சங்கீதம் 124:1-8

  • “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்”

    • உடைக்கப்பட்ட கண்ணியிலிருந்து தப்பித்தல் (7)

    • “யெகோவாவின் பெயரே நமக்குத் துணை” (8)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல். 124  “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்,”+ —இஸ்ரவேலர்களே, எல்லாரும் சொல்லுங்கள்—   “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்,+ஆட்கள் நம்மைத் தாக்க வந்தபோது,+   அவர்களுடைய கோபம் நம்மேல் பற்றியெரிந்தபோது,+நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.+   தண்ணீர் நம்மை அடித்துக்கொண்டு போயிருக்கும்.காட்டாறு நம்மேல் புரண்டோடியிருக்கும்.+   பாய்ந்து வரும் வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்.   யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்.ஏனென்றால், எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.   வேடனின் கண்ணியிலிருந்து தப்பித்த பறவைபோல் நாம் இருக்கிறோம்.+கண்ணி உடைக்கப்பட்டது, நாம் தப்பித்தோம்.+   யெகோவாவின் பெயரே நமக்குத் துணை.+வானத்தையும் பூமியையும் படைத்தவர் அவரே.”

அடிக்குறிப்புகள்