சங்கீதம் 100:1-5

  • படைப்பாளருக்கு நன்றி சொல்லுதல்

    • “சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்” (2)

    • ‘கடவுள்தான் நம்மைப் படைத்தார்’ (3)

நன்றி தெரிவிக்கும் சங்கீதம். 100  பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவுக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்யுங்கள்.+   சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.+ சந்தோஷ ஆரவாரத்தோடு அவருடைய சன்னிதிக்கு வாருங்கள்.   யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+   அவருடைய ஆலய வாசல்களுக்குள் வந்து அவருக்கு நன்றி சொல்லுங்கள்.+அவருடைய பிரகாரங்களுக்குள் வந்து அவரைப் புகழுங்கள்.+ அவருக்கு நன்றி சொல்லுங்கள்; அவருடைய பெயரைப் புகழுங்கள்.+   ஏனென்றால், யெகோவா நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறவர்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “நாமே நம்மைப் படைக்கவில்லை.”