சங்கீதம் 30:1-12

  • துக்கம் சந்தோஷமாக மாறியது

    • கடவுளுடைய கருணை ஆயுள் முழுக்க நீடிக்கும் (5)

வீட்டின் திறப்பு விழாவின்போது தாவீது பாடிய சங்கீதம். 30  யெகோவாவே, நீங்கள் என்னைக் கைதூக்கிவிட்டதால் உங்களை மகிமைப்படுத்துவேன்.எதிரிகள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க நீங்கள் விடவில்லை.+   என் கடவுளாகிய யெகோவாவே, உதவிக்காக உங்களிடம் கெஞ்சினேன். நீங்கள் என்னைக் குணப்படுத்தினீர்கள்.+   யெகோவாவே, கல்லறையிலிருந்து என்னைக் கைதூக்கிவிட்டீர்கள்.+ என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; சவக்குழியில் புதைந்துவிடாமல் என்னைப் பாதுகாத்தீர்கள்.+   யெகோவாவுக்கு உண்மையோடு* இருப்பவர்களே, அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+அவருடைய பரிசுத்தமான பெயருக்கு+ நன்றி சொல்லுங்கள்.   ஏனென்றால், அவருடைய கோபம் ஒரு நொடிதான் நீடிக்கும்.+ஆனால், அவருடைய கருணை* ஆயுள் முழுக்க நீடிக்கும்.+ சாயங்காலத்தில் அழுகை இருந்தாலும், காலையில் சந்தோஷ ஆரவாரம் உண்டாகும்.+   நான் நிம்மதியாக இருந்த காலத்தில், “நான் அசைக்கப்படவே* மாட்டேன்” என்று சொன்னேன்.   யெகோவாவே, நீங்கள் எனக்குக் கருணை* காட்டியபோது, என்னை மலைபோல் உறுதியாக நிற்க வைத்தீர்கள்.+ ஆனால், உங்களுடைய முகத்தை மறைத்துக்கொண்டபோது, நான் கதிகலங்கிப்போனேன்.+   யெகோவாவே, உங்களிடம் வேண்டிக்கொண்டே இருந்தேன்.+கருணை காட்டச் சொல்லி நான் யெகோவாவிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தேன்.   நான் செத்துப்போவதால் என்ன பிரயோஜனம்? நான் சவக்குழிக்குள் போவதால் என்ன லாபம்?+ தூசியால் உங்களைப் புகழ முடியுமா?+ நீங்கள் எவ்வளவு நம்பகமானவர்* என்பதைச் சொல்ல முடியுமா?+ 10  யெகோவாவே, என் வேண்டுதலைக் கேட்டு, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ யெகோவாவே, எனக்குத் துணையாக இருங்கள்.+ 11  துக்கத்தில் தவித்த என்னை நீங்கள் சந்தோஷத்தில் துள்ளியாட வைத்தீர்கள்.என்னுடைய துக்கத் துணியை எடுத்துவிட்டு, என்னைச் சந்தோஷத்தால் போர்த்தினீர்கள். 12  அதனால், உங்களைப் புகழ்ந்து பாடுவேன்; மவுனமாக இருக்க மாட்டேன்.என் கடவுளாகிய யெகோவாவே, உங்களை என்றென்றும் புகழ்வேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
வே.வா., “அனுக்கிரகம்.”
வே.வா., “தடுமாறவே.”
வே.வா., “அனுக்கிரகம்.”
வே.வா., “உண்மையுள்ளவர்.”