சங்கீதம் 128:1-6

  • யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் சந்தோஷம்

    • மனைவி கனிதருகிற திராட்சைக் கொடி போன்றவள் (3)

    • ‘எருசலேம் செழித்தோங்குவதை நீ பார்ப்பாயாக!’ (5)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 128  யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்.+அவருடைய வழிகளில் நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்.+   உன் கைகளின் கடின உழைப்பால் கிடைத்த பலனை நீ சாப்பிடுவாய். சந்தோஷமாக இருப்பாய், வளமாக வாழ்வாய்.+   உன் வீட்டில் உன் மனைவி கனிதருகிற திராட்சைக் கொடி போல இருப்பாள்.+உன் மேஜையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள் போல இருப்பார்கள்.   இதோ! இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள்தான்யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனுக்குக் கிடைக்கும்.+   யெகோவா உன்னை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். எருசலேம் செழித்தோங்குவதை வாழ்நாளெல்லாம் நீ பார்ப்பாயாக!+   உன் பிள்ளைகளின் பிள்ளைகளை நீ பார்ப்பாயாக! இஸ்ரவேலுக்குச் சமாதானம் கிடைப்பதாக!

அடிக்குறிப்புகள்