ஏசாயா 17:1-14

  • தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பு (1-11)

  • தேசங்கள் யெகோவாவினால் கண்டிக்கப்படும் (12-14)

17  தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பு:+ “தமஸ்கு இனி ஒரு நகரமாக இருக்காது.வெறும் இடிபாடுகளாகக் கிடக்கும்.+   ஆரோவேரின் நகரங்கள்+ பாழாய்க் கிடக்கும்.ஆட்டு மந்தைகள்தான் அங்கு படுத்திருக்கும்.அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.   எப்பிராயீமின் மதில் சூழ்ந்த நகரங்களும் தமஸ்குவின் ராஜ்யமும்,இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.+சீரியாவில் மீதியாக இருப்பவர்களின் மேன்மை,இஸ்ரவேலர்களின் மேன்மையைப் போல மறைந்துவிடும்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.   “அந்த நாளில் யாக்கோபின் மகிமை மங்கிவிடும்.அவனுடைய புஷ்டியான உடல் மெலிந்துவிடும்.   ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே+ பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பின்பும்,கதிர்கள் சேகரிக்கப்பட்ட பின்பும் கொஞ்சம் கதிர்கள் மட்டுமே விட்டுவைக்கப்படுவது போலயாக்கோபின் ஜனங்களில் கொஞ்சம் பேரே விட்டுவைக்கப்படுவார்கள்.   உலுக்கப்பட்ட ஒலிவ மரத்தின் உச்சங்கிளையில்இரண்டு மூன்று பழங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது போலவும், கனிதரும் கிளைகளில் நாலைந்து பழங்கள் மட்டுமே எஞ்சியிருப்பது போலவும்,கொஞ்சம் பேர் மட்டும்தான் மீதியாக இருப்பார்கள்”+ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார்.  அந்த நாளில், மனிதன் தன்னைப் படைத்தவரை ஏறெடுத்துப் பார்ப்பான், அவனுடைய கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே நோக்கியிருக்கும்.  அவன் தன் கைகளால் செய்த பலிபீடங்களையும்,+ தன் விரல்களால் செய்த+ பூஜைக் கம்பங்களையும்* தூபபீடங்களையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.   அந்த நாளில், அவனுடைய மதில் சூழ்ந்த நகரங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல்போன காட்டுப் பகுதிபோல் ஆகிவிடும்.+இஸ்ரவேலர்களுக்கு முன்பாக வெட்டிப்போடப்பட்ட கிளைபோல் ஆகிவிடும்.அது பொட்டல் காடாகிவிடும். 10  உன்னை* மீட்கும் கடவுளை நீ மறந்துவிட்டாய்.+உனக்குக் கோட்டை போலவும் கற்பாறை போலவும் இருக்கிறவரை+ நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டாய். அதனால் நீ அழகான தோட்டங்களை அமைத்தாலும்,வேறு தேசத்து* கன்றுகளை நட்டாலும் அவை வளராது. 11  உன் தோட்டத்துக்கு நீ பார்த்துப் பார்த்து வேலி போட்டாலும்,அதில் விதைத்த விதைகள் காலையிலேயே முளைத்தாலும்,நீ நோயிலும் தீராத வலியிலும் தவிக்கும் நாளில் அறுவடையே கிடைக்காது.+ 12  ஏராளமான ஜனங்கள் போடும் கூச்சலைக் கேள்.கடலைப் போல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். தேசத்து ஜனங்களின் இரைச்சலைக் கேள்.பெருங்கடலின் இரைச்சலைப் போல அது இருக்கிறது. 13  பேரலைகளின் இரைச்சலைப் போல ஜனங்கள் சத்தமிடுவார்கள். கடவுள் அவர்களை அதட்டுவார்; அவர்கள் தொலைதூரத்துக்கு ஓடுவார்கள்.மலையிலே காற்றில் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல ஆவார்கள்.புயல்காற்றில் சிக்கிக்கொள்ளும் துரும்பைப் போல ஆவார்கள். 14  சாயங்காலத்தில் பயந்து நடுங்குவார்கள். விடிவதற்குள் இல்லாமல் போவார்கள். நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் கதி இதுதான்.நம்மைச் சூறையாடுபவர்களுக்கு வரும் நிலைமை இதுதான்.

அடிக்குறிப்புகள்

இது எருசலேமைக் குறிக்கிறது.
வே.வா., “பொய் தெய்வத்தின்.”