சங்கீதம் 129:1-8

  • தாக்கப்பட்டாலும் தோற்கடிக்கப்படுவதில்லை

    • சீயோனை வெறுக்கிறவர்களுக்குத் தலைகுனிவு (5)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். 129  “என் சிறுவயதிலிருந்தே எதிரிகள் என்னைத் தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்”+ —இஸ்ரவேலர்களே, எல்லாரும் சொல்லுங்கள்—   “என் சிறுவயதிலிருந்தே எதிரிகள் என்னைத் தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.+ஆனாலும், அவர்களால் என்னைத் தோற்கடிக்க முடியவில்லை.+   உழுகிறவர்கள் என் முதுகில் உழுது,+நீளமான பள்ளங்களை உண்டாக்கினார்கள்.”   ஆனால், யெகோவா நீதியுள்ளவர்.+பொல்லாதவர்களின் கயிறுகளை அவர் அறுத்துவிட்டார்.+   சீயோனை வெறுக்கிற எல்லாருக்கும் தலைகுனிவு ஏற்படும்.அவர்கள் அவமானத்தில் பின்வாங்குவார்கள்.+   அவர்கள் கூரையில் முளைக்கிற புல்லைப் போல ஆவார்கள்.அது பிடுங்கப்படுவதற்கு முன்பே காய்ந்துபோகும்.   அறுக்கிறவனின் கைக்கு ஒரு பிடிகூட கிடைக்காது.கதிர்க்கட்டுகளைச் சேகரிக்கிறவனின் கைக்கு ஒரு கட்டுகூட சேராது.   வருவோர் போவோர் யாருமே, “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்;யெகோவாவின் பெயரில் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று சொல்ல மாட்டார்கள்.

அடிக்குறிப்புகள்