ஏசாயா 32:1-20

  • ராஜாவும் அதிபதிகளும் நீதியாக ஆட்சி செய்வார்கள் (1-8)

  • அலட்சியமாக இருக்கிற பெண்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் (9-14)

  • கடவுளுடைய சக்தி பொழியப்படும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (15-20)

32  இதோ, ஒரு ராஜா+ நீதியாக ஆட்சி செய்வார்.+அதிபதிகளும் நியாயமாக ஆட்சி செய்வார்கள்.   அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள்.புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள்.தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள்.+சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்.   பார்வை உள்ளவர்களின் கண்கள் இனி மூடியிருக்காது.கேட்பவர்களின் காதுகள் இனி அடைக்கப்பட்டிருக்காது.   யோசிக்காமல் நடந்துகொள்கிறவர்களின் உள்ளம் இனி உண்மைகளை* பற்றி ஆழமாக யோசிக்கும்.திக்கித்திக்கிப் பேசும் நாவு இனி தெளிவாகவும் சரளமாகவும் பேசும்.+   கெட்ட குணமுள்ளவனை* இனி யாரும் தாராள குணமுள்ளவன் என்று அழைக்க மாட்டார்கள்.நேர்மை இல்லாதவனை இனி யாரும் பெரிய மனிதன் என்று அழைக்க மாட்டார்கள்.   ஏனென்றால், புத்தி இல்லாதவன் அர்த்தமில்லாமல் பேசுவான்.கெட்டது செய்ய உள்ளத்தில் திட்டமிடுவான்.+யெகோவாவைவிட்டு விலகவும்,* அவருக்கு எதிராகப் பொய் பேசவும் விரும்புவான்.பசியில் வாடுபவனுக்குச் சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டான்.தாகத்தில் தவிப்பவனுக்குக் குடிக்க எதுவும் கொடுக்க மாட்டான்.   நேர்மை இல்லாதவனின் வழிகள் மோசமானவை.+வெட்கக்கேடாக நடக்கும்படி மற்றவர்களைத் தூண்டுகிறான்.ஏழை எளியவர்கள் உண்மை பேசினாலும்,பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்கள் வாழ்க்கையை நாசமாக்கப் பார்க்கிறான்.+   ஆனால், தாராள குணமுள்ளவன் தாராளமாகக் கொடுக்கவே நினைக்கிறான்.எப்போதுமே மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறான்.   “அலட்சியமாக இருக்கிற பெண்களே, எழுந்து நான் சொல்வதைக் கேளுங்கள்! கவலையில்லாமல் திரிகிற பெண்களே,+ நான் சொல்வதைக் கவனியுங்கள்! 10  கவலையில்லாமல் திரிகிற நீங்கள் ஒரு வருஷத்துக்குப் பின்பு கதிகலங்கிப்போவீர்கள்.ஏனென்றால், அறுவடைக் காலம் முடிந்தாலும் திராட்சைப் பழங்கள் சேகரிக்கப்பட்டிருக்காது.+ 11  அலட்சியமாக இருக்கிற பெண்களே, பயந்து நடுங்குங்கள்! கவலையில்லாமல் திரிகிறவர்களே, கலக்கம் அடையுங்கள்!உங்களுடைய மேலாடையைக் கழற்றிவிட்டு, துக்கத் துணியை* இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள்.+ 12  செழிப்பான வயல்களுக்கும் திராட்சைத் தோட்டங்களுக்கும் வந்த கதியைப் பாருங்கள்.நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புங்கள். 13  இனி என் ஜனங்களின் நிலத்தில் முட்கள்தான் வளரும்.குதூகலமாக இருந்த நகரத்தையும்சந்தோஷத்தில் களைகட்டியிருந்த வீடுகளையும் முட்புதர்கள்தான் மூடியிருக்கும்.+ 14  ஏனென்றால், கோட்டை கைவிடப்பட்டது.ஜனங்களால் நிறைந்திருந்த நகரம் வெறிச்சோடிப்போனது.+ ஓபேலும்+ காவற்கோபுரமும் நிரந்தரமாகப் பாழாகிப்போனது.அங்கே காட்டுக் கழுதைகள்தான் சந்தோஷமாகத் திரிகின்றன.ஆடுமாடுகள்தான் மேய்கின்றன.+ 15  கடவுள் தன்னுடைய சக்தியை நம்மேல் பொழியும்வரை+ இப்படித்தான் இருக்கும்.அதன்பின் வனாந்தரம் பழத் தோட்டமாக மாறும்.அந்தத் தோட்டம் காடுபோல் அடர்த்தியாகும்.+ 16  வனாந்தரத்தில் நியாயம் குடியிருக்கும்.பழத்தோட்டத்தில் நீதி தங்கியிருக்கும்.+ 17  உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்.+உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்.+ 18  என் ஜனங்கள் சமாதானமான சூழலில் வாழ்வார்கள்.பாதுகாப்பான வீடுகளிலும் நிம்மதியான இடங்களிலும் குடியிருப்பார்கள்.+ 19  ஆனால், ஆலங்கட்டி* மழை காட்டை அழித்துவிடும்.நகரத்தைத் தரைமட்டமாக்கும். 20  தண்ணீர்களின் ஓரமாக விதை விதைக்கிறவர்களும்,காளையையும் கழுதையையும் வயலில் அவிழ்த்துவிடுகிறவர்களும் சந்தோஷமானவர்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அறிவை.”
வே.வா., “புத்தி இல்லாதவனை.”
வே.வா., “விசுவாசதுரோகம் செய்யவும்.”
அதாவது, “பனிக்கட்டி.”