சங்கீதம் 140:1-13

  • யெகோவா, பலம்படைத்த மீட்பர்

    • அக்கிரமக்காரர்கள் பாம்புகளைப் போல இருக்கிறார்கள் (3)

    • வன்முறைக்காரர்கள் அழிவார்கள் (11)

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். 140  யெகோவாவே, அக்கிரமம் செய்கிற ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.வன்முறையில் இறங்குகிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+   அவர்கள் தங்களுடைய உள்ளத்தில் சதி செய்கிறார்கள்.+நாள் முழுவதும் சண்டையைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.   பாம்பின் நாக்கைப் போலத் தங்களுடைய நாக்கைக் கூர்மையாக்குகிறார்கள்.+அவர்களுடைய உதடுகளின் பின்னால் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.+ (சேலா)   யெகோவாவே, பொல்லாதவர்களின் கையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+வன்முறையில் இறங்குகிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.என்னை விழ வைக்க அவர்கள் திட்டம் போடுகிறார்கள்.   பெருமை பிடித்தவர்கள் எனக்குப் பொறி வைக்கிறார்கள்.கயிறுகளால் என் பாதையில் வலை விரிக்கிறார்கள்.+ என்னைப் பிடிக்க கண்ணிகளை வைக்கிறார்கள்.+ (சேலா)   நான் யெகோவாவிடம், “நீங்கள்தான் என் கடவுள். யெகோவாவே, உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்”+ என்று வேண்டுகிறேன்.   உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, பலம்படைத்த மீட்பரே,போர் நாளில் என் தலைக்குக் கவசமாக இருக்கிறீர்கள்.+   யெகோவாவே, பொல்லாதவர்களின் ஆசைகளை நிறைவேற்றாதீர்கள். கர்வம் அவர்களுடைய தலைக்கேறாதபடி, அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடியுங்கள்.+ (சேலா)   என்னைச் சுற்றியிருக்கிறவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசினார்கள்.அவர்கள் பேசியதெல்லாம் அவர்கள் தலையிலேயே வந்து விடியட்டும்.+ 10  நெருப்புத் தணல்கள் அவர்கள்மேல் விழட்டும்.+ அவர்கள் நெருப்பில் வீசப்படட்டும்.மறுபடியும் எழுந்துவர முடியாதபடி ஆழ்கிணற்றுக்குள்+ தள்ளப்படட்டும். 11  இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிந்துபோகட்டும்.+ வன்முறைக்காரர்களைத் தீமை துரத்திப்பிடித்து, அழித்துப்போடட்டும். 12  எளியவர்களுக்காக யெகோவா வழக்காடுவார்.ஏழைகளுக்கு நியாயம் செய்வார்;+ இது எனக்கு நன்றாகத் தெரியும். 13  நீதிமான்கள் நிச்சயமாகவே உங்களுடைய பெயருக்கு நன்றி சொல்வார்கள்.நேர்மையானவர்கள் உங்கள் முகத்துக்கு முன்னால்* குடியிருப்பார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “உங்கள் சன்னிதியில்.”