சங்கீதம் 108:1-13

  • எதிரிகளைத் தோற்கடிக்க உதவும்படி செய்யப்படும் ஜெபம்

    • மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் (12)

    • “கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்” (13)

ஒரு பாடல். தாவீதின் சங்கீதம். 108  கடவுளே, நான் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன். நான் முழு மூச்சோடு இசை இசைத்துப் பாடுவேன்.+   நரம்பிசைக் கருவியே, விழித்தெழு! யாழே, நீயும் விழித்தெழு!+ நான் விடியலைத் தட்டி எழுப்புவேன்.   யெகோவாவே, மக்கள் நடுவில் உங்களைப் புகழ்வேன்.தேசங்கள் மத்தியில் உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.*   ஏனென்றால், உங்களுடைய மாறாத அன்பு மகத்தானது.அது வானத்தைப் போல உயர்ந்தது.+உங்களுடைய உண்மைத்தன்மை ஆகாயத்தையே தொடுகிறது.   கடவுளே, உங்களுடைய புகழ் வானத்துக்கும் மேலாக உயரட்டும்.உங்களுடைய மகிமை பூமியெங்கும் பரவட்டும்.+   உங்களுக்குப் பிரியமானவர்கள் விடுவிக்கப்படும்படி,உங்கள் வலது கையால் எங்களைக் காப்பாற்றி, எனக்குப் பதில் கொடுங்கள்.+   பரிசுத்தமான* கடவுள் இப்படிச் சொன்னார்: “நான் சந்தோஷத்தோடு என் ஜனங்களுக்கு சீகேமைச்+ சொத்தாகக் கொடுப்பேன்.சுக்கோத் பள்ளத்தாக்கைப்+ பங்காக அளந்து கொடுப்பேன்.   கீலேயாத்+ என்னுடையது, மனாசேயும் என்னுடையது.எப்பிராயீம் என் தலைக்கவசம்.+யூதா என் அதிகாரக்கோல்.+   மோவாப் நான் பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்.+ ஏதோமின் மேல் என் செருப்பைத் தூக்கியெறிவேன்.+ பெலிஸ்தியாவைத் தோற்கடித்து வெற்றி முழக்கம் செய்வேன்.”+ 10  முற்றுகை போடப்பட்ட நகரத்துக்கு யார் என்னை அழைத்துக்கொண்டு போவார்? ஏதோம்வரை யார் என்னை வழிநடத்துவார்?+ 11  கடவுளே, நீங்கள்தானே இதைச் செய்வீர்கள்?ஆனால், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே!எங்களுடைய படைகளுக்குத் துணையாக வருவதை நிறுத்திவிட்டீர்களே!+ 12  இக்கட்டில் தவிக்கும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+ஏனென்றால், மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.+ 13  கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்.+எங்களுடைய எதிரிகளை அவர் மிதித்துப் போடுவார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “இசை இசைப்பேன்.”
அல்லது, “பரிசுத்தமான இடத்திலிருந்து.”