சங்கீதம் 17:1-15

  • பாதுகாப்புக்காக ஜெபம்

    • “என் இதயத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள்” (3)

    • “உங்களுடைய சிறகுகளின் நிழலில்” (8)

தாவீதின் ஜெபம். 17  யெகோவாவே, நியாயம் கேட்டு நான் முறையிடுவதைக் கேளுங்கள்.உதவிக்காக நான் கதறுவதைக் கவனியுங்கள்.கள்ளம்கபடம் இல்லாமல் நான் செய்கிற ஜெபத்தைக் கேளுங்கள்.+   எனக்கு நியாயமான தீர்ப்பு கொடுங்கள்.+உங்களுடைய கண்கள் நேர்மையானதைப் பார்க்கட்டும்.   நீங்கள் என் இதயத்தை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள், ராத்திரியில் என்னைச் சோதித்துப் பார்த்திருக்கிறீர்கள்.+என்னைப் புடமிட்டிருக்கிறீர்கள்.+நான் எந்தச் சதித்திட்டமும் தீட்டவில்லை என்றும்,என் வாயால் பாவம் செய்யவில்லை என்றும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.   மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி,நான் உங்களுடைய வார்த்தையின்படியே,திருடர்களின் பாதைகளில் போகாமல் இருப்பேன்.+   உங்களுடைய பாதைகளிலேயே நடக்க எனக்கு உதவி செய்யுங்கள்.அப்போதுதான் என் கால்கள் தடுமாறாமல் இருக்கும்.+   கடவுளே, நீங்கள் எனக்குப் பதில் சொல்வீர்கள். அதனால்தான் உங்களைக் கூப்பிடுகிறேன்.+ நான் பேசுவதைக் கேளுங்கள், காதுகொடுத்து* கேளுங்கள்.+   உங்களுடைய வலது பக்கத்தில் தஞ்சம் தேடி வருகிறவர்களை மீட்கிறவரே,உங்களை எதிர்க்கிற ஆட்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறவரே,அற்புதமான விதத்தில் உங்களுடைய மாறாத அன்பைக் காட்டுங்கள்.+   கண்மணிபோல் என்னைப் பார்த்துக்கொள்ளுங்கள்.+உங்களுடைய சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளுங்கள்.+   என்னைத் தாக்குகிற பொல்லாத ஆட்களிடமிருந்தும்,என்னைக் கொல்வதற்காகவே சுற்றிவளைக்கிற எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள்.+ 10  அவர்கள் கல்நெஞ்சக்காரர்களாக ஆகிவிட்டார்கள்.அவர்கள் அகம்பாவத்தோடு பேசுகிறார்கள். 11  இப்போது எங்களைச் சுற்றிவளைத்துக்கொண்டார்கள்.+எங்களை வீழ்த்துவதற்கு* சந்தர்ப்பம் தேடுகிறார்கள். 12  அவர்கள் ஒவ்வொருவரும், கடித்துக் குதறுவதற்குக் காத்திருக்கிற சிங்கத்தைப் போல இருக்கிறார்கள்.பதுங்கியிருக்கிற இளம் சிங்கத்தைப் போல இருக்கிறார்கள். 13  யெகோவாவே, எழுந்து வாருங்கள், நேருக்குநேர் மோதி அவர்களை வீழ்த்துங்கள்.+உங்களுடைய வாளால் பொல்லாதவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். 14  யெகோவாவே, உங்கள் கையால் என்னை இந்த உலக ஆட்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.அவர்கள் இந்த உலக வாழ்க்கையையே முக்கியமென நினைக்கிறார்கள்.+நீங்கள் தருகிற நல்ல நல்ல காரியங்களை+ அனுபவித்துவிட்டு,தங்கள் பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுவிட்டுப் போகிறார்கள். 15  ஆனால் நான் நீதிமானாக இருப்பதால், உங்களுடைய முகத்தைப் பார்ப்பேன்.உங்கள் முன்னிலையில் கண் விழிப்பது* எனக்கு மனநிறைவு தருகிறது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “குனிந்து.”
வே.வா., “தரையில் தள்ளுவதற்கு.”
வே.வா., “உங்களுடைய சாயலைப் பார்ப்பது.”