உன்னதப்பாட்டு 2:1-17

  • இளம் பெண் (1)

    • “வெறும் காட்டு மலர் நான்”

  • மேய்ப்பன் (2)

    • ‘லில்லிப் பூவைப் போல இருக்கிறாள் என் காதலி’

  • இளம் பெண் (3-14)

    • ‘காதல் ஆசையைத் தட்டியெழுப்பக் கூடாது’ (7)

    • மேய்ப்பனின் வார்த்தைகள் (10ஆ-14)

      • “என் அழகியே, என்னோடு வா” (10ஆ13)

  • இளம் பெண்ணின் சகோதரர்கள் (15)

    • ‘குள்ளநரிக் குட்டிகளைப் பிடித்துக்கொடுங்கள்’

  • இளம் பெண் (16, 17)

    • “என் காதலன் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்” (16)

2  “சமவெளியில்* மலர்ந்த வெறும் காட்டு மலர்* நான்.பள்ளத்தாக்கில் பூத்த சாதாரண* பூ+ நான்.”   “முட்செடிகள் நடுவில் விரிந்த லில்லிப் பூவைப் போலஇளம் பெண்கள் நடுவில் இருக்கிறாள் என் காதலி.”   “காட்டு மரங்கள் மத்தியில் நிற்கும் ஆப்பிள் மரம்போல்இளம் ஆண்கள் மத்தியில் இருக்கிறார் என் காதலன். அவருடைய நிழலில் உட்கார ஏங்கித் தவிக்கிறேன்.அவர் தரும் பழங்கள் என் வாயில் தித்திக்கின்றன.   விருந்து வீட்டுக்கு அவர் என்னை அழைத்து வந்தார்.அவருடைய நேசத்தைக் கொடிபோல் என்மேல் பறக்கவிட்டார்.   நான் காதல் நோயால் தவிக்கிறேன்.உலர்ந்த திராட்சை அடைகள் கொடுத்து எனக்குப் புத்துணர்ச்சியூட்டுங்கள்.+ஆப்பிள் பழங்கள் தந்து எனக்குத் தெம்பூட்டுங்கள்.   அவருடைய இடது கை என் தலையின் கீழ் இருக்கட்டும்.அவருடைய வலது கை என்னை அணைக்கட்டும்.+   எருசலேம் மகள்களே, கலைமான்கள்மேல் ஆணையிட்டுக் கொடுங்கள்!காட்டில் திரியும் பெண் மான்கள்மேல்+ ஆணையிட்டுக் கொடுங்கள்! காதல் ஆசை எனக்குள் தானாகவே மலரும்வரை அதை நீங்கள் தட்டியெழுப்பக் கூடாது.+   என் காதலனின் சத்தம் கேட்கிறது! இதோ! அவர் வருகிறார்.மலைகளில் ஏறி, குன்றுகளில் துள்ளிக்குதித்து வருகிறார்.   என் காதலன் ஒரு கலைமான்!* அவர் ஒரு மான்குட்டி!+ இதோ! அங்கே இருக்கிறார், சுவருக்குப் பின்னால் நிற்கிறார்.ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்க்கிறார்.ஜன்னலின் தட்டி வழியாக உற்றுப் பார்க்கிறார். 10  என் காதலன் என்னிடம் சொல்கிறார்: ‘என் காதலியே, எழுந்து வா.என் அழகியே, என்னோடு வா. 11  இதோ! மழைக்காலம்* முடிந்துவிட்டது. அடைமழையும் அடங்கிவிட்டது. 12  ஊரெங்கும் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.+திராட்சைக் கிளைகளைக் கத்தரிக்கும் காலம் வந்துவிட்டது.+காட்டுப் புறாவின் பாடல் நம் ஊரில் கேட்கிறது.+ 13  அத்தி மரத்தில் முதல் பழங்கள் பழுக்க ஆரம்பித்துவிட்டன.+திராட்சைக் கொடியில் பூக்கள் பூத்து வாசம் வீசுகின்றன. என் காதலியே, எழுந்து வா. என் அழகியே, என்னோடு வா. 14  என் புறாவே, பாறை மறைவிலிருந்து+ என்னைப் பார்.செங்குத்தான பாறை இடுக்கிலிருந்து என்னைப் பார்.உன் அழகிய முகம்+ பார்க்க ஆசைப்படுகிறேன்,உன் இனிய குரல் கேட்கத் துடிக்கிறேன்.’”+ 15  “எங்கள் திராட்சைத் தோட்டங்கள் பூத்துவிட்டன.குள்ளநரிக் குட்டிகள் அவற்றை நாசமாக்குகின்றன.அவற்றைப் பிடித்துக்கொடுங்கள்.” 16  “என் காதலன் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்.+ என்னவர் லில்லிப் பூக்களின் நடுவே ஆடுகளை மேய்க்கிறார்.+ 17  என் காதலனே, தென்றல் வீசுவதற்குள், நிழல் மறைவதற்குள் வாருங்கள்.நம்மைப் பிரித்து நிற்கும் மலைகளில்* துள்ளி வருகிற கலைமான்+ போலவும்,மான்குட்டி போலவும் துள்ளி வாருங்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கடற்கரைச் சமவெளியில்.”
நே.மொ., “குங்குமப்பூ.”
நே.மொ., “லில்லி.”
வே.வா., “நவ்வி மான்.”
வே.வா., “குளிர்காலம்.”
அல்லது, “பிளவுபட்ட மலைகளில்.”