சங்கீதம் 149:1-9

  • கடவுளின் வெற்றியைப் புகழும் பாடல்

    • யெகோவா தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார் (4)

    • கடவுளுக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு பெருமை (9)

149  “யா”வைப் புகழுங்கள்!* யெகோவாவுக்காகப் புதிய பாடலைப் பாடுங்கள்.+உண்மையுள்ளவர்களின்* சபையில் அவரைப் புகழுங்கள்.+   இஸ்ரவேல் தன்னுடைய மகத்தான படைப்பாளரை+ நினைத்து சந்தோஷப்படட்டும்.சீயோனின் பிள்ளைகள் தங்கள் ராஜாவை நினைத்து மகிழ்ச்சி அடையட்டும்.   அவர்கள் ஆடிப்பாடி அவருடைய பெயரைப் புகழட்டும்.+கஞ்சிராவையும் யாழையும் இசைத்து அவரைப் புகழ்ந்து பாடட்டும்.+   யெகோவா தன்னுடைய மக்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+ தாழ்மையானவர்களை* மீட்பினால் அலங்கரிக்கிறார்.+   உண்மையுள்ளவர்கள்* தங்களுக்குக் கிடைக்கும் மகிமையினால் பூரித்துப்போகட்டும்.தங்கள் படுக்கைகளில் சந்தோஷ ஆரவாரம் செய்யட்டும்.+   கடவுளை அவர்கள் வாயாரப் புகழ்ந்து பாடட்டும்.இரண்டு பக்கமும் கூர்மையான வாளைக் கையில் எடுக்கட்டும்.   ஏனென்றால், அவர்கள் மற்ற தேசங்களைப் பழிவாங்க வேண்டும்.மற்ற ஜனங்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.   அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளால் கட்ட வேண்டும்.அவர்களுடைய தலைவர்களுக்கு இரும்பு விலங்குகளை மாட்ட வேண்டும்.   அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்.+இந்தப் பெருமை கடவுளுக்கு உண்மையாக* இருக்கிற எல்லாருக்கும் கொடுக்கப்படும். “யா”வைப் புகழுங்கள்!*

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “பற்றுமாறாதவர்களின்.”
வே.வா., “சாந்தமானவர்களை.”
வே.வா., “பற்றுமாறாதவர்கள்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.