எஸ்தர் 10:1-3

  • மொர்தெகாயின் சிறப்பு (1-3)

10  அகாஸ்வேரு ராஜா தன் தேசத்திலும் தீவுகளிலும் இருந்தவர்களைக் கொத்தடிமைகள் போல வேலை செய்ய வைத்தார்.  அவருடைய சாதனைகளும், வீரதீர செயல்களும், அவர் மொர்தெகாய்க்கு+ உயர்ந்த பதவி+ கொடுத்த விவரங்களும் மேதிய பெர்சிய+ ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில்+ பதிவு செய்யப்பட்டுள்ளன.  யூதரான மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தார். அவர் யூதர்களுடைய அபிமானத்தைப் பெற்றார்,* தன் சகோதரர்களுடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதித்தார். அதோடு, தன் ஜனங்களும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் நல்லபடியாக வாழ்வதற்குப் பாடுபட்டார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “யூதர்களால் உயர்வாய்க் கருதப்பட்டார்.”