ஏசாயா 20:1-6

  • எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளம் (1-6)

20  சர்கோன் என்ற அசீரிய ராஜா, தர்தானை* அஸ்தோத்துக்கு+ அனுப்பினார். அவன் அதற்கு எதிராகப் போர் செய்து அதைக் கைப்பற்றினான்.+  அந்த வருஷத்தில், ஆமோத்சின் மகனான ஏசாயாவிடம் யெகோவா,+ “நீ போய், உன் இடுப்பில் கட்டியிருக்கும் துக்கத் துணியையும்,* காலில் போட்டிருக்கும் செருப்பையும் கழற்றிவிடு” என்று சொன்னார். ஏசாயா அப்படியே செய்தார்; வெற்று உடம்போடும்* வெறுங்காலோடும் நடமாடிக்கொண்டிருந்தார்.  பின்பு யெகோவா, “என் ஊழியனான ஏசாயா மூன்று வருஷங்களுக்கு வெற்று உடம்போடும் வெறுங்காலோடும் நடமாடிவந்தான். எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும்+ அடையாளமாகவும் இருப்பதற்காக+ அப்படிச் செய்துவந்தான்.  அதுபோலவே, அசீரிய ராஜா எகிப்திலும்+ எத்தியோப்பியாவிலும் உள்ள சிறுவர்களையும் கிழவர்களையும் வெற்று உடம்போடும் வெறுங்காலோடும் மூடப்படாத பிட்டத்தோடும் சிறைபிடித்துக்கொண்டு போவான். அவர்களுடைய நிர்வாணக் கோலம் எகிப்துக்கு மானக்கேடாக இருக்கும்.  எத்தியோப்பியாவை மலைபோல் நம்பியிருந்தவர்களும் எகிப்தைப் பார்த்துப் பெருமைப்பட்டவர்களும் வெட்கப்பட்டுப்போவார்கள், கதிகலங்கிப்போவார்கள்.  அந்த நாளில், கடலோரத்தில் குடியிருக்கிறவர்கள், ‘எகிப்து நம்மை அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றும் என்று நம்பி அங்கு ஓடிப்போனோமே; இப்போது அதற்கு வந்த நிலைமையைப் பாருங்கள்! இனி நாம் எப்படித் தப்பிப்போம்?’ என்று பேசிக்கொள்வார்கள்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “படைத் தளபதியை.”
வே.வா., “வெறுமனே உள்ளாடைகளோடும்.”