ஏசாயா 25:1-12

  • கடவுளுடைய ஜனங்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதங்கள் (1-12)

    • யெகோவா ஏற்பாடு செய்கிற அருமையான திராட்சமது விருந்து (6)

    • இனி மரணம் இருக்காது (8)

25  யெகோவாவே, நீங்கள்தான் என் கடவுள். நான் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன், உங்கள் பெயரைப் புகழ்கிறேன்.நீங்கள் அதிசயங்களைச் செய்திருக்கிறீர்கள்,+பூர்வ காலத்திலிருந்தே செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.+நீங்கள் உண்மையானவர்,+ நம்பகமானவர்!   வேறு தேசத்து ஜனங்களின் நகரத்தை இடித்துப்போட்டீர்கள்.மதில் சூழ்ந்த அந்த நகரத்தைக் கற்குவியலாக மாற்றினீர்கள். கோட்டையாக இருந்த நகரம் தரைமட்டமானது.அது ஒருபோதும் கட்டப்படாது.   பலம்படைத்த தேசத்தார் நீங்கள் செய்ததைப் பார்த்து உங்களை மகிமைப்படுத்துவார்கள்.கொடுமை செய்கிற தேசத்தாரின் நகரம் உங்களுக்குப் பயப்படும்.+   கஷ்டத்தில் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குநீங்கள் கோட்டையாக இருக்கிறீர்கள்.+புயலுக்கு ஒதுங்கும் புகலிடமாகவும்,வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருக்கிறீர்கள்.+ கொடுங்கோலர்களின் கோபம் ஒரு மதிலைத் தாக்குகிற புயலைப் போலவும்,   வறண்ட தேசத்தை வாட்டியெடுக்கிற வெயிலைப் போலவும் இருக்கும்போது,நீங்கள் அவர்களுடைய ஆவேசத்தை அடக்குகிறீர்கள். மேகத்தின் நிழலால் வெயிலைத் தணிப்பது போல,கொடுங்கோலர்களின் ஆட்டம்பாட்டத்தை* அடக்குகிறீர்கள்.   பரலோகப் படைகளின் யெகோவா இந்த மலையில்+ எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்.பிரமாதமான உணவு வகைகளையும்,+அருமையான திராட்சமதுவையும்,மஜ்ஜை நிறைந்த ருசியான பதார்த்தங்களையும்,வடிகட்டிய தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்.   எல்லா ஜனங்கள்மேலும் இருக்கிற முக்காட்டையும்,எல்லா தேசத்தாரையும் மூடியிருக்கிற கம்பளியையும் இந்த மலையிலே அவர் நீக்கிப்போடுவார்.   மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்.+உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.+ தன்னுடைய ஜனங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்த உலகத்திலிருந்தே நீக்கிவிடுவார்.யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.   அந்த நாளில் அவர்கள், “இவர்தான் நம் கடவுள்!+ இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம்.+இவர் நம்மை மீட்பார்.+ இவர்தான் யெகோவா! இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம். இவர் நம்மை மீட்கப்போவதால் சந்தோஷத்தில் துள்ளலாம்”+ என்று சொல்வார்கள். 10  ஏனென்றால், யெகோவாவின் கை அந்த மலையின் மேல் தங்கும்.+எருக்களத்தில் வைக்கோல் மிதிக்கப்படுவது போலமோவாப் அதன் இடத்தில் மிதிக்கப்படும்.+ 11  நீந்துகிறவன் கைகளை ஓங்கி தண்ணீரை அடிப்பது போலஅவர் தன்னுடைய கைகளை ஓங்கி மோவாபை அடிப்பார்.திறமையாக அடித்து வீழ்த்துவார்.அதன் ஆணவத்தை அடக்குவார்.+ 12  உயரமான மதில்கள் சூழ்ந்த நகரத்தைஅவர் கவிழ்த்துப் போடுவார்.அதைத் தரைமட்டமாக்குவார், மண்ணோடு மண்ணாக்குவார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சத்தத்தை.”