ஏசாயா 61:1-11

  • தேர்ந்தெடுக்கப்பட்டவர் நல்ல செய்தியைச் சொல்வார் (1-11)

    • ‘யெகோவாவின் அனுக்கிரக வருஷம்’ (2)

    • “நீதியின் பெரிய மரங்கள்” (3)

    • மற்ற தேசத்து ஜனங்கள் உதவி செய்வார்கள் (5)

    • “யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள்” (6)

61  உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+ உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,   யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றித் தெரிவிப்பதற்காகவும்,நம் கடவுள் பழிவாங்கப்போகிற நாளைப்+ பற்றி அறிவிப்பதற்காகவும்,துக்கப்படுகிற எல்லாருக்கும் ஆறுதல் சொல்வதற்காகவும்+ அவர் என்னை அனுப்பினார்.   சீயோனுக்காக வருத்தப்படுகிறவர்களின் கோலத்தை மாற்றுவதற்காகஅவர்களுடைய தலையில் உள்ள சாம்பலை நீக்கி, மலர்க் கிரீடத்தைச் சூட்டவும்,சோகத்தைப் போக்கி ஆனந்தத் தைலத்தை ஊற்றவும்,விரக்தியை நீக்கி புகழின் உடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பினார்.யெகோவா தன்னுடைய மகிமைக்காக* நாட்டியநீதியின் பெரிய மரங்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.+   பூர்வ காலத்தில் பாழாக்கப்பட்ட இடங்களை அவர்கள் புதிதாக்குவார்கள்.+இடித்துப் போடப்பட்டதைத் திரும்பக் கட்டுவார்கள்.தலைமுறை தலைமுறையாகச் சிதைந்து கிடக்கிற நகரங்களை+மறுபடியும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவார்கள்.+   “மற்ற தேசத்து ஜனங்கள்+ உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை பார்ப்பார்கள்.+முன்பின் தெரியாதவர்கள் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்.   நீங்களோ யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள் என்றும்,+நம் கடவுளுடைய ஊழியர்கள் என்றும் அழைக்கப்படுவீர்கள். தேசங்களின் வளங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.+அவற்றை* பற்றிப் பெருமையாகப் பேசுவீர்கள்.   கடவுளுடைய ஜனங்கள் அவமானத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.தலைகுனிந்து நிற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குக் கிடைத்த பங்கை நினைத்து சந்தோஷமாகப் பாடுவார்கள். ஏனென்றால், தேசத்தில் இரண்டு மடங்கு சொத்தைப் பெறுவார்கள்.+ என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+   யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன்.+திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.+ அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை உண்மையோடு கொடுப்பேன்.என்றென்றும் நிலைத்திருக்கிற ஒப்பந்தத்தை அவர்களோடு செய்வேன்.+   அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்கள் எல்லா தேசங்களின் மத்தியிலும்,இனங்களின் மத்தியிலும் புகழ் பெற்றிருப்பார்கள்.+ அவர்களைப் பார்க்கிற எல்லாரும்அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற வம்சம்+ என்று புரிந்துகொள்வார்கள்.” 10  நான் யெகோவாவை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவேன். என் கடவுளை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போவேன்.+ ஏனென்றால், மீட்பின் உடையை அவர் எனக்குத் தந்திருக்கிறார்.+நீதியின் சால்வையை எனக்குப் போர்த்தியிருக்கிறார்.தலைப்பாகை அணியும்*+ மணமகனைப் போலவும்,நகைகள் அணியும் மணமகளைப் போலவும் அவர் என்னை அலங்கரித்திருக்கிறார். 11  பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,உன்னதப் பேரரசராகிய யெகோவாநீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சாந்தமானவர்களுக்கு.”
வே.வா., “அபிஷேகம் செய்தார்.”
வே.வா., “உள்ளம் உடைந்தவர்களுக்குக் காயம் கட்டுவதற்காகவும்.”
வே.வா., “அழகுக்காக.”
வே.வா., “அவற்றின் செல்வங்களை.”
நே.மொ., “குருமார்களைப் போல் தலைப்பாகை அணியும்.”