சங்கீதம் 111:1-10

  • யெகோவாவின் மகத்தான செயல்களுக்காக அவரைப் புகழுங்கள்

    • கடவுளுடைய பெயர் பரிசுத்தமானது, பயபக்திக்குரியது (9)

    • யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானம் (10)

111  “யா”வைப் புகழுங்கள்!*+ א [ஆலெஃப்] நான் யெகோவாவை முழு இதயத்தோடு புகழ்வேன்.+ב [பேத்]நேர்மையானவர்களின் கூட்டத்திலும் சபையிலும் அவரைப் புகழ்வேன். ג [கீமெல்]   யெகோவாவின் செயல்கள் மகத்தானவை.+ד [டாலத்]அவற்றின் மேல் பிரியமாக இருக்கிற எல்லாரும் அவற்றை ஆராய்கிறார்கள்.+ ה [ஹே]   அவருடைய செயல்கள் அற்புதமானவை, அதிசயமானவை.ו [வா]அவருடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+ ז [ஸாயின்]   அவருடைய அருமையான செயல்களை எல்லாருடைய நினைவிலும் அவர் நிறுத்துகிறார்.+ ח [ஹேத்] யெகோவா கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர்.+ ט [டேத்]   தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.+ י [யோத்] தன்னுடைய ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகம் வைத்திருக்கிறார்.+ כ [காஃப்]   மற்ற தேசத்து மக்களின் சொத்துகளைத் தன் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.+ל [லாமெத்]இப்படி, தன்னுடைய செயல்களின் வல்லமையைத் தன் மக்களுக்குக் காட்டியிருக்கிறார். מ [மேம்]   அவருடைய கைகளின் செயல்கள் உண்மையானவை, நியாயமானவை.+נ [நூன்]அவருடைய ஆணைகளெல்லாம் நம்பகமானவை.+ ס [சாமெக்]   அவற்றை எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.ע [ஆயின்]உண்மையும் நீதியும் அவற்றின் அஸ்திவாரம்.+ פ [பே]   அவர் தன்னுடைய மக்களை மீட்டிருக்கிறார்.+ צ [சாதே] தன்னுடைய ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று கட்டளை கொடுத்திருக்கிறார். ק [கோஃப்] அவருடைய பெயர் பரிசுத்தமானது, பயபக்திக்குரியது.+ ר [ரேஷ்] 10  யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கான முதல் படி.+ ש [ஸீன்] அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் மிகுந்த விவேகத்தோடு* நடக்கிறார்கள்.+ ת [ட்டா] அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “கனிவும்.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”