ஏசாயா 2:1-22

  • யெகோவாவின் மலை உயர்த்தப்படும் (1-5)

    • ஜனங்கள் ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள் (4)

  • யெகோவாவின் நாளில் தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும் (6-22)

2  யூதாவையும் எருசலேமையும் பற்றி ஆமோத்சின் மகனான ஏசாயா பார்த்த தரிசனத்தின் விவரம்.+   கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+   அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+ அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+ ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.+   ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார். அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+ ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+   யாக்கோபின் வம்சத்தாரே, வாருங்கள்.யெகோவா காட்டும் வெளிச்சமான பாதையில் நடப்போம்,+ வாருங்கள்.   கடவுளே, நீங்கள் யாக்கோபின் வம்சத்தாராகிய உங்கள் ஜனங்களைக் கைவிட்டுவிட்டீர்கள்.+ஏனென்றால், கிழக்கே இருக்கிறவர்கள் செய்வதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.பெலிஸ்தியர்களைப் போல மாயமந்திரம் செய்கிறார்கள்.+அவர்களோடு மற்ற தேசத்தாரின் பிள்ளைகள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.   அவர்களுடைய தேசம் வெள்ளியாலும் தங்கத்தாலும் நிறைந்திருக்கிறது.அவர்களுடைய சொத்துகளுக்கு அளவே இல்லை. அவர்களுடைய தேசம் குதிரைகளால் நிறைந்திருக்கிறது.அவர்களுடைய ரதங்களுக்கு அளவே இல்லை.+   அவர்களுடைய தேசம் ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களால் நிறைந்திருக்கிறது.+ அவர்கள் தங்களுடைய கைகளால் செய்த உருவங்களை வணங்குகிறார்கள்.தங்களுடைய விரல்களால் செதுக்கிய சிலைகளைக் கும்பிடுகிறார்கள்.   அதனால், அவர்களுக்குத் தலைகுனிவுதான் வரும்.அவர்களை நீங்கள் மன்னிக்கவே மாட்டீர்கள். 10  யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+பாறைகளுக்குள் மறைந்துகொள்ளுங்கள், குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள். 11  மனிதனின் ஆணவம் அடக்கப்படும்.தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும். அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார். 12  அது பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நாள்.+ அந்த நாள், அகந்தையும் அகம்பாவமும் பிடித்தவர்களுக்கு எதிராகவும்,உயர்ந்தோர், தாழ்ந்தோர் என அத்தனை பேருக்கு எதிராகவும்,+ 13  லீபனோனில் உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களுக்கு எதிராகவும்,பாசானின் கருவாலி மரங்களுக்கு எதிராகவும், 14  உயரமான மலைகளுக்கு எதிராகவும்,உயர்ந்த குன்றுகளுக்கு எதிராகவும், 15  பெரிய கோபுரங்களுக்கு எதிராகவும், கோட்டைச் சுவர்களுக்கு எதிராகவும், 16  தர்ஷீசின் கப்பல்களுக்கு+ எதிராகவும்,அழகான படகுகளுக்கு எதிராகவும் வரும். 17  மனிதனின் ஆணவம் அடக்கப்படும்.தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும். அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார். 18  ஒன்றுக்கும் உதவாத தெய்வங்கள் அடியோடு அழிந்துபோகும்.+ 19  யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,ஜனங்கள் கற்பாறைக் குகைகளிலும், குழிகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.+ 20  அவர்கள் வணங்கிவந்த வெள்ளி, தங்க சிலைகளை அன்று ஒழித்துக்கட்டுவார்கள்.எதற்கும் உதவாத அந்தத் தெய்வங்களைத் தூக்கிப் போடுவார்கள்.மூஞ்சுறுகளும் வவ்வால்களும் தங்குகிற இடங்களில் வீசியெறிவார்கள்.+ 21  யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,அவர்கள் பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் ஒளிந்துகொள்வார்கள். 22  மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்.அவன் வெறும் காற்றைச் சுவாசித்து உயிர்வாழ்கிறான்.* அவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவுரையும்.”
வே.வா., “அவன் வெறும் மூச்சுக்காற்றைப் போல இருக்கிறான்.”