த வேலைக்காரியான பில்காள் பெற்ற மகன்கள் இவர்கள்தான். யாக்கோபுக்கு இவள் பெற்றெடுத்தவர்கள் மொத்தம் ஏழு பேர். 26  யாக்கோபின் மருமகள்களைத் தவிர, அவருடன் எகிப்துக்குப் போன அவருடைய வம்சத்தார் மொத்தம் 66 பேர். 27  யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த மகன்கள் இரண்டு பேர். இப்படி, எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர். 28  யாக்கோபு யூதாவைத் தனக்கு முன்னால் அனுப்பி, தான் கோசேனுக்கு வந்துகொண்டிருப்பதாக யோசேப்பிடம் சொல்லச் சொன்னார். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு வந்துசேர்ந்தபோது, 29  யோசேப்பு தன்னுடைய ரதத்தைத் தயார்படுத்தி, தன் அப்பா இஸ்ரவேலைப் பார்ப்பதற்காக கோசேனுக்குப் போனார். அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து வெகு நேரம் அழுதார்.* 30  பின்பு இஸ்ரவேல் யோசேப்பிடம், “இனி எனக்குச் சாவு வந்தாலும் கவலைப்பட மாட்டேன். உன்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டேன், நீ உயிரோடு இருப்பதைத் தெரிந்துகொண்டேன்” என்றார். 31  யோசேப்பு தன்னுடைய சகோதரர்களையும் தன்னுடைய அப்பாவின் குடும்பத்தாரையும் பார்த்து, “நான் பார்வோனிடம் போய், ‘என் சகோதரர்களும் என் அப்பாவின் குடும்பத்தாரும் கானான் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கிறார்கள். 32  அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை வளர்ப்பது அவர்களுடைய தொழில். அவர்கள் தங்களுடைய மந்தைகளையும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுவந்திருக்கிறார்கள்’ என்று சொல்லப்போகிறேன். 33  பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘என்ன தொழில் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34  ‘உங்கள் அடிமைகளாகிய நாங்கள் சிறு வயதிலிருந்தே எங்கள் முன்னோர்களைப் போல ஆடுமாடுகளை வளர்த்துவருகிறோம்’ என்று சொல்லுங்கள். அப்போதுதான், நீங்கள் கோசேன் பிரதேசத்தில் குடியிருக்க முடியும். ஏனென்றால், ஆடு மேய்க்கிறவர்களைக் கண்டாலே எகிப்தியர்களுக்குப் பிடிக்காது” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தனக்குச் சொந்தமான எல்லாரையும் கூட்டிக்கொண்டு.”
அதாவது, “ஹெலியோபாலிஸ்.”
வே.வா., “திரும்பத் திரும்பக் கட்டிப்பிடித்து அழுதார்.”