சங்கீதம் 114:1-8

  • இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்

    • கடல் விலகி ஓடியது (5)

    • மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப் போலத் துள்ளின (6)

    • நாணற்புல் நிறைந்த குளமாகப் பாறை மாற்றப்பட்டது (8)

114  இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது,+யாக்கோபின் வம்சத்தார் வேறு மொழி பேசுகிற மக்களைவிட்டுப் புறப்பட்டபோது,   யூதா, கடவுளுடைய பரிசுத்த இடமாக ஆனது.இஸ்ரவேல் அவருடைய ராஜ்யமாக ஆனது.+   கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+யோர்தான் திரும்பி ஓடியது.+   மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப் போலத் துள்ளின.+குன்றுகள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலத் துள்ளின.   கடலே, நீ ஏன் விலகி ஓடினாய்?+ யோர்தானே, நீ ஏன் திரும்பிப்போனாய்?+   மலைகளே, நீங்கள் ஏன் செம்மறியாட்டுக் கடாக்களைப் போலத் துள்ளினீர்கள்?குன்றுகளே, நீங்கள் ஏன் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலத் துள்ளினீர்கள்?   பூமியே, எஜமானுக்கு முன்னால் நடுநடுங்கு.யாக்கோபின் கடவுளுக்கு முன்னால் நடுநடுங்கு.+   பாறையை நாணற்புல் நிறைந்த குளமாக அவர் மாற்றுகிறார்.கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிறார்.+

அடிக்குறிப்புகள்