ஏசாயா 55:1-13

  • இலவசமாகச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமான அழைப்பு (1-5)

  • யெகோவாவையும் அவருடைய நம்பகமான வார்த்தையையும் தேடுங்கள் (6-13)

    • கடவுளுடைய வழிகள் மனிதர்களுடைய வழிகளைவிட உயர்ந்தவை (8, 9)

    • கடவுளுடைய வார்த்தை நிச்சயம் நிறைவேறும் (10, 11)

55  தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+ பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+   உங்களுடைய பசியைத் தீர்க்காத ஒன்றுக்காக ஏன் பணத்தைச் செலவழிக்கிறீர்கள்?திருப்தி தராத ஒன்றுக்காக ஏன் உங்களுடைய சம்பாத்தியத்தை* வீணாக்குகிறீர்கள்? நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, நல்ல உணவைச் சாப்பிடுங்கள்.+அப்போது, உண்மையிலேயே அருமையான உணவைச் சாப்பிடுவதால் மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.+   உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+   இதோ, ஜனங்களுக்கு அவரை என்னுடைய சாட்சியாக+ நான் ஏற்படுத்தினேன்.ஜனங்களுக்குத் தலைவராகவும்+ அதிகாரியாகவும்+ நியமித்தேன்.   இதோ, முன்பின் தெரியாத ஜனங்களை நீ* அழைப்பாய்.உன்னைப் பற்றித் தெரியாத அந்த ஜனங்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.உன் கடவுளான யெகோவா உனக்குச் செய்வதைப் பார்த்து+ அவர்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுள் உன்னை மேன்மைப்படுத்துவார்.+   வாய்ப்பு இருக்கும்போதே யெகோவாவைத் தேடுங்கள்.+ அவர் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும்போதே அவரைக் கூப்பிடுங்கள்.+   கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+   “ஏனென்றால், என்னுடைய யோசனைகள் வேறு, உங்களுடைய யோசனைகள் வேறு.+உங்களுடைய வழிகள் வேறு, என்னுடைய வழிகள் வேறு” என்று யெகோவா சொல்கிறார்.   “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும்,உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.+ 10  வானத்திலிருந்து பொழிகிற மழையும் பனியும்நிலத்தை நனைத்து, பயிர்களை வளர வைத்து,விதைக்கிறவருக்கு விதையையும் சாப்பிடுகிறவருக்கு உணவையும் தராமல் திரும்பிப் போவதில்லை. 11  அதுபோலவே, என் வாயிலிருந்து வருகிற வார்த்தையும் இருக்கும்.+ அது பலன் தராமல் என்னிடம் திரும்பி வராது.+நான் விரும்புவதை* நிச்சயம் நிறைவேற்றும்.+எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும். 12  அதனால், நீங்கள் சந்தோஷமாகப் புறப்படுவீர்கள்.+சமாதானத்தோடு அழைத்து வரப்படுவீர்கள்.+ அப்போது, மலைகளும் குன்றுகளும் உங்களைப் பார்த்து ஆனந்தமாகப் பாடும்.+காட்டிலுள்ள மரங்களெல்லாம் கைதட்டி உங்களை வரவேற்கும்.+ 13  தேசத்தில் முட்செடிகளுக்குப் பதிலாக ஆபால் மரங்கள் வளரும்.+முட்புதர்களுக்கு* பதிலாக குழிநாவல் மரங்கள் வளரும். இதெல்லாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும்.+என்றென்றும் அழியாத அடையாளமாக இருக்கும்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை.”
அதாவது, “யாக்கோபு அல்லது இஸ்ரவேல்.”
வே.வா., “என் சித்தத்தை.”
நே.மொ., “முள்நிறைந்த காஞ்சொறி செடிகளுக்கு.”