சங்கீதம் 119:1-176

  • கடவுளுடைய மதிப்புமிக்க வார்த்தைக்கு நன்றியோடு இருத்தல்

    • “இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்?” (9)

    • “உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் மிகவும் விரும்புகிறேன்” (24)

    • “உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” ( 74, 81, 114)

    • “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” (97)

    • “எல்லா போதகர்களையும்விட விவேகமாக” (99)

    • ‘உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்கு’ (105)

    • “சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்” (160)

    • கடவுளுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குச் சமாதானம் (165)

א [ஆலெஃப்] 119  குற்றமற்றவர்களாக வாழ்கிறவர்கள்* சந்தோஷமானவர்கள்.யெகோவாவுடைய சட்டத்தின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+   அவருடைய நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+அவரை முழு இதயத்தோடு தேடுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+   அவர்கள் அநீதி செய்வதே இல்லை.அவர்கள் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.+   கடவுளே, உங்கள் ஆணைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.+   நான் எப்போதும் சரியான வழியில் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+உங்களுடைய விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!   உங்கள் கட்டளைகளுக்கெல்லாம் நான் கவனம் செலுத்தும்போது,எனக்கு எந்த அவமானமும் வராது.+   உங்களுடைய நீதியான தீர்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது,நேர்மையான உள்ளத்தோடு உங்களைப் புகழ்வேன்.   உங்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பேன். என்னை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். ב [பேத்]   இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்? எப்போதும் உங்கள் வார்த்தையின்படி நடக்க ஜாக்கிரதையாக இருப்பதன் மூலமே.+ 10  நான் உங்களை முழு இதயத்தோடு தேடுகிறேன். நான் உங்களுடைய கட்டளைகளைவிட்டு விலகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ 11  நான் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யாதபடி,+உங்கள் வார்த்தையை என் இதயத்தில் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறேன்.+ 12  யெகோவாவே, உங்களுக்குப் புகழ் சேரட்டும்.உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள். 13  நீங்கள் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும்என் வாயால் அறிவிக்கிறேன். 14  விலைமதிப்புள்ள எந்தப் பொருளையும்விட+உங்களுடைய நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு அதிக சந்தோஷத்தைத் தருகின்றன.+ 15  உங்கள் ஆணைகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பேன்.*+உங்கள் வழிகளின் மேல் என் கண்களை வைத்திருப்பேன்.+ 16  உங்களுடைய சட்டதிட்டங்களை நான் மிகவும் விரும்புகிறேன். உங்களுடைய வார்த்தையை மறக்கவே மாட்டேன்.+ ג [கீமெல்] 17  நான் உயிரோடிருந்து, உங்களுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கும்படி,உங்கள் ஊழியனுக்கு அன்பாக உதவுங்கள்.+ 18  உங்கள் சட்டத்திலுள்ள அருமையான விஷயங்களைத் தெளிவாகப் பார்க்கும்படிஎன் கண்களைத் திறந்திடுங்கள். 19  நான் ஒரு அன்னியனாக வாழ்கிறேன்.+ உங்களுடைய கட்டளைகளை எனக்கு மறைக்காதீர்கள். 20  உங்கள் நீதித்தீர்ப்புகளுக்காகஎப்போதும் ஏங்கித் தவிக்கிறேன். 21  அகங்காரம்பிடித்த* ஆட்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்.உங்கள் கட்டளைகளைவிட்டு விலகி, சபிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களைக் கண்டிக்கிறீர்கள்.+ 22  உங்கள் நினைப்பூட்டுதல்களின்படி நான் நடந்திருக்கிறேன்.அதனால், என்னை ஏளனமாகவும் கேவலமாகவும் நடத்த யாரையும் விடாதீர்கள். 23  தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கு எதிராகப் பேசினால்கூட,அடியேன் உங்கள் விதிமுறைகளைப் பற்றித்தான் ஆழமாக யோசிக்கிறேன்.* 24  உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் மிகவும் விரும்புகிறேன்.+அவை எனக்கு ஆலோசகர்கள்போல் இருக்கின்றன.+ ד [டாலத்] 25  நான் மண்ணில் அப்படியே விழுந்து கிடக்கிறேன்.+ நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என் உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 26  என்னுடைய வழிகளைப் பற்றியெல்லாம் உங்களிடம் சொன்னேன், நீங்கள் எனக்கு வழிகாட்டினீர்கள்.உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ 27  உங்கள் ஆணைகளின் அர்த்தத்தை எனக்குப் புரிய வையுங்கள்.அப்போது, உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+ 28  துக்கத்தில் தூக்கம் வராமல் தவிக்கிறேன். நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என்னைப் பலப்படுத்துங்கள். 29  போலியான வாழ்க்கை வாழாதபடி எனக்கு உதவுங்கள்.+கருணையோடு உங்கள் சட்டத்தைக் கற்றுக்கொடுங்கள். 30  உண்மையோடு நடக்க நான் முடிவு செய்திருக்கிறேன்.+ உங்களுடைய நீதித்தீர்ப்புகள் சரியானவை என்பதை உணர்ந்திருக்கிறேன். 31  உங்கள் நினைப்பூட்டுதல்களை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்.+ யெகோவாவே, எனக்கு ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்.*+ 32  நான் உங்களுடைய கட்டளைகளுக்கு ஆர்வத்தோடு கீழ்ப்படிவேன்.*ஏனென்றால், அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு என் இதயத்தைத் திறக்கிறீர்கள்.* ה [ஹே] 33  யெகோவாவே, உங்கள் விதிமுறைகளின்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+நான் கடைசிவரை அவற்றைக் கடைப்பிடிப்பேன்.+ 34  எனக்குப் புரிந்துகொள்ளும் திறனைக் கொடுங்கள்.அப்போது, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பேன், அதற்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிவேன். 35  உங்கள் கட்டளைகளின்படி நடக்க எனக்கு வழிகாட்டுங்கள்.+நான் அவற்றில் பிரியமாக இருக்கிறேன். 36  என் இதயம் என்னுடைய ஆதாயத்தைப் பற்றி யோசிக்காமல்,+உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றியே யோசிக்கும்படி செய்யுங்கள். 37  வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்.+நான் உயிர் பிழைக்கும்படி உங்கள் வழியில் நடத்துங்கள். 38  உங்கள்மேல் பயபக்தி உண்டாகும்படி,அடியேனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.* 39  எந்த அவமானத்தை நினைத்துப் பயப்படுகிறேனோ அதை நீக்கிவிடுங்கள்.ஏனென்றால், உங்கள் நீதித்தீர்ப்புகள் நல்லவை.+ 40  உங்களுடைய ஆணைகளுக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன் என்று பாருங்கள். உங்களுடைய நீதியால் என் உயிரைக் காப்பாற்றுங்கள். ו [வா] 41  யெகோவாவே, நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே,மாறாத அன்பைக் காட்டி,+ என்னை மீட்டுக்கொள்ளுங்கள்.+ 42  அப்போது, என்னை நோகடிக்கிறவனுக்குப் பதிலடி கொடுப்பேன்.ஏனென்றால், உங்கள் வார்த்தையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 43  சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து ஒரேயடியாக எடுத்துவிடாதீர்கள்.ஏனென்றால், உங்கள் நீதித்தீர்ப்புகளையே நான் நம்பியிருக்கிறேன்.* 44  எப்போதும் உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.என்றென்றும் அதன்படி நடப்பேன்.+ 45  நான் பாதுகாப்பான* இடத்தில் நடந்து திரிவேன்.+ஏனென்றால், உங்களுடைய ஆணைகளை ஆர்வமாகத் தேடுகிறேன். 46  உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ராஜாக்களுக்கு முன்னால் பேசுவேன்.அதற்காக வெட்கப்பட மாட்டேன்.+ 47  உங்களுடைய கட்டளைகளை நான் மிகவும் விரும்புகிறேன்.அவற்றை நேசிக்கிறேன்.+ 48  உங்கள் கட்டளைகளை நேசிப்பதால்+ என் கைகளை உயர்த்தி உங்களிடம் வேண்டுவேன்.உங்களுடைய விதிமுறைகளைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+ ז [ஸாயின்] 49  அடியேனுக்குச் சொன்ன வார்த்தையை* நினைத்துப் பாருங்கள்.அதன் மூலம் நீங்கள் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறீர்கள்.* 50  நான் கஷ்டப்படும்போது அதுதான் எனக்கு ஆறுதல் தருகிறது.+உங்கள் வார்த்தை என்னை உயிரோடு காப்பாற்றியிருக்கிறது. 51  அகங்காரம் பிடித்தவர்கள் என்னைப் பயங்கரமாக ஏளனம் செய்கிறார்கள்.ஆனாலும், நான் உங்கள் சட்டத்தைவிட்டு விலகுவதில்லை.+ 52  யெகோவாவே, பழங்காலத்திலிருந்து நீங்கள் கொடுத்திருக்கிற நீதித்தீர்ப்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.+அவை எனக்கு ஆறுதல் தருகின்றன.+ 53  உங்கள் சட்டத்தைவிட்டு விலகிப்போகிற பொல்லாத ஜனங்களைப் பார்க்கும்போது,கோபத்தில் கொதிக்கிறேன்.+ 54  நான் எங்கே குடியிருந்தாலும்,*உங்களுடைய விதிமுறைகளைப் பற்றியே பாடுவேன். 55  யெகோவாவே, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்காக,ராத்திரியில் உங்கள் பெயரை நினைத்துப் பார்க்கிறேன்.+ 56  இதை நான் வழக்கமாகச் செய்துவருகிறேன்.எப்போதும் உங்கள் ஆணைகளின்படி நடந்திருக்கிறேன். ח [ஹேத்] 57  யெகோவாதான் என் பங்கு.+உங்கள் வார்த்தையின்படி நடப்பதாக நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.+ 58  முழு இதயத்தோடு உங்களிடம் வேண்டுகிறேன்.+நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே எனக்குக் கருணை காட்டுங்கள்.+ 59  மறுபடியும் உங்கள் நினைப்பூட்டுதல்களின்படி நடப்பதற்காகஎன் வழிகளை நான் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.+ 60  உங்கள் கட்டளைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிகிறேன்,+கொஞ்சம்கூட தாமதிப்பதில்லை. 61  பொல்லாதவர்களின் கயிறுகள் என்னை இறுக்குகின்றன.ஆனாலும், உங்கள் சட்டத்தை நான் மறப்பதில்லை.+ 62  உங்களுடைய நீதியான தீர்ப்புகளுக்கு நன்றி சொல்லநடுராத்திரியில் எழுந்துகொள்கிறேன்.+ 63  உங்களுக்குப் பயந்து நடக்கிற எல்லாருக்கும் நான் நண்பன்.உங்கள் ஆணைகளின்படி நடக்கிற எல்லாருக்கும் நான் தோழன்.+ 64  யெகோவாவே, இந்தப் பூமி உங்களுடைய மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+உங்களுடைய விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள். ט [டேத்] 65  யெகோவாவே, உங்கள் வார்த்தையின்படி,அடியேனுக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். 66  எனக்கு நல்ல புத்தியையும் அறிவையும் கொடுங்கள்.+ஏனென்றால், உங்கள் கட்டளைகள்மேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 67  முன்பு நான் தவறான வழியில் போய்க்கொண்டிருந்தேன்,* கஷ்டத்தை அனுபவித்தேன்.ஆனால், இப்போது உங்களுடைய வார்த்தையின்படி நடக்கிறேன்.+ 68  நீங்கள் நல்லவர்,+ உங்கள் செயல்களெல்லாம் நல்லவை. உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ 69  அகங்காரம் பிடித்தவர்கள் என்னைப் பற்றிப் பொய்களைப் பரப்புகிறார்கள்.ஆனால், நான் முழு இதயத்தோடு உங்கள் ஆணைகளின்படி நடக்கிறேன். 70  அவர்களுடைய இதயத்தில் உணர்ச்சியே இல்லை.+ஆனால், நான் உங்களுடைய சட்டத்தை மிகவும் விரும்புகிறேன்.+ 71  நான் கஷ்டப்பட்டது நல்லதுதான்.+அதனால்தான் உங்கள் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. 72  ஆயிரக்கணக்கான தங்கக் காசுகளையும் வெள்ளிக் காசுகளையும்விட+நீங்கள் கொடுத்த சட்டம்தான் எனக்கு நல்லது.+ י [யோத்] 73  உங்கள் கைகள் என்னை உண்டாக்கி, என்னை வடிவமைத்தன.உங்கள் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ளும்படி, புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்.+ 74  உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்கள் என்னைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.*+ 75  யெகோவாவே, உங்கள் நீதித்தீர்ப்புகள் நியாயமானவை என்பது எனக்குத் தெரியும்.+நீங்கள் உண்மையுள்ளவராக இருப்பதால்தான் என்னைத் தண்டித்தீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.+ 76  அடியேனுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி,உங்கள் மாறாத அன்பினால்+ தயவுசெய்து என்னை ஆறுதல்படுத்துங்கள். 77  என்மேல் இரக்கம் காட்டி, என்னைத் தொடர்ந்து வாழ வையுங்கள்.+ஏனென்றால், உங்களுடைய சட்டத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.+ 78  அகங்காரம் பிடித்தவர்கள் அவமானம் அடையட்டும்.ஏனென்றால், அவர்கள் காரணமே இல்லாமல்* எனக்குக் கெடுதல் செய்கிறார்கள். ஆனால், நான் உங்கள் ஆணைகளைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+ 79  உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களும்,உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றித் தெரிந்தவர்களும் என்னிடம் திரும்பி வரட்டும். 80  குறை சொல்ல முடியாதளவுக்கு என் இதயம் உங்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கட்டும்.+அப்போது, எனக்கு எந்த அவமானமும் வராது.+ כ [காஃப்] 81  நீங்கள் தருகிற மீட்புக்காக ஏங்கித் தவிக்கிறேன்.+ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.* 82  “நீங்கள் எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்கள்?”+ என்று கேட்கிறேன்.உங்கள் வாக்குறுதி நிறைவேறுவதைப் பார்க்க என் கண்கள் ஏங்குகின்றன.+ 83  புகையில் காய்ந்துபோன தோல் பையைப் போல நான் இருக்கிறேன்.ஆனாலும், உங்கள் விதிமுறைகளை நான் மறப்பதில்லை.+ 84  அடியேன் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் காத்திருக்க வேண்டும்? என்னைக் கொடுமைப்படுத்துகிற ஆட்களுக்கு எப்போது தண்டனை கொடுப்பீர்கள்?+ 85  அகங்காரம் பிடித்தவர்கள் எனக்குக் குழிபறிக்கிறார்கள்.அவர்கள் உங்கள் சட்டத்தை மதிப்பதே இல்லை. 86  உங்களுடைய கட்டளைகள் எல்லாமே நம்பகமானவை. காரணமே இல்லாமல் சிலர் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள், எனக்கு உதவுங்கள்!+ 87  அவர்கள் என்னைக் கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டிவிட்டார்கள்.ஆனாலும், உங்கள் ஆணைகளைவிட்டு நான் விலகவில்லை. 88  நீங்கள் கொடுத்த நினைப்பூட்டுதல்களை நான் கடைப்பிடிக்கும்படி,மாறாத அன்பினால் என் உயிரைக் காப்பாற்றுங்கள். ל [லாமெத்] 89  யெகோவாவே, உங்கள் வார்த்தை வானத்திலேஎன்றென்றும் நிலைத்திருக்கும்.+ 90  நீங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறீர்கள்.+ இந்தப் பூமியை உறுதியாக நிலைநிறுத்தினீர்கள், அது நிலைத்திருக்கிறது.+ 91  உங்களுடைய நீதித்தீர்ப்புகளின்படி அவை* இன்றுவரை நிலைத்திருக்கின்றன.அவையெல்லாம் உங்கள் அடிமைகள். 92  உங்களுடைய சட்டத்தை நான் விரும்பாமல் இருந்திருந்தால்,கஷ்டத்தில் அழிந்தே போயிருப்பேன்.+ 93  உங்கள் ஆணைகளை மறக்கவே மாட்டேன்.ஏனென்றால், அவற்றின் மூலம் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ 94  நான் உங்களுக்குச் சொந்தமானவன்; என்னைக் காப்பாற்றுங்கள்.+ஏனென்றால், உங்கள் ஆணைகளை ஆர்வமாகத் தேடியிருக்கிறேன்.+ 95  பொல்லாதவர்கள் என்னை அழிப்பதற்குக் காத்திருக்கிறார்கள்.ஆனாலும், உங்கள் நினைப்பூட்டுதல்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துகிறேன். 96  நிறைவான எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால், உங்களுடைய கட்டளைகளுக்கு எல்லையே இல்லை. מ [மேம்] 97  உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!+ நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன்.*+ 98  உங்கள் கட்டளைகளை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.அதனால், என்னுடைய எதிரிகளைவிட ஞானமாக நடந்துகொள்கிறேன்.+ 99  உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன்.*அதனால், என்னுடைய எல்லா போதகர்களையும்விட விவேகமாக* நடந்துகொள்கிறேன்.+ 100  உங்களுடைய ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.அதனால், பெரியவர்களைவிட புத்தியோடு* நடந்துகொள்கிறேன். 101  உங்கள் வார்த்தையின்படி நடக்க விரும்புகிறேன்.அதனால், எந்தக் கெட்ட வழிக்கும் போகாமல் இருக்கிறேன்.+ 102  நீங்கள் எனக்குப் போதித்திருப்பதால்,உங்களுடைய நீதித்தீர்ப்புகளைவிட்டு விலகாமல் இருக்கிறேன். 103  உங்கள் வார்த்தைகள் என் வாய்க்கு எவ்வளவு ருசியாக இருக்கின்றன!தேனைவிட எவ்வளவு தித்திப்பாக இருக்கின்றன!+ 104  புத்தியோடு* நடப்பதற்கு உங்கள் ஆணைகள் எனக்கு உதவுகின்றன.+ அதனால்தான் தவறான பாதை எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.+ נ [நூன்] 105  உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும்,என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.+ 106  உங்களுடைய நீதியான தீர்ப்புகளின்படி நடப்பதாக நான் உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். 107  நான் கஷ்டத்தில் தவியாய்த் தவிக்கிறேன்.+ யெகோவாவே, உங்கள் வார்த்தையின்படியே என் உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 108  யெகோவாவே, நான் விருப்பப்பட்டு செலுத்தும் புகழ்ச்சிப் பலியைப் பிரியத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ 109  தினமும் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனாலும், உங்கள் சட்டத்தை நான் மறக்கவில்லை.+ 110  பொல்லாதவர்கள் எனக்கு வலை விரித்திருக்கிறார்கள்.ஆனாலும், உங்களுடைய ஆணைகளை நான் மீறவில்லை.+ 111  உங்கள் நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு நிலையான சொத்து.அவைதான் என் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.+ 112  எல்லா சமயத்திலும், கடைசிவரையிலும்,உங்களுடைய விதிமுறைகளின்படி நடக்க உறுதியாக இருக்கிறேன். ס [சாமெக்] 113  அரை மனதோடு* இருப்பவர்களை வெறுக்கிறேன்.+ஆனால், உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறேன்.+ 114  நீங்கள்தான் என் தஞ்சம், என் கேடயம்.+ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.*+ 115  அக்கிரமக்காரர்களே, என் பக்கத்தில் வராதீர்கள்.+அப்போதுதான், என் கடவுளுடைய கட்டளைகளின்படி என்னால் நடக்க முடியும். 116  கடவுளே, நீங்கள் வாக்குத் தந்தபடியே எனக்கு ஆதரவு கொடுங்கள்.+அப்போதுதான், நான் தொடர்ந்து உயிர்வாழ்வேன்.என்னுடைய நம்பிக்கை வீண்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.+ 117  எனக்கு ஆதரவாக இருங்கள்; அப்போது, நான் காப்பாற்றப்படுவேன்.+உங்கள் விதிமுறைகள்மேல் எப்போதும் கவனமாக இருப்பேன்.+ 118  உங்களுடைய விதிமுறைகளை மீறுகிற எல்லாரையும் நீங்கள் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்.+ஏனென்றால், அவர்கள் பொய்புரட்டிலும் பித்தலாட்டத்திலும் ஊறிப்போயிருக்கிறார்கள். 119  உலகத்திலுள்ள பொல்லாதவர்கள் எல்லாரையும் நீங்கள் வெறும் கசடுபோல் தூக்கிவீசுகிறீர்கள்.+அதனால்தான், உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் நேசிக்கிறேன். 120  உங்களை நினைக்கும்போது பயத்தில் என் உடல் நடுங்குகிறது.உங்களுடைய நீதித்தீர்ப்புகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. ע [ஆயின்] 121  நான் நியாயமாகவும் நீதியாகவும் நடந்திருக்கிறேன்.என்னைக் கொடுமைப்படுத்துகிற ஆட்களின் கையில் என்னைக் கொடுத்துவிடாதீர்கள்! 122  அடியேனுக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுங்கள்.அகங்காரம் பிடித்தவர்கள் என்னைக் கொடுமைப்படுத்தாமல் இருக்கட்டும். 123  உங்களுடைய மீட்புக்காகவும் நீதியான வாக்குறுதிக்காகவும்காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப்போய்விட்டன.+ 124  உங்களுடைய மாறாத அன்பை அடியேனுக்குக் காட்டுங்கள்.+உங்களுடைய விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ 125  நான் உங்கள் ஊழியன்; புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்.+அப்போது, உங்கள் நினைப்பூட்டுதல்களைத் தெரிந்துகொள்வேன். 126  யெகோவாவே, அவர்கள் உங்களுடைய சட்டத்தை மீறிவிட்டார்கள்.நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.+ 127  அதனால்தான், உங்களுடைய கட்டளைகளை நான் நேசிக்கிறேன்.தங்கத்தைவிட, சொக்கத்தங்கத்தைவிட,* அவற்றை அதிகமாக நேசிக்கிறேன்.+ 128  நீங்கள் தருகிற அறிவுரைகள்* ஒவ்வொன்றும் சரியானது என்று நம்புகிறேன்.+தவறான பாதைகள் எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.+ פ [பே] 129  உங்கள் நினைப்பூட்டுதல்கள் அருமையானவை. அதனால்தான் அவற்றைக் கடைப்பிடிக்கிறேன். 130  உங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை நீங்கள் வெளிப்படுத்துவது எங்களுக்கு வெளிச்சத்தைத் தருகிறது.+அனுபவம் இல்லாதவர்களுக்குப் புரிந்துகொள்ளுதலைத் தருகிறது.+ 131  உங்களுடைய கட்டளைகளுக்காக மிகவும் ஏங்குகிறேன்!+அந்த ஏக்கத்தில் வாயைத் திறந்து பெருமூச்சு விடுகிறேன். 132  என் பக்கமாகத் திரும்பி, எனக்குக் கருணை காட்டுங்கள்.+உங்கள் பெயரை நேசிக்கிறவர்களை நியாயமாக நடத்துவது போல என்னையும் நடத்துங்கள்.+ 133  உங்கள் வார்த்தையால் என்னைப் பத்திரமாக நடக்க வையுங்கள்.*கெட்டது எதுவும் என்னை ஆட்டிப்படைக்காமல் இருக்கட்டும்.+ 134  கொடுமைக்காரர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.நான் உங்கள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவேன். 135  அடியேன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்க வையுங்கள்.+உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள். 136  மக்கள் உங்களுடைய சட்டத்தின்படி நடக்காததைப் பார்க்கும்போது,என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.+ צ [சாதே] 137  யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் நியாயமானவை.+ 138  நீங்கள் கொடுக்கிற நினைப்பூட்டுதல்கள் நீதியானவை.அவை முழுக்க முழுக்க நம்பகமானவை. 139  உங்கள்மேல் இருக்கிற பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது.+ஏனென்றால், என் எதிரிகள் உங்கள் வார்த்தைகளை மறந்துவிட்டார்கள். 140  உங்களுடைய வார்த்தை முழுமையாகப் புடமிடப்பட்டிருக்கிறது.+அடியேன் அதை நேசிக்கிறேன்.+ 141  நான் அற்பமானவன், யாரும் என்னை மதிப்பதில்லை.+ஆனாலும், உங்கள் ஆணைகளை நான் மறந்துவிடவில்லை. 142  உங்களுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது.+உங்களுடைய சட்டம் உண்மையானது.+ 143  வேதனையும் கஷ்டமும் எனக்கு வந்தாலும்,உங்களுடைய கட்டளைகளை மிகவும் விரும்புகிறேன். 144  உங்கள் நினைப்பூட்டுதல்கள் என்றென்றும் நீதியானவை. அவற்றைப் புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்,+ அப்போது நான் உயிர்வாழ்வேன். ק [கோஃப்] 145  முழு இதயத்தோடு உங்களிடம் வேண்டுகிறேன். யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள். உங்கள் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன். 146  உங்களைக் கூப்பிடுகிறேன்; என்னைக் காப்பாற்றுங்கள். உங்கள் நினைப்பூட்டுதல்களுக்கு நான் கீழ்ப்படிவேன். 147  உங்களிடம் உதவி கேட்டுக் கெஞ்சுவதற்காகப் பொழுது விடிவதற்கு முன்பே எழுந்துகொண்டேன்.+ஏனென்றால், உங்கள் வார்த்தைகள்தான் என் நம்பிக்கை.* 148  உங்களுடைய வார்த்தையைப் பற்றி ஆழமாய் யோசிப்பதற்காக,*நடுராத்திரியில்கூட விழித்துக்கொள்கிறேன்.+ 149  உங்களுடைய மாறாத அன்பினால் என் வேண்டுதலைக் கேளுங்கள்.+ யெகோவாவே, உங்கள் நியாயத்தின்படி என் உயிரைக் காப்பாற்றுங்கள். 150  வெட்கக்கேடாக நடக்கிறவர்கள் என்னை நெருங்குகிறார்கள்.அவர்கள் உங்களுடைய சட்டத்தைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருக்கிறார்கள். 151  யெகோவாவே, நீங்கள் என் பக்கத்தில் இருக்கிறீர்கள்.+உங்களுடைய கட்டளைகள் எல்லாமே உண்மையானவை.+ 152  உங்களுடைய நினைப்பூட்டுதல்களைப் பற்றி ரொம்பக் காலத்துக்கு முன்பே தெரிந்துகொண்டேன்.அவற்றை என்றென்றும் நிலைத்திருக்கும்படி ஏற்படுத்தினீர்கள் என்று தெரிந்துகொண்டேன்.+ ר [ரேஷ்] 153  நான் படுகிற கஷ்டத்தைப் பாருங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.+ஏனென்றால், உங்கள் சட்டத்தை நான் மறக்கவில்லை. 154  எனக்காக வழக்காடுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.+நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என் உயிரைக் காப்பாற்றுங்கள். 155  பொல்லாதவர்களுக்கு மீட்பு தூரமாக இருக்கிறது.ஏனென்றால், உங்கள் விதிமுறைகளை அவர்கள் தேடவில்லை.+ 156  யெகோவாவே, உங்களுடைய இரக்கம் மிகப் பெரியது.+ உங்களுடைய நியாயத்தின்படி என் உயிரைக் காப்பாற்றுங்கள். 157  நிறைய பேர் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள், எதிர்க்கிறார்கள்.+ஆனாலும், உங்கள் நினைப்பூட்டுதல்களைவிட்டு நான் விலகவில்லை. 158  துரோகிகளை நான் அருவருப்பாகப் பார்க்கிறேன்.ஏனென்றால், அவர்கள் உங்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில்லை.+ 159  உங்களுடைய ஆணைகளை நான் எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்று பாருங்கள். யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பினால் என் உயிரைக் காப்பாற்றுங்கள்.+ 160  சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்.+உங்களுடைய நீதியான தீர்ப்புகளெல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கின்றன. ש [ஸீன்] அல்லது [ஷீன்] 161  காரணமே இல்லாமல் தலைவர்கள் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்.+ஆனாலும், உங்கள் வார்த்தைகளை நான் உயர்வாய் மதிக்கிறேன்.+ 162  உங்களுடைய வார்த்தைகளை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.+ஏராளமான பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தவன் போலச் சந்தோஷப்படுகிறேன். 163  பொய்யை வெறுக்கிறேன், அதை அருவருக்கிறேன்.+ஆனால், உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறேன்.+ 164  உங்களுடைய நீதியான தீர்ப்புகளுக்காக,தினமும் ஏழு தடவை உங்களைப் புகழ்கிறேன். 165  உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு.+எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.* 166  யெகோவாவே, நீங்கள் தரும் மீட்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.உங்கள் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன். 167  உங்கள் நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறேன்.அவற்றை நெஞ்சார நேசிக்கிறேன்.+ 168  உங்களுடைய ஆணைகளையும் நினைப்பூட்டுதல்களையும் கடைப்பிடிக்கிறேன்.நான் செய்கிற எல்லாமே உங்களுக்குத் தெரியும்.+ ת [ட்டா] 169  யெகோவாவே, என்னுடைய கூக்குரல் உங்கள் காதுகளை எட்டட்டும்.+ உங்கள் வார்த்தையின்படி, எனக்கு எல்லாவற்றையும் புரிய வையுங்கள்.+ 170  கருணை கேட்டு நான் செய்யும் ஜெபம் உங்கள் சன்னிதியை எட்டட்டும். நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என்னைக் காப்பாற்றுங்கள். 171  என் உதடுகள் உங்களை அளவில்லாமல் புகழட்டும்.+ஏனென்றால், உங்களுடைய விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். 172  என் நாவு உங்கள் வார்த்தையைப் புகழ்ந்து பாடட்டும்.+ஏனென்றால், உங்களுடைய கட்டளைகள் எல்லாமே நீதியானவை. 173  உங்கள் கை எனக்குத் துணையாக இருக்கட்டும்.+ஏனென்றால், உங்கள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.+ 174  யெகோவாவே, நீங்கள் தருகிற மீட்புக்காக ஏங்குகிறேன்.உங்களுடைய சட்டத்தை மிகவும் விரும்புகிறேன்.+ 175  என்னை வாழ வையுங்கள்; அப்போதுதான், நான் உங்களைப் புகழ முடியும்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும். 176  காணாமல்போன ஆடுபோல் வழிதவறிப் போய்விட்டேன்.+ அடியேனைத் தேடுங்கள்.ஏனென்றால், உங்கள் கட்டளைகளை நான் மறக்கவில்லை.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தங்கள் வழியில் உத்தமமாக நடக்கிறவர்கள்.”
வே.வா., “படிப்பேன்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “படிக்கிறேன்.”
வே.வா., “படிப்பேன்.”
வே.வா., “நான் வெட்கப்பட்டுப்போக விட்டுவிடாதீர்கள்.”
நே.மொ., “கட்டளைகளின் வழியில் ஓடுவேன்.”
அல்லது, “ஏனென்றால், என் இதயத்துக்கு நம்பிக்கை தருகிறீர்கள்.”
அல்லது, “உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.”
வே.வா., “நீதித்தீர்ப்புகளுக்காகவே நான் காத்திருக்கிறேன்.”
வே.வா., “விசாலமான.”
வே.வா., “படிப்பேன்.”
வே.வா., “கொடுத்த வாக்குறுதியை.”
வே.வா., “அதற்காக என்னைக் காத்திருக்க வைத்தீர்கள்.”
வே.வா., “நான் அன்னியனாகக் குடியிருக்கிற வீட்டில்.”
வே.வா., “தெரியாமல் பாவம் செய்துகொண்டிருந்தேன்.”
வே.வா., “உங்களுடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.”
அல்லது, “பொய்களைப் பேசி.”
வே.வா., “படிப்பேன்.”
வே.வா., “உங்களுடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.”
அதாவது, “அவருடைய படைப்புகள் அனைத்தும்.”
வே.வா., “படிக்கிறேன்.”
வே.வா., “படிக்கிறேன்.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலோடு.”
வே.வா., “புரிந்துகொள்ளுதலோடு.”
வே.வா., “இரண்டுபட்ட இதயத்தோடு.”
வே.வா., “உங்களுடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.”
வே.வா., “புடமிடப்பட்ட தங்கத்தைவிட.”
வே.வா., “ஆணைகள்.”
வே.வா., “என் காலடிகளை உறுதிப்படுத்துங்கள்.”
வே.வா., “உங்கள் வார்த்தைகளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.”
வே.வா., “படிப்பதற்காக.”
வே.வா., “எதுவுமே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்காது.”