ஏசாயா 43:1-28

  • யெகோவா மறுபடியும் தன் ஜனங்களைக் கூட்டிச்சேர்க்கிறார் (1-7)

  • தெய்வங்கள் விசாரிக்கப்படுகின்றன (8-13)

    • “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்” (1012)

  • பாபிலோனிலிருந்து விடுதலை (14-21)

  • “வா, நாம் வழக்காடலாம்” (22-28)

43  யாக்கோபே, இஸ்ரவேலே,உன்னைப் படைத்தவரும் உருவாக்கியவருமான யெகோவா+ சொல்வது இதுதான்: “பயப்படாதே, நான் உன்னை விடுவித்திருக்கிறேன்.+ உன் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன். நீ எனக்குச் சொந்தமானவன்.   நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன்.+ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது.+ நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது.தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது.   ஏனென்றால், நான் உன் கடவுளாகிய யெகோவா, உன் மீட்பர்.நான் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள். எகிப்தையும் எத்தியோப்பியாவையும் சிபாவையும் மீட்புவிலையாகக் கொடுத்துஉன்னை மீட்டுக்கொண்டேன்.   ஏனென்றால், நீ எனக்குத் தங்கமானவன்.+உன்னைக் கௌரவப்படுத்தினேன்; உன்மேல் அன்பு வைத்தேன்.+ அதனால், தேசங்களையும் ஜனங்களையும் மீட்புவிலையாகக் கொடுத்துஉன் உயிரைக் காப்பாற்றுவேன்.   பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ உன்னுடைய சந்ததியை கிழக்கிலிருந்து கொண்டுவருவேன்.மேற்கிலிருந்து உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்.+   நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களைத் திருப்பி அனுப்பு!’ என்று சொல்வேன்.+ தெற்கைப் பார்த்து, ‘அவர்களைப் பிடித்து வைக்காதே. தூரத்தில் இருக்கிற என் மகன்களையும் பூமியின் எல்லைகளில் இருக்கிற என் மகள்களையும் கூட்டிக்கொண்டு வா.+   என்னுடைய மகிமைக்காக நான் படைத்தவர்களை,என் கையால் உண்டாக்கினவர்களை,+என் பெயரால் அழைக்கப்படுகிற ஜனங்களைக்+ கூட்டிக்கொண்டு வா’ என்று சொல்வேன்.   கண் இருந்தும் குருடாகவும்,காது இருந்தும் செவிடாகவும் இருக்கிற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வா.+   எல்லா தேசங்களும் ஒரு இடத்தில் கூடிவரட்டும்.எல்லா ஜனங்களும் ஒன்றுகூடட்டும்.+ அவர்களில் யாராவது* எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா? ஆரம்ப சம்பவங்களை* யாராவது முன்கூட்டியே சொல்ல முடியுமா?+ அப்படிச் சொல்வதாக இருந்தால் அது உண்மை என்று நிரூபிக்க சாட்சிகளைக் கூட்டிக்கொண்டு வரட்டும்.மற்றவர்களும் அதைக் கேட்டு, ‘இது உண்மைதான்’ என்று சொல்லட்டும்.”+ 10  யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்.+என்னைப் பற்றித் தெரிந்துகொண்டு என்மேல் விசுவாசம்* வைப்பதற்கும்,நான் மாறாதவர் என்று புரிந்துகொள்வதற்கும்+நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே,+ நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய். எனக்கு முன்பும் சரி எனக்குப் பின்பும் சரி,எந்தக் கடவுளும் இருந்ததில்லை.+ 11  நான் யெகோவா,+ என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை.”+ 12  யெகோவா சொல்வது இதுதான்: “பொய் தெய்வங்களை நீங்கள் கும்பிடாமல் இருந்த சமயங்களில் நான் உங்களைக் காப்பாற்றினேன்.+அப்படிக் காப்பாற்றப்போவதாக முன்கூட்டியே சொன்னேன், அதைச் செய்தேன், அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தினேன். நான்தான் கடவுள் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.+ 13  நான் மாறாதவர்.+என் கையிலிருந்து யாராலும் எதையும் பறிக்க முடியாது.+ நான் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.”+ 14  உன்னை விடுவிக்கிறவரும்+ இஸ்ரவேலின் பரிசுத்த கடவுளுமான யெகோவா+ சொல்வது இதுதான்: “உங்களுக்காக நான் பாபிலோனுக்கு ஆட்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போடுவேன்.+கப்பலில் போகிற கல்தேயர்கள் அலறுவார்கள்.+ 15  நான் யெகோவா, உங்களுடைய பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கினவரும்,+ உங்களுடைய ராஜாவும் நான்தான்.”+ 16  யெகோவா கடலைப் பிளந்தவர்.கரைபுரண்டு ஓடுகிற ஆற்றை வற்ற வைத்தவர்.அவற்றைக் கடப்பதற்காக வழியை உண்டாக்கியவர்.+ 17  போர் ரதங்களையும் குதிரைகளையும் வர வைத்தவர்.+பலம்படைத்த வீரர்களின் படையை வர வைத்தவர். அவர் சொல்வது இதுதான்: “அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி விழுந்துகிடப்பார்கள்.+ எரிகிற திரியை அணைப்பதுபோல் அவர்களை நான் அழித்துவிடுவேன்.” 18  “முன்பு நடந்ததை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள்.அதைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருக்காதீர்கள். 19  இப்போது, நான் புதிதாக என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்கள்.+அதை ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டேன். அது உங்களுக்குத் தெரியவில்லையா? நான் வனாந்தரத்தில் ஒரு வழியை உண்டாக்குவேன்.+பாலைவனத்தில் ஆறுகளை ஓட வைப்பேன்.+ 20  நான் தேர்ந்தெடுத்த என் ஜனங்கள்+ குடிப்பதற்காகவனாந்தரத்தில் தண்ணீரை வர வைப்பேன்.பாலைவனத்தில் ஆறுகளை ஓட வைப்பேன்.+அதனால் நரிகளும் நெருப்புக்கோழிகளும்,கொடிய மிருகங்களும்கூட என்னைப் புகழும். 21  என் ஜனங்களை எனக்காகப் படைத்தேன்.அவர்கள் என் புகழைப் பரப்ப வேண்டும் என்பதற்காக அவர்களை உருவாக்கினேன்.+ 22  ஆனால் யாக்கோபே, இஸ்ரவேலே, நீ உதவிக்காக என்னைக் கூப்பிடவில்லை.+ஏனென்றால், என்னை வணங்குவதே உனக்குச் சலிப்பாகிவிட்டது.+ 23  தகன பலி கொடுப்பதற்காகச் செம்மறியாடுகளை நீ கொண்டுவரவில்லை.பலிகளைக் கொடுத்து என்னை மகிமைப்படுத்தவில்லை. எனக்குக் காணிக்கை கொண்டுவரச் சொல்லி உன்னை நான் கட்டாயப்படுத்தவில்லையே.சாம்பிராணி கொண்டுவரச் சொல்லி உன்னை வற்புறுத்தவில்லையே.+ 24  எனக்காக நீ பணம் செலவழித்து வாசனையான வசம்பை வாங்கி வரவில்லை.உன்னுடைய பலிகளின் கொழுப்பைக் கொடுத்து என்னைச் சந்தோஷப்படுத்தவில்லை.+ அதற்குப் பதிலாக, நீ பாவத்துக்குமேல் பாவம்தான் செய்திருக்கிறாய்.அதையெல்லாம் பார்த்து எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.+ 25  நீ செய்த குற்றத்தையெல்லாம் துடைத்து அழிக்கிறவர் நான்தான்;+ என்னுடைய பெயருக்காகத்தான் இதைச் செய்கிறேன்.+நீ செய்த பாவத்தையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன்.+ 26  வா, நாம் ஒருவரோடு ஒருவர் வழக்காடலாம்; எனக்கு ஞாபகப்படுத்து.உன் பக்கம் நியாயம் இருந்தால் அதை நிரூபித்துக் காட்டு. 27  உன்னுடைய முதல் தகப்பன்* பாவம் செய்துவிட்டான்.உன் சார்பாகப் பேசுகிறவர்களும்* என் பேச்சை மீறிவிட்டார்கள்.+ 28  அதனால், ஆலயத்தில் அதிகாரம் செய்துகொண்டு இருக்கிறவர்களை நான் அவமானப்படுத்துவேன்.மற்றவர்கள் யாக்கோபை அழிப்பதற்கும்இஸ்ரவேலைக் கேவலமாகப் பேசுவதற்கும் விட்டுவிடுவேன்.”+

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, எதிர்காலத்தில் முதலாவதாக நடக்கப்போவதைக் குறிக்கலாம்.
அநேகமாக, பொய் தெய்வங்களைக் குறிக்கலாம்.
வே.வா., “நம்பிக்கை.”
அதாவது, “ஆதாம்.”
ஒருவேளை, திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுப்பவர்களைக் குறிக்கலாம்.