உன்னதப்பாட்டு 4:1-16

  • மேய்ப்பன் (1-5)

    • “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்!” (1)

  • இளம் பெண் (6)

  • மேய்ப்பன் (7-16அ)

    • “என் மணப்பெண்ணே, நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்” (9)

  • இளம் பெண் (16ஆ)

4  “என் அன்பே, நீ எத்தனை அழகானவள்! நீ எத்தனை அழகானவள்! முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் உன் கண்கள் புறாக் கண்கள்.கீலேயாத் மலைகளில்+ இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை உன் கூந்தல்.   மயிர் கத்தரித்தபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறிக் கூட்டம் உன் பற்கள்.அவை எல்லாவற்றுக்குமே இரட்டைக் குட்டிகள் இருக்கின்றன.ஒன்றுகூட குறையாமல் இருக்கின்றன.   சிவப்பு நூல் போன்றவை உன் உதடுகள்.கேட்கக் கேட்கத் திகட்டாதவை உன் வார்த்தைகள். முகத்திரைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உன் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழங்கள்.   உன் கழுத்து,+ அடுக்கடுக்காகக் கற்கள் வைக்கப்பட்டு,ஆயிரம் மாவீரர்களின் வட்டமான கேடயங்களால்+ அலங்கரிக்கப்பட்டு,கம்பீரமாக நிற்கும் தாவீதின் கோபுரத்தைப்+ போன்றது.   உன் இரண்டு மார்புகளும் இரண்டு மான்குட்டிகள்,லில்லிப் பூக்கள் மத்தியில் மேய்கிற கலைமானின்* இரட்டைக் குட்டிகள்.”+   “தென்றல் வீசும் முன்பே, நிழல்கள் மறையும் முன்பே,வெள்ளைப்போள மலைக்கும் சாம்பிராணி குன்றுக்கும் போவேன்.”+   “என் அன்பே, நீ அழகின் மறு உருவம்.+உன்னிடம் குறையே இல்லை.   என் மணப்பெண்ணே, லீபனோனைவிட்டுப் போவோம், வா.நாம் லீபனோனைவிட்டுப் போவோம், வா.+ அமனா,* செனீர், எர்மோன் மலை+ உச்சிகளிலிருந்து இறங்கிப் போவோம், வா.சிங்கங்கள் தங்குகிற இடங்களைவிட்டும், சிறுத்தைகள் நடமாடுகிற மலைகளைவிட்டும் புறப்படுவோம், வா.   என் சகோதரியே, என் மணப்பெண்ணே, நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்.+ஒரே பார்வையில் என் உள்ளத்தைக் கொள்ளையடித்துவிட்டாய்.உன் அட்டிகைப் பதக்கம் ஒன்றாலேயே என்னைக் கவர்ந்துவிட்டாய். 10  என் சகோதரியே, என் மணப்பெண்ணே, நீ பாசத்தைக் காட்டும் அழகே அழகு!+நீ காட்டும் நேசம் திராட்சமதுவைவிட இனிமையானது!+ நீ பூசும் எண்ணெய் நறுமணப் பொருள்களைவிட மணமானது!+ 11  என் மணப்பெண்ணே, உன் இதழ்களில் சுத்தமான தேன் சொட்டுகிறது.+ உன் நாவிலிருந்து பாலும் தேனும் சிந்துகிறது.+உன் உடைகளில் லீபனோனின் மணம் வீசுகிறது. 12  என் சகோதரியே, என் மணப்பெண்ணே, வேலியடைக்கப்பட்ட தோட்டம் நீ.பூட்டி வைக்கப்பட்ட தோட்டம் நீ, மூடி வைக்கப்பட்ட கிணறு நீ. 13  உன் சோலை* மாதுளம்பழங்கள் காய்த்துக் குலுங்குகிற பூஞ்சோலை.அதுமட்டுமா, ருசியான பழங்கள் என்ன! மருதாணிச் செடிகள் என்ன! சடாமாஞ்சிச் செடிகள் என்ன! 14  சடாமாஞ்சி,+ குங்குமப்பூ, வசம்பு,+ லவங்கம்,+சாம்பிராணி மரங்கள், வெள்ளைப்போள மரங்கள், அகில் மரங்கள்+ என எத்தனை, எத்தனை!அவற்றின் வாசனை+ ஆளைத் தூக்குகிறது. 15  தோட்டத்தில் ஊற்றெடுக்கும் நீரூற்று நீ; சுத்தமான தண்ணீர் சுரக்கும் கிணறு நீ.லீபனோனிலிருந்து ஓடிவரும் நீரோடை+ நீ. 16  வடதிசைக் காற்றே, விழித்திடு.தென்திசைக் காற்றே, வந்திடு. என் தோட்டத்தில் தென்றலாய் வீசிடு. அதன் வாசனையைப் பரப்பிடு.” “என் காதலன் அவருடைய தோட்டத்துக்கு வந்து,அதன் ருசியான பழங்களைச் சுவைத்து மகிழட்டும்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “நவ்வி மானின்.”
வே.வா., “கிழக்கு லீபனோன் மலைத்தொடர்.”
அல்லது, “சருமம்.”