சங்கீதம் 105:1-45
-
யெகோவா தன் மக்களிடம் உண்மையோடு நடந்துகொள்கிறார்
-
யெகோவா தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார் (8-10)
-
“நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல் கை வைக்காதீர்கள்” (15)
-
அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பைக் கடவுள் பயன்படுத்துகிறார் (17-22)
-
எகிப்தில் கடவுள் அற்புதங்களைச் செய்கிறார் (23-36)
-
எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் புறப்படுகிறார்கள் (37-39)
-
ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (42)
-
105 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+
2 அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+
3 அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்.+
யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.+
4 யெகோவாவைத் தேடுங்கள்,+ அவரிடம் பலம் கேட்டு வேண்டுங்கள்.
எப்போதும் அவருடைய முகத்தையே* நாடுங்கள்.
5 அவருடைய ஊழியரான ஆபிரகாமின் சந்ததியே,+யாக்கோபின் வம்சமே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே,+
6 அவர் செய்த அதிசயமான செயல்களையும் அற்புதங்களையும்அவர் கொடுத்த நீதித்தீர்ப்புகளையும் நினைத்துப் பாருங்கள்.+
7 அவர்தான் நம் கடவுளாகிய யெகோவா.+
அவருடைய நீதித்தீர்ப்புகள் பூமி முழுவதும் கொடுக்கப்படுகின்றன.+
8 அவர் தன்னுடைய ஒப்பந்தத்தை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறார்.+ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்குத் தந்த வாக்குறுதியை நினைத்துப் பார்க்கிறார்.+
9 ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பார்க்கிறார்.
10 அதை யாக்கோபுக்கு ஓர் ஆணையாகவும்,இஸ்ரவேலுக்கு ஒரு நிரந்தர ஒப்பந்தமாகவும் கொடுத்து உறுதிப்படுத்தினார்.
11 அப்போது, “கானான் தேசத்தைஉனக்குச் சொத்தாகத் தருவேன்”+ என்று சொன்னார்.
12 அந்தச் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்.+கொஞ்சத்திலும் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்.அந்தத் தேசத்தில் அவர்கள் அன்னியர்களாக இருந்தார்கள்.+
13 தேசம் தேசமாக அவர்கள் அலைந்து திரிந்தார்கள்.ராஜ்யம் ராஜ்யமாகச் சுற்றித் திரிந்தார்கள்.+
14 அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை.+ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+
15 “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்.என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்”+ என்று சொன்னார்.
16 தேசத்தில் அவர் பஞ்சத்தைக் கொண்டுவந்தார்.+உணவுப் பொருள்கள் கிடைக்காதபடி செய்தார்.*
17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+
18 அவருடைய கால்களில் விலங்கு போடப்பட்டது.+அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது.
19 யெகோவா தந்த வாக்குறுதி நிறைவேறும்வரை,+அவருடைய வார்த்தைதான் யோசேப்பைப் புடமிட்டது.
20 யோசேப்பை விடுதலை செய்ய ராஜா ஆள் அனுப்பினார்.+மக்களின் தலைவர் அவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார்.
21 அவரைத் தன் அரண்மனைக்கு அதிகாரியாக்கினார்.தன்னுடைய எல்லா சொத்துக்கும் அதிபதியாக நியமித்தார்.+
22 தன்னுடைய எல்லா அமைச்சர்களின் மேலும் அவருக்கு முழு அதிகாரம் கொடுத்தார்.தன்னுடைய பெரியோர்களுக்கு ஞானத்தைப் போதிக்க வைத்தார்.+
23 பின்பு, இஸ்ரவேல் எகிப்துக்கு வந்தார்.+யாக்கோபு ஓர் அன்னியராக காமின் தேசத்தில் வாழ்ந்தார்.
24 கடவுள் தன்னுடைய மக்களை ஏராளமாகப் பெருக வைத்தார்.+அவர்களுடைய எதிரிகளைவிட பலமுள்ளவர்களாக ஆக்கினார்.+
25 பின்பு, அந்த ஆட்கள் மனம் மாறி தன்னுடைய மக்களைப் பகைப்பதற்கும்,தன்னுடைய ஊழியர்களுக்கு எதிராகச் சதி செய்வதற்கும் விட்டுவிட்டார்.+
26 அதன்பின், தன்னுடைய ஊழியரான மோசேயையும்,+தான் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.+
27 அவர்கள் எகிப்தியர்களின் முன்னால் அவருடைய அடையாளங்களைச் செய்தார்கள்.காமின் தேசத்தில் அவருடைய அற்புதங்களைச் செய்தார்கள்.+
28 அவர் இருளை அனுப்பினார், தேசமும் இருண்டுபோனது.+அவர்கள் அவருடைய வார்த்தையை மீறவில்லை.
29 கடவுள் அந்தத் தேசத்தின் தண்ணீரையெல்லாம் இரத்தமாக மாற்றினார்.அதன் மீன்களையெல்லாம் சாகடித்தார்.+
30 தேசம் முழுவதும் தவளைகள் குவிந்தன.+ராஜாவின் அறைகளிலும் புகுந்தன.
31 கொடிய ஈக்களும்* கொசுக்களும்,அவர்களுடைய எல்லா பகுதிகளிலும் படையெடுக்கும்படி அவர் கட்டளை கொடுத்தார்.+
32 மழைக்குப் பதிலாக ஆலங்கட்டிகள்* விழும்படி செய்தார்.தேசத்தை மின்னல்* தாக்கும்படி செய்தார்.+
33 அங்கிருந்த திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் அழித்தார்.எல்லா மரங்களையும் முறித்துப்போட்டார்.
34 வெட்டுக்கிளிகளைப் படையெடுத்து வரச் சொன்னார்.இளம் வெட்டுக்கிளிகளைக் கணக்குவழக்கில்லாமல் வரச் சொன்னார்.+
35 தேசத்திலிருந்த எல்லா செடிகொடிகளையும் அவை விழுங்கின.நிலத்தின் விளைச்சலைத் தின்றுதீர்த்தன.
36 பின்பு, அவர் அந்தத் தேசத்திலிருந்த முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் சாகடித்தார்.+அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.
37 தன்னுடைய மக்களைத் தங்கத்தோடும் வெள்ளியோடும் புறப்பட வைத்தார்.+அவர்களில் ஒருவர்கூட பலவீனமாக இருக்கவில்லை.
38 இஸ்ரவேலர்களை நினைத்து எகிப்தியர்கள் பயந்து நடுங்கியதால்,+அவர்கள் புறப்பட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
39 கடவுள் மேகத்தை ஒரு திரைபோல் விரித்து இஸ்ரவேலர்களைப் பாதுகாத்தார்.+
ராத்திரியில் நெருப்பை அனுப்பி வெளிச்சம் தந்தார்.+
40 அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வர வைத்தார்.+வானத்திலிருந்து உணவு தந்து அவர்களைத் திருப்திப்படுத்தினார்.+
41 கற்பாறையைப் பிளந்து தண்ணீரைப் பாய்ந்தோட வைத்தார்.+அது பாலைவனத்தில் ஆறாய் ஓடியது.+
42 அவர் தன்னுடைய ஊழியரான ஆபிரகாமுக்குக் கொடுத்த பரிசுத்தமான வாக்குறுதியை நினைத்துப் பார்த்தார்.+
43 அதனால், தன்னுடைய மக்களை மிகுந்த சந்தோஷத்தோடு புறப்பட வைத்தார்.+தான் தேர்ந்தெடுத்த ஜனங்களைச் சந்தோஷ ஆரவாரத்தோடு புறப்பட வைத்தார்.
44 மற்ற ஜனங்களின் தேசங்களை அவர்களுக்குக் கொடுத்தார்.+மற்ற தேசத்தாருடைய உழைப்பின் பலனை அவர்கள் அனுபவிக்கும்படி செய்தார்.+
45 தன்னுடைய கட்டளைகளையும் சட்டங்களையும்அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்+ என்பதற்காகவே அப்படிச் செய்தார்.
“யா”வைப் புகழுங்கள்!*
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
^ அல்லது, “அறிவியுங்கள்.”
^ வே.வா., “சன்னிதியையே.”
^ வே.வா., “அபிஷேகம் செய்தவர்கள்மேல்.”
^ நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போட்டார்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.
^ இவை ஒருவகையான கடிக்கும் ஈக்கள்.
^ அதாவது, “பனிக்கட்டிகள்.”
^ வே.வா., “தீ ஜுவாலைகள்.”
^ வே.வா., “அவர்களுடைய ஆண்மையின் முதல் பலன்களை.”
^ வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.