சங்கீதம் 150:1-6

  • சுவாசமுள்ள எல்லா உயிர்களும் ‘யா’வைப் புகழட்டும்

    • ‘யா’வைப் புகழுங்கள்! (1, 6)

150  “யா”வைப் புகழுங்கள்!*+ அவருடைய பரிசுத்த ஆலயத்தில் அவரைப் புகழுங்கள்.+ அவருடைய பலத்துக்கு அத்தாட்சியான ஆகாயவிரிவிலே அவரைப் புகழுங்கள்.+   அவருடைய மகத்தான செயல்களுக்காக அவரைப் புகழுங்கள்.+ அவருடைய எல்லையில்லாத மகத்துவத்துக்காக அவரைப் புகழுங்கள்.+   ஊதுகொம்பை ஊதி அவரைப் புகழுங்கள்.+ நரம்பிசைக் கருவியையும் யாழையும் இசைத்து அவரைப் புகழுங்கள்.+   கஞ்சிராவைத் தட்டியும்,+ நடனமாடியும்* அவரைப் புகழுங்கள். யாழை+ மீட்டியும், புல்லாங்குழலை+ ஊதியும் அவரைப் புகழுங்கள்.   மெல்லிய ஓசை எழுப்பும் ஜால்ராக்களால் அவரைப் புகழுங்கள். பேரோசை எழுப்பும் ஜால்ராக்களால் அவரைப் புகழுங்கள்.+   சுவாசமுள்ள எல்லா உயிர்களுமே “யா”வைப் புகழட்டும். “யா”வைப் புகழுங்கள்!*+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
வே.வா., “வட்டமாக நடனமாடியும்.”
வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.