ஏசாயா 60:1-22
60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது.
யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+
2 பூமி இருண்டுபோகும்.தேசங்கள் கும்மிருட்டில் மூழ்கிவிடும்.ஆனால், உன்மேல் யெகோவா பிரகாசிப்பார்.அவருடைய மகிமை உன்மேல் மின்னும்.
3 தேசங்கள் உன்னுடைய வெளிச்சத்திடம் வரும்.+ராஜாக்கள்+ உன்னுடைய பிரகாசமான ஒளியிடம் வருவார்கள்.+
4 கண்களை உயர்த்தி, சுற்றிலும் பார்!
அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, உன்னிடம் வருகிறார்கள்.
உன்னுடைய மகன்கள் தொலைதூரத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.+உன்னுடைய மகள்களும் இடுப்பில் சுமந்து வரப்படுகிறார்கள்.+
5 அப்போது, கடலின் செல்வங்கள் உன்னிடம் கொண்டுவரப்படும்.தேசங்களின் சொத்துகள் உன்னிடம் வந்து சேரும்.+நீ அதைப் பார்த்து பூரித்துப்போவாய்.+உன் இதயம் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.
6 ஒட்டகங்கள் கூட்டம் கூட்டமாக உன் தேசத்துக்கு வரும்.மீதியான், ஏப்பா தேசங்களிலிருந்து+ இளம் ஆண் ஒட்டகங்கள் வரும்.
சேபா தேசத்திலிருந்து ஜனங்கள் வருவார்கள்.அவர்கள் தங்கத்தையும் சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள்.
அவர்கள் யெகோவாவின் புகழைப் பரப்புவார்கள்.+
7 கேதாரின்+ மந்தைகள் உன்னிடம் கொண்டுவரப்படும்.
நெபாயோத்தின்+ செம்மறியாட்டுக் கடாக்கள் உனக்குப் பயன்படும்.
என் பலிபீடத்தில் செலுத்தப்படும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்.+என்னுடைய மகிமையான* வீட்டை அலங்கரிப்பேன்.+
8 மேகங்களைப் போலவும் மாடங்களுக்குப் பறந்து வருகிற புறாக்களைப் போலவும்வருகிற இவர்கள் யார்?
9 தீவுகள் என்மேல் நம்பிக்கை வைக்கும்.+தொலைதூரத்திலிருந்து உன் மகன்களையும்,+வெள்ளியையும் தங்கத்தையும் ஏற்றிக்கொண்டு,தர்ஷீசின் கப்பல்கள் முன்வரிசையில் வருகின்றன.உன் கடவுளும் இஸ்ரவேலின் பரிசுத்தருமான யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்க வருகின்றன.அவர் உன்னை மகிமைப்படுத்துவார்.*+
10 மற்ற தேசத்து ஜனங்கள் உன் மதில்களைக் கட்டுவார்கள்.அவர்களுடைய ராஜாக்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்.+நான் கோபத்தில் உன்னைத் தண்டித்தேன்.ஆனால், இனி பிரியத்தோடு உன்மேல் இரக்கம் காட்டுவேன்.+
11 தேசங்களின் சொத்துகள் உன்னிடம் கொண்டுவரப்படுவதற்காக,உன் வாசல் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்படும்.+அவை ராத்திரி பகலாகப் பூட்டப்படாமல் இருக்கும்.அந்தச் சொத்துகளை ராஜாக்களே முதலில் எடுத்து வருவார்கள்.+
12 உனக்குச் சேவை செய்யாத தேசங்களும் ராஜ்யங்களும் ஒழிந்துபோகும்.அவை அடியோடு அழிக்கப்படும்.+
13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+
14 உன்னைக் கொடுமைப்படுத்திய ஜனங்களின் பிள்ளைகள் உன் முன்னால் வந்து தலைவணங்குவார்கள்.உன்னை மரியாதை இல்லாமல் நடத்துகிறவர்கள் உன் காலடியில் விழ வேண்டும்.அவர்கள் உன்னை யெகோவாவின் நகரம் என்றும்,இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுடைய சீயோன் என்றும் அழைக்க வேண்டும்.+
15 வெறுத்து ஒதுக்கப்பட்ட, வெறிச்சோடிப்போன இடமாக இனி நீ இருக்க மாட்டாய்.+நான் உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்.எல்லா தலைமுறைகளும் உன்னைப் பார்த்து சந்தோஷப்படும்படி செய்வேன்.+
16 குழந்தை அதன் தாயிடமிருந்து பால் குடிப்பது போல,நீ தேசங்களிடமிருந்தும் ராஜாக்களிடமிருந்தும் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்வாய்.+யெகோவாவாகிய நானே உன்னை மீட்கிறவர் என்றும்,யாக்கோபின் வல்லமையுள்ள கடவுளே உன்னை விடுவிக்கிறவர் என்றும் நிச்சயம் புரிந்துகொள்வாய்.+
17 செம்புக்குப் பதிலாகத் தங்கத்தையும்,இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும்,மரத்துக்குப் பதிலாகச் செம்பையும்,கற்களுக்குப் பதிலாக இரும்பையும் நான் கொண்டுவருவேன்.சமாதானத்தை உன் கண்காணியாகவும்,நீதியை உன் மேற்பார்வையாளராகவும் நியமிப்பேன்.+
18 இனி உன் தேசத்தில் வன்முறைச் சம்பவங்களே நடக்காது.உன் எல்லைகளில் நாச வேலையையும் அழிவையும் பற்றிய பேச்சே கேட்காது.+
உன் மதில்களை மீட்பு என்றும்,+ உன் நுழைவாசல்களை புகழ் என்றும் அழைப்பாய்.
19 பகலில் ஒளிதர இனி உனக்குச் சூரியன் தேவை இல்லை.ராத்திரியில் வெளிச்சம்தர இனி சந்திரன் தேவை இல்லை.ஏனென்றால், யெகோவாவே உனக்கு என்றென்றும் ஒளியாக இருப்பார்.+உன் கடவுளே உனக்கு அலங்காரமாக இருப்பார்.+
20 உன்னுடைய துக்க நாட்கள் முடிவுக்கு வரும்.+யெகோவாவே உனக்கு என்றென்றும் ஒளியாக இருப்பார்.+அதனால், உன்னுடைய சூரியன் இனி மறையாது.உன்னுடைய சந்திரனும் தேய்ந்துபோகாது.
21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.
நான் அவர்களை என் கைகளால் நட்டு, துளிர்க்க வைத்தேன்.என்னுடைய புகழுக்காக*+ உருவாக்கினேன்.+
22 கொஞ்சம் பேர் ஆயிரம் பேராகவும்,சாதாரண ஜனங்கள் சக்திபடைத்த தேசமாகவும் ஆவார்கள்.
யெகோவாவாகிய நானே சரியான நேரத்தில் இது வேகமாக நடக்கும்படி செய்வேன்.”