ஏசாயா 63:1-19

  • தேசங்களை யெகோவா பழிவாங்குகிறார் (1-6)

  • கடந்த காலங்களில் யெகோவா காட்டிய மாறாத அன்பு (7-14)

  • மனம் திருந்தியதைத் தெரிவிக்கும் ஜெபம் (15-19)

63  ஏதோமிலிருந்து+ வருகிறவர் யார்?கண்ணைப் பறிக்கும் வண்ண* உடையில் போஸ்றாவிலிருந்து+ வருகிறவர் யார்?கம்பீரமான உடை உடுத்திக்கொண்டு,மகா வல்லமையோடு நடந்து வருகிறவர் யார்? “நீதிநியாயத்தோடு பேசுகிற நான்தான் அவர்.மகா வல்லமையோடு காப்பாற்றுகிறவராகிய நான்தான் அவர்.”   திராட்சரச ஆலையில் திராட்சைகளை மிதிக்கிறவர்களின் உடைகளைப் போலஉங்கள் உடை ஏன் சிவப்பாக இருக்கிறது?+   “நான் தனியாகத் திராட்சரச ஆலையில் மிதித்தேன். யாருமே என்னுடன் இல்லை. நான் அவர்களைக் கோபத்தோடு மிதித்துப்போட்டேன்.அவர்களை ஆக்ரோஷத்தோடு மிதித்து நசுக்கினேன்.+ என் உடைகளில் அவர்களுடைய இரத்தம் தெறித்தது.நான் போட்டிருந்த துணியெல்லாம் கறைபட்டது.   பழிவாங்குவதற்கு நான் ஒரு நாளைத் தீர்மானித்திருக்கிறேன்.+இந்த ஜனங்கள் மீட்கப்படும் வருஷம் நெருங்கிவிட்டது.   நான் தேடிப் பார்த்தேன், உதவி செய்ய யாருமே இல்லை.ஒருவரும் துணைக்கு வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என் கையே என்னை மீட்டது.*+என் கோபமே எனக்குத் துணை செய்தது.   கோபத்தில் மக்களை மிதித்தேன்.என்னுடைய ஆக்ரோஷம் என்ற மதுவைக் குடிக்க வைத்தேன்.+அவர்களுடைய இரத்தத்தைத் தரையிலே ஓட விட்டேன்.”   யெகோவா மாறாத அன்போடு செய்த செயல்களையும்அவருக்குப் புகழ் சேர்க்கும்படி செய்த செயல்களையும் பற்றி நான் சொல்வேன்.ஏனென்றால், யெகோவா இரக்கத்தினாலும் அளவுகடந்த அன்பினாலும்*எங்களுக்காக நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறார்.+இஸ்ரவேல் ஜனங்களுக்காக யெகோவா நிறைய நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்.   “இவர்கள் என்னுடைய ஜனங்கள், என்னுடைய பிள்ளைகள்; இவர்கள் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டார்கள்”+ என்று அவர் சொல்லி, அவர்களுடைய மீட்பரானார்.+   அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்.+ அவருடைய சொந்த தூதுவரையே அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்.+ அன்போடும் கரிசனையோடும் அவர்களை மீட்டுக்கொண்டார்.+பூர்வ காலம் முழுவதும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.+ 10  ஆனால் அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல்,+ அவருடைய சக்தியைத் துக்கப்படுத்தினார்கள்.+ அதனால், அவர் அவர்களுடைய எதிரியாக மாறினார்.+அவர்களோடு போர் செய்தார்.+ 11  அப்போது அவர்கள், அவருடைய ஊழியரான மோசே வாழ்ந்த காலத்தைநினைத்துப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்: “தன்னுடைய மந்தையை மேய்ப்பர்களோடு+ கடல் வழியாக அழைத்து வந்தவர்+ எங்கே? அவருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தவர்+ எங்கே? 12  மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே? 13  ஒரு குதிரை வெட்டவெளியில்* தடைகள் இல்லாமல் நடந்துபோவது போல,ஆழமான கடலின் நடுவேஅவர்களைத் தடைகள் இல்லாமல் நடந்துபோக வைத்தவர் எங்கே? 14  மந்தைகள் சமவெளிக்கு இறங்கிப்போய் அமைதியாக ஓய்வெடுப்பது போல,அவர்களும் அமைதியை அனுபவிப்பதற்கு யெகோவாவின் சக்தி அவர்களை வழிநடத்தியது.”+ உங்கள் பெயருக்கு மகிமை* சேர்ப்பதற்காகஉங்கள் ஜனங்களை இப்படி வழிநடத்தினீர்கள்.+ 15  பரலோகத்திலிருந்து கீழே பாருங்கள்.பரிசுத்தமும் மகிமையும்* நிறைந்த உங்களுடைய உயர்ந்த குடியிருப்பிலிருந்து பாருங்கள். உங்கள் வைராக்கியமும் வல்லமையும் எங்கே?உங்கள் அடிமனதிலிருந்து சுரக்கும் கரிசனையும்+ இரக்கமும்+ எங்கே? அவற்றையெல்லாம் ஏன் காட்டாமல் இருக்கிறீர்கள்? 16  நீங்கள்தான் எங்கள் தகப்பன்.+ஆபிரகாமுக்கு எங்களைத் தெரியாவிட்டாலும்,இஸ்ரவேலுக்கு எங்களை அடையாளம் தெரியாவிட்டாலும்,யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன். பூர்வ காலத்திலிருந்தே நீங்கள்தான் எங்களை விடுவிக்கிறவராக இருக்கிறீர்கள்.+ 17  யெகோவாவே, நாங்கள் உங்களுடைய வழியைவிட்டு விலகிப் போக ஏன் விடுகிறீர்கள்? உங்கள்மேல் பயமே இல்லாதபடி எங்கள் இதயத்தைக் கடினமாக்க ஏன் அனுமதிக்கிறீர்கள்?+ உங்கள் ஊழியர்களுக்காக, உங்கள் சொத்தாகிய ஜனத்துக்காக,மறுபடியும் இரக்கம் காட்டுங்கள்.+ 18  நீங்கள் கொடுத்த தேசத்தை உங்கள் பரிசுத்த ஜனங்கள் கொஞ்சக் காலம் அனுபவித்தார்கள். உங்கள் ஆலயத்தை எதிரிகள் மிதித்துப் போட்டார்கள்.+ 19  ரொம்பக் காலமாக உங்களால் ஆட்சி செய்யப்படாத ஜனங்களைப் போல நாங்கள் ஆகிவிட்டோம்.உங்கள் பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாத ஜனங்களைப் போல ஆகிவிட்டோம்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “கருஞ்சிவப்பு.”
வே.வா., “எனக்கு வெற்றி தேடித் தந்தது.”
வே.வா., “மாறாத அன்பினாலும்.”
வே.வா., “வனாந்தரத்தில்.”
வே.வா., “அழகு.”
வே.வா., “அழகும்.”