ஆமோஸ் 4:1-13

  • பாசானின் பசுக்களுக்கு எதிரான செய்தி (1-3)

  • இஸ்ரவேலின் பொய் வணக்கத்தை யெகோவா ஏளனம் செய்கிறார் (4, 5)

  • தண்டனை கிடைத்தும் இஸ்ரவேல் திருந்துவதில்லை (6-13)

    • “உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்!” (12)

    • ‘கடவுள் தன் மனதில் நினைப்பதை மனிதனிடம் சொல்கிறார்’ (13)

4  “சமாரியா மலையில் குடியிருக்கும் பெண்களே,+ கேளுங்கள்.பாசான் பிரதேசத்தின் மாடுகள்போல் நீங்கள் இருக்கிறீர்கள்.ஏழைகளை ஏமாற்றுகிறீர்கள், எளியவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்கள்.+‘குடிக்க மது கொண்டுவா’ என்று உங்கள் கணவரிடம்* சொல்கிறீர்கள்.   உன்னதப் பேரரசராகிய யெகோவா தன்னுடைய பரிசுத்தத்தின் மேல் சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:‘“ஒரு காலம் வரப்போகிறது. அப்போது, கறிக்கடைக் கொக்கிகளால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.உங்களில் மீதியாக இருப்பவர்கள் தூண்டில் கொக்கிகளால் பிடித்துச் செல்லப்படுவீர்கள்.   மதிலில் உள்ள பிளவுகள் வழியாய் நேராக வெளியே போவீர்கள்.ஹார்மனுக்கு* துரத்தப்படுவீர்கள்” என்று யெகோவா சொல்கிறார்.’   ‘பெத்தேலுக்கு வாருங்கள், அக்கிரமம் செய்யுங்கள்!+கில்காலுக்கு வாருங்கள், அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்யுங்கள்!+ காலையில் உங்கள் பலிகளைச் செலுத்துங்கள்.+மூன்றாம் நாளில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவாருங்கள்.+   உங்கள் நன்றியைக் காட்ட புளித்த ரொட்டியைத் தகன பலியாகச் செலுத்துங்கள்!+நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொடுக்கும் காணிக்கைகளை ஊருக்கே விளம்பரம் பண்ணுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, இதைச் செய்யத்தானே விரும்புகிறீர்கள்?’ என்கிறார் உன்னதப் பேரரசராகிய யெகோவா.   எல்லா ஊர்களிலும் உங்களைப் பட்டினி போட்டேன்.எல்லா வீடுகளிலும் பஞ்சத்தைக் கொண்டுவந்தேன்.+ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.   ‘அறுவடைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மழையை நிறுத்தினேன்.+ஒரு ஊரில் மழை பெய்ய வைத்தேன், இன்னொரு ஊரில் மழை பெய்யாதபடி செய்தேன். ஒரு வயல் மழையில் நனைந்தது.இன்னொரு வயல் மழையில்லாமல் காய்ந்துபோனது.   நீங்கள் தண்ணீரைத் தேடி+ இரண்டு, மூன்று ஊர்களிலிருந்து இன்னொரு ஊருக்குத் தள்ளாடிக்கொண்டே போனீர்கள்.ஆனாலும், உங்கள் தாகம் தீரவில்லை.அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.   ‘அனல் காற்றாலும் நோயாலும் உங்கள் பயிர்களை நாசமாக்கினேன்.+ நீங்களோ தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அதிகரித்தீர்கள்.ஆனால், உங்கள் அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் மொட்டையாக்கின.+அந்த நிலையிலும் நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா. 10  ‘எகிப்தில் வர வைத்தது போன்ற கொள்ளைநோயை உங்களுக்கு வர வைத்தேன்.+ உங்கள் வாலிபர்களை வாளால் கொன்றேன்,+ உங்கள் குதிரைகளை ஒழித்தேன்.+ உங்கள் கூடாரங்களில் பிண நாற்றம் வீசும்படி செய்தேன்.+ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’ என்கிறார் யெகோவா. 11  ‘உங்கள் தேசத்தை வீழ்த்தினேன்.சோதோம் கொமோராவை அழித்ததுபோல் அழித்தேன்.+ நீங்கள் நெருப்பிலிருந்து எடுக்கப்படும் கொள்ளிக்கட்டை போல இருந்தீர்கள்.ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா. 12  இஸ்ரவேலர்களே, உங்களை மறுபடியும் தண்டிக்கப்போகிறேன். இதை நான் கண்டிப்பாகச் செய்யப்போகிறேன்.அதனால், உங்கள் கடவுளைச் சந்திக்கத் தயாராகுங்கள்! 13  மலைகளை உருவாக்கியவர்+ அவர்தான், காற்றை உண்டாக்கியவர்+ அவர்தான்.தன்னுடைய மனதில் நினைப்பதையெல்லாம் மனிதனிடம் சொல்பவர் அவர்தான்.விடியற்கால வெளிச்சத்தை இருளாக மாற்றுபவர்+ அவர்தான்.பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பவர்+ அவர்தான்.பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “எஜமானிடம்.”
இந்த வார்த்தைக்கான அர்த்தம் சரியாகத் தெரியவில்லை.