சங்கீதம் 103:1-22

  • “என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்”

    • நம்முடைய குற்றங்களைக் கடவுள் தூரமாகத் தூக்கியெறிகிறார் (12)

    • அப்பாபோல் கடவுள் இரக்கம் காட்டுகிறார் (13)

    • நாம் மண் என்பதைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (14)

    • யெகோவாவுடைய சிம்மாசனமும் ஆட்சியும் (19)

    • கடவுளுடைய வார்த்தையைத் தூதர்கள் நிறைவேற்றுகிறார்கள் (20)

தாவீதின் பாடல். 103  என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.எனக்குள் இருக்கும் எல்லாமே அவருடைய பரிசுத்த பெயரைப் புகழட்டும்.   என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.அவர் செய்த எதையும் மறக்காமல் இருக்கட்டும்.+   உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+   உன் உயிரைப் படுகுழியிலிருந்து* காப்பாற்றுகிறார்.+தன்னுடைய மாறாத அன்பினாலும் இரக்கத்தினாலும் உனக்குக் கிரீடம் சூட்டுகிறார்.+   நீ இளமையோடும் கழுகு போலத் துடிப்போடும் இருக்கும்படி,+வாழ்நாளெல்லாம் உன்னை நன்மைகளால் திருப்திப்படுத்துகிறார்.+   அடக்கி ஒடுக்கப்படுகிற எல்லாருக்கும்+யெகோவா நீதி வழங்குகிறார்,+ நியாயம் செய்கிறார்.   அவர் மோசேக்குத் தன்னுடைய வழிகளைத் தெரியப்படுத்தினார்.+இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தன்னுடைய செயல்களைக் காட்டினார்.+   யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.+அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+   அவர் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க மாட்டார்.+என்றென்றும் கோபத்தோடு இருக்க மாட்டார்.+ 10  நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை.+நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.+ 11  ஏனென்றால், பூமியைவிட வானம் எந்தளவு உயர்ந்திருக்கிறதோ,அவருக்குப் பயந்து நடக்கிறவர்களிடம் அவர் காட்டுகிற மாறாத அன்பும் அந்தளவு உயர்ந்திருக்கிறது.+ 12  கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ,அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.+ 13  ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்,யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+ 14  நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார்.+நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.+ 15  அற்ப மனுஷனுடைய நாட்கள் புல்லைப் போல இருக்கின்றன.+வயல்வெளிப் பூவைப் போல அவன் பூக்கிறான்.+ 16  காற்று அடித்தவுடன் அது காணாமல் போகிறது.இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. 17  ஆனால், யெகோவா காட்டுகிற மாறாத அன்புஅவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேல் என்றென்றுமே இருக்கும்.+அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகள்மேல் அவருடைய நீதி தங்கும்.+ 18  அவருடைய ஒப்பந்தத்தின்படி நடக்கிறவர்களின் மேலும்,+அவருடைய ஆணைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்கிறவர்களின் மேலும் அது தங்கும். 19  யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தைப் பரலோகத்தில் உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+ராஜாவாக அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார்.+ 20  யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே,+அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே,+நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள். 21  யெகோவாவின் படைவீரர்களே,+அவருடைய விருப்பத்தை* நிறைவேற்றுகிற ஊழியர்களே,+அவரைப் புகழுங்கள். 22  யெகோவாவின் படைப்புகளே, நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.அவர் ஆளுகிற எல்லா இடங்களிலும் அவரைப் புகழுங்கள். என் முழு ஜீவனும் யெகோவாவைப் புகழட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கல்லறையிலிருந்து.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “சித்தத்தை.”