சங்கீதம் 104:1-35

  • அதிசயமான படைப்புகளுக்காகக் கடவுளைப் புகழ்தல்

    • பூமி ஒருபோதும் அழியாது (5)

    • மனிதனுக்குத் திராட்சமதுவும் உணவும் (15)

    • “உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!” (24)

    • ‘உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போகின்றன’ (29)

104  என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.+ என் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மிகவும் மகத்தானவர்.+ மகத்துவத்தையும்* மேன்மையையும் ஆடைபோல் அணிந்திருப்பவர்.+   ஒளியை உடைபோல் நீங்கள் உடுத்தியிருக்கிறீர்கள்.+வானத்தைக் கூடாரத் துணிபோல் விரித்திருக்கிறீர்கள்.+   அவர் வானத்திலுள்ள தண்ணீர்மேல்விட்டங்களை வைத்துத் தன் மாடி அறைகளைக் கட்டி,+மேகங்களை ரதமாக்கி,+காற்றின் சிறகுகள்மேல் பயணம் செய்கிறார்.+   தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும்,தன்னுடைய ஊழியர்களைத் தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.+   அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.*+அது ஒருபோதும் அசைக்கப்படாது.*+   ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+ மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது.   உங்கள் அதட்டலைக் கேட்டு தண்ணீர் விலகி ஓடியது.+உங்கள் இடிமுழக்கத்தைக் கேட்டு பயந்து ஓடியது.   நீங்கள் ஏற்படுத்திய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.அதனால் மலைகள் உயர்ந்தன,+ பள்ளத்தாக்குகள் இறங்கின.   தண்ணீர் மறுபடியும் இந்தப் பூமியை மூடிவிடாமல் இருப்பதற்காக,அதற்கு எல்லையைக் குறித்தீர்கள்.+ 10  அவர் பள்ளத்தாக்குகளில்* நீரூற்றுகளைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறார்.மலைகளுக்கு நடுவே அவற்றைப் பாய்ந்தோட வைக்கிறார். 11  அவை காட்டு விலங்குகளுக்கெல்லாம் தண்ணீரைக் கொடுக்கின்றன.காட்டுக் கழுதைகளின் தாகத்தைத் தீர்க்கின்றன. 12  அந்த நீரூற்றுகளின் ஓரமாக நிற்கும் மரங்களில் பறவைகள் தங்குகின்றன.அடர்ந்த மரக் கிளைகளில் உட்கார்ந்து பாட்டுப் பாடுகின்றன. 13  அவர் தன்னுடைய மாடி அறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்.+ உங்கள் கைகளின் பலன்களால் பூமி திருப்தியடைகிறது.+ 14  நிலத்திலிருந்து அவர் உணவை விளையச் செய்கிறார்.ஆடுமாடுகளுக்காகப் புல்லையும்,மனிதர்களுக்காகச் செடிகொடிகளையும் முளைக்க வைக்கிறார்.+ 15  மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவையும்,+முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெயையும்,இதயத்துக்குத் தெம்பளிக்க உணவையும் தருகிறார்.+ 16  யெகோவாவின் மரங்கள் தண்ணீரை உறிஞ்சித் திருப்தியடைகின்றன.அவர் நட்டு வைத்த லீபனோனின் தேவதாரு மரங்கள் திருப்தியடைகின்றன. 17  அந்த மரங்களில் பறவைகள் கூடு கட்டுகின்றன. ஆபால் மரங்களில் நாரைகள்+ தங்குகின்றன. 18  உயரமான மலைகளில் வரையாடுகள் வாழ்கின்றன.+மாபெரும் கற்பாறைகளில் கற்பாறை முயல்கள்* தஞ்சம் அடைகின்றன.+ 19  காலங்களைக் குறிப்பதற்கு அவர் சந்திரனைப் படைத்தார்.சூரியனுக்குத் தான் மறைய வேண்டிய நேரம் நன்றாகத் தெரியும்.+ 20  நீங்கள் இருளை வர வைக்கிறீர்கள், இரவும் வருகிறது.+அப்போது, காட்டு விலங்குகளெல்லாம் சுற்றித் திரிகின்றன. 21  இரைக்காக இளம் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன.+கடவுள் தரும் இரையைத் தேடிப்போகின்றன.+ 22  சூரியன் உதித்ததும்,தங்கள் குகைகளில் போய்ப் படுத்துக்கொள்கின்றன. 23  மனிதன் வேலைக்குப் போகிறான்.சாயங்காலம்வரை பாடுபடுகிறான். 24  யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!+ அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள்.+ பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது. 25  பரந்து விரிந்த கடலும் அவற்றில் ஒன்று.சிறியதும் பெரியதுமான கணக்குவழக்கில்லாத உயிரினங்கள் அதில் இருக்கின்றன.+ 26  அதில் கப்பல்கள் போகின்றன.அதில் துள்ளி விளையாடுவதற்காக நீங்கள் படைத்த லிவியாதானும்*+ போகிறது. 27  அவையெல்லாம் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.அந்தந்த நேரத்தில் உணவு தருவீர்களென்று காத்திருக்கின்றன.+ 28  நீங்கள் கொடுக்கும்போது, அவை வாங்கிக்கொள்கின்றன.+ உங்கள் கையைத் திறக்கும்போது, அவை ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் திருப்தியடைகின்றன.+ 29  உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன. அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+ 30  உங்களுடைய சக்தியை அனுப்பும்போது, அவை படைக்கப்படுகின்றன.+நீங்கள் நிலத்தைப் புதுப்பிக்கிறீர்கள். 31  யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவா தன்னுடைய படைப்புகளைப் பார்த்து சந்தோஷப்படுவார்.+ 32  அவர் பூமியைப் பார்த்தவுடன் அது அதிர்கிறது.மலைகளைத் தொட்டவுடன் புகை கிளம்புகிறது.+ 33  வாழ்நாளெல்லாம் நான் யெகோவாவைப் போற்றிப் பாடுவேன்.+உயிருள்ளவரை என் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.*+ 34  என் யோசனைகள் அவருக்குப் பிரியமாக இருக்கட்டும்.* நான் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவேன். 35  பாவிகள் இந்தப் பூமியிலிருந்து மறைந்துபோவார்கள்.பொல்லாதவர்கள் இனி இருக்க மாட்டார்கள்.+ என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும். “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “கண்ணியத்தையும்.”
வே.வா., “அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்படாது.”
வே.வா., “பூமியை அதன் அஸ்திவாரங்கள்மேல் உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குகளில்.”
இவை கற்பாறைகளுக்கு நடுவே வாழ்கிற ஒருவகையான பெரிய முயல்கள்.
வே.வா., “இசை இசைப்பேன்.”
அல்லது, “அவரைப் பற்றி நான் தியானிப்பதெல்லாம் இன்பம் தருவதாக இருக்கட்டும்.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.