ஏசாயா 39:1-8

  • பாபிலோனிலிருந்து தூதுவர்கள் வருகிறார்கள் (1-8)

39  எசேக்கியா வியாதிப்பட்டு குணமான விஷயத்தை பாபிலோன் ராஜாவும் பலாதானின் மகனுமான மெரொதாக்-பலாதான் கேள்விப்பட்டான். அதனால் கடிதங்களையும் அன்பளிப்பையும் தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து அனுப்பினான்.+  அவர்களை எசேக்கியா சந்தோஷமாக வரவேற்று தன் பொக்கிஷ அறை+ முழுவதையும் காட்டினார். தங்கம், வெள்ளி, பரிமளத் தைலம், விலைமதிப்புள்ள எண்ணெய் வகைகள் ஆகியவற்றையும், ஆயுதக்கிடங்கையும், தான் சேர்த்து வைத்திருந்த மற்ற எல்லாவற்றையும் காட்டினார். தன் அரண்மனையிலும் ராஜ்யத்திலும் இருந்த ஒன்றைக்கூட அவர் காட்டாமல் இருக்கவில்லை.  பின்பு எசேக்கியா ராஜாவிடம் ஏசாயா தீர்க்கதரிசி வந்து, “இந்த ஆட்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “ரொம்பத் தூரத்திலிருக்கிற பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று சொன்னார்.+  அப்போது ஏசாயா, “உங்கள் அரண்மனையில் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “என் அரண்மனையிலிருந்த எல்லாவற்றையும் பார்த்தார்கள். என்னுடைய பொக்கிஷங்களில் ஒன்றைக்கூட நான் காட்டாமல் இருக்கவில்லை” என்றார்.  அப்போது ஏசாயா எசேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.  யெகோவா சொல்வது இதுதான்:+ ‘இதோ! ஒரு காலம் வரும், அப்போது உன் அரண்மனையில் இருக்கிற எல்லா பொருள்களும், இதுவரை உன் முன்னோர்கள் சேர்த்து வைத்த எல்லா பொருள்களும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும், எதுவுமே விட்டுவைக்கப்படாது.+  உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.  அதற்கு எசேக்கியா, “யெகோவா சொன்னது நியாயம்தான். என்னுடைய வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும்* இருக்குமே!” என்றார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உண்மையும்.”