சங்கீதம் 125:1-5

  • யெகோவா தன் மக்களைப் பாதுகாக்கிறார்

    • “எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல” (2)

    • “இஸ்ரவேலுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்” (5)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 125  யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள்+அசைக்க முடியாத சீயோன் மலைபோல் இருக்கிறார்கள்.என்றென்றும் நிலைத்திருக்கிற அந்த மலைபோல் இருக்கிறார்கள்.+   எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல,+யெகோவா தன்னுடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.+இன்றும் என்றும் அவர்களைப் பாதுகாப்பார்.   நீதிமான்களுக்கு ஒதுக்கப்பட்ட தேசத்தில் பொல்லாதவர்களின் கொடுங்கோல் நிலைக்காது.+இல்லாவிட்டால், நீதிமான்களும் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.+   யெகோவாவே, நல்லவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.+நேர்மையான நெஞ்சமுள்ளவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.+   குறுக்கு வழியில் போகிறவர்களை யெகோவா அழித்துவிடுவார்.பொல்லாதவர்களோடு சேர்த்து அவர்களை அழித்துவிடுவார்.+ இஸ்ரவேலுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்.

அடிக்குறிப்புகள்