ஆமோஸ் 9:1-15

  • கடவுளுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது (1-10)

  • தாவீதின் கூடாரம் எடுத்து நிறுத்தப்படும் (11-15)

9  பலிபீடத்துக்கு மேலாக யெகோவா நிற்பதைப் பார்த்தேன்.+ அப்போது அவர், “தூண்களின் மேல்பகுதியை உடைத்துப்போடு, அவற்றின் அஸ்திவாரம் ஆட்டம் காணட்டும். தூண்களின் தலைப்பகுதியைத் தகர்த்துப்போடு. ஜனங்களில் மீதியாக இருப்பவர்களை நான் வாளால் கொல்வேன். யாராலும் தப்பித்து ஓட முடியாது, தப்பிக்க நினைப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.+   அவர்கள் பாதாளம்வரை* குழிதோண்டிப் பதுங்கிக்கொண்டாலும்,அவர்களை மேலே இழுத்து வருவேன்.அவர்கள் வானம்வரை ஏறிப் போனாலும்,அவர்களைக் கீழே இழுத்து வருவேன்.   அவர்கள் கர்மேல் மலைமேல் ஒளிந்துகொண்டாலும்,அங்கே அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன்.+ அவர்கள் என் கண்களிலிருந்து தப்பிக்க கடலுக்கு அடியில் மறைந்துகொண்டாலும்,அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளை கொடுப்பேன்.   எதிரிகள் அவர்களைப் பிடித்துக்கொண்டு போனாலும்,அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளை கொடுப்பேன்.+அவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக அழிப்பதிலேயே குறியாக இருப்பேன்.+   உன்னதப் பேரரசரான பரலோகப் படைகளின் யெகோவா தேசத்தின் மேல்* கை வைப்பார்.அப்போது அது அதிரும்,+ ஜனங்களெல்லாம் புலம்புவார்கள்.+அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.+   ‘பரலோகம்வரை படிக்கட்டுகளைக் கட்டுபவரும்,வானம் என்ற கூரையைப் பூமிமேல் விரிப்பவரும்,கடல்நீரை அள்ளி எடுப்பவரும்,பூமிமேல் அதைப் பொழிய வைப்பவரும்+யெகோவா என்ற பெயர் உள்ளவர்தான்.’+   யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் எனக்கு கூஷ் வம்சத்தாரைப் போலத்தானே இருக்கிறீர்கள்? உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து விடுதலை செய்யவில்லையா?+பெலிஸ்தியர்களை கிரேத்தாவிலிருந்தும்,+ சீரியர்களை கீரிலிருந்தும் கூட்டிக்கொண்டு வரவில்லையா?+   யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவாகிய நான் உன்னதப் பேரரசர். பாவம் நிறைந்த ராஜ்யத்தை என் கண்கள் பார்க்கின்றன.அதை இந்தப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்.+ ஆனால், யாக்கோபின் வம்சத்தாரை அடியோடு அழிக்க மாட்டேன்.+   இதோ! நான் கட்டளை கொடுக்கிறேன்.எல்லா தேசத்தார் மத்தியிலும் இருக்கிற இஸ்ரவேலர்களை உலுக்குவேன்.+ சல்லடையால் சலிப்பதுபோல் அவர்களைச் சலிப்பேன். அப்போது, எல்லா கற்களும் பிடிபடும்.* 10  பாவம் செய்கிற என் ஜனங்கள், “அழிவு எங்களுக்கு வராது, எங்கள் பக்கத்தில்கூட வராது” என்று சொல்கிறார்கள்.ஆனால், அவர்கள் எல்லாரும் வாளால் சாவார்கள்.’ 11  ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*சேதமானவற்றைச் சரிசெய்வேன்.பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+ 12  ஏதோமில் மிச்சம் இருப்பதெல்லாம் அப்போது அவர்களுடைய சொத்தாகும்.+என்னுடைய பெயரால் அழைக்கப்படுகிற எல்லா தேசங்களும் அவர்களுக்குச் சொந்தமாகும்.’ இவற்றைச் செய்கிற யெகோவாவே இதைச் சொல்கிறார். 13  யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வரப்போகிறது.அப்போது, அமோகமான விளைச்சலை அறுவடை செய்வதற்குள் உழுவதற்கான நேரமே வந்துவிடும்.ஏராளமான திராட்சைப் பழங்களைப் பிழிந்து முடிப்பதற்குள் விதைப்பதற்கான நேரமே வந்துவிடும்.+மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+ எல்லா குன்றுகளிலும் அது வழிந்தோடும்.+ 14  சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+ 15  ‘அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்களை நடுவேன்.இனி யாரும் அவர்களை அங்கிருந்து பிடுங்கிப்போட மாட்டார்கள்.நான் கொடுத்த தேசத்திலேயே அவர்கள் குடியிருப்பார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “கல்லறைவரை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “பூமியின் மேல்.”
வே.வா., “ஒரு கல்கூட கீழே விழாது.”
வே.வா., “ஓட்டைகளை அடைப்பேன்.”