சங்கீதம் 135:1-21

  • யெகோவா மகத்தானவர் என்பதால் அவரைப் புகழுங்கள்

    • எகிப்துக்கு எதிரான அடையாளங்களும் அற்புதங்களும் (8, 9)

    • “உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது” (13)

    • உயிரில்லாத சிலைகள் (15-18)

135  “யா”வைப் புகழுங்கள்!* யெகோவாவின் பெயரைப் புகழுங்கள்.யெகோவாவின் ஊழியர்களே,+   யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்கிறவர்களே,நம் கடவுளுடைய ஆலயப் பிரகாரங்களில் சேவை செய்கிறவர்களே, அவரைப் புகழுங்கள்.+   “யா”வைப் புகழுங்கள்;* ஏனென்றால், யெகோவா நல்லவர்.+ அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;* ஏனென்றால், அது இனிமையானது.   “யா”* தனக்காக யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.இஸ்ரவேலைத் தன்னுடைய விசேஷ சொத்தாகத் தேர்ந்தெடுத்தார்.+   யெகோவா மகத்தானவர் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.நம் எஜமான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்.+   வானத்திலும் பூமியிலும் கடலிலும் ஆழங்களிலும்யெகோவா தனக்குப் பிரியமான எல்லாவற்றையும் செய்கிறார்.+   பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் அவர் மேகங்களை* எழும்ப வைக்கிறார்.மழையோடு மின்னலை மின்ன வைக்கிறார்.*காற்றைத் தன்னுடைய கிடங்குகளிலிருந்து வீசச் செய்கிறார்.+   எகிப்திலிருந்த மனிதர்களிலும் மிருகங்களிலும்முதல் பிறப்புகளை அவர் கொன்றுபோட்டார்.+   எகிப்தே, உன் நடுவில் அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார்.+பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியர்களுக்கும் எதிராக அவற்றைச் செய்தார்.+ 10  அவர் ஏராளமான தேசங்களை வீழ்த்தினார்.+பலம்படைத்த ராஜாக்களைக் கொன்றுபோட்டார்.+ 11  எமோரியர்களின் ராஜாவான சீகோனையும்+பாசானின் ராஜாவான ஓகையும் கொன்றுபோட்டார்.+கானானிலிருந்த எல்லா ராஜ்யங்களையும் வென்றார். 12  அவர்களுடைய தேசத்தைத் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்தார்,தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்தார்.+ 13  யெகோவாவே, உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவே, உங்களுடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கிறது.+ 14  யெகோவா தன்னுடைய மக்களுக்காக வழக்காடுவார்.*+தன்னுடைய ஊழியர்கள்மேல் கரிசனை காட்டுவார்.+ 15  மற்ற தேசத்தார் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்,மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+ 16  அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது. 17  காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது. அவற்றின் மூக்கில் சுவாசமே இல்லை.+ 18  அவற்றைச் செய்கிற ஆட்களும் அவற்றை நம்புகிற எல்லாரும்அவற்றைப் போலத்தான் ஆவார்கள்.+ 19  இஸ்ரவேல் வம்சத்தாரே, யெகோவாவைப் புகழுங்கள். ஆரோன் வம்சத்தாரே, யெகோவாவைப் புகழுங்கள். 20  லேவி வம்சத்தாரே, யெகோவாவைப் புகழுங்கள்.+ யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைப் புகழுங்கள். 21  யெகோவா சீயோனில் புகழப்படட்டும்.+எருசலேமில் குடிகொண்டிருக்கிறவர் புகழப்படட்டும்.+ “யா”வைப் புகழுங்கள்!*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “நீராவியை.”
அல்லது, “மழைக்கு மதகுகளை வைக்கிறார்.”
வே.வா., “மக்களைப் பாதுகாப்பார்.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.