சங்கீதம் 31:1-24
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
31 யெகோவாவே, உங்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்.+
நான் அவமானப்படுவதற்கு ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.+
நீங்கள் நீதியானவர் என்பதால் என்னைக் காப்பாற்றுங்கள்.+
2 என் வேண்டுதலைக் காதுகொடுத்து* கேளுங்கள்.
என்னைக் காப்பாற்ற சீக்கிரமாக வாருங்கள்.+
மலைக்கோட்டை போல எனக்கு அடைக்கலம் கொடுங்கள்.மதில் சூழ்ந்த நகரம் போல எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+
3 நீங்கள் எனக்கு மாபெரும் கற்பாறையாகவும் கோட்டையாகவும் இருக்கிறீர்கள்.+உங்கள் பெயருக்காக+ நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள், என்னை நடத்திச் செல்வீர்கள்.+
4 எதிரிகள் தந்திரமாக விரித்த வலையிலிருந்து என்னை விடுவிப்பீர்கள்.+ஏனென்றால், நீங்கள்தான் என் கோட்டை.+
5 என் உயிரை உங்களுடைய கையில் ஒப்படைக்கிறேன்.+
யெகோவாவே, சத்தியத்தின்* கடவுளே,+ நீங்கள் என்னை விடுவித்திருக்கிறீர்கள்.
6 நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.ஒன்றுக்கும் உதவாத வீணான சிலைகளை வணங்குகிற ஆட்களை வெறுக்கிறேன்.
7 நீங்கள் காட்டும் மாறாத அன்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.+என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.
8 என்னை எதிரியிடம் ஒப்படைக்காமல்,பாதுகாப்பான* இடத்தில் நிற்க வைத்திருக்கிறீர்கள்.
9 யெகோவாவே, நான் தவியாய்த் தவிக்கிறேன், எனக்குக் கருணை காட்டுங்கள்.
கடுமையான வேதனையில் என் கண்கள் சோர்ந்துவிட்டன,+
என்னுடைய முழு உடலுமே தளர்ந்துவிட்டது.+
10 என் வாழ்நாள் துக்கத்தில்தான் கழிகிறது.+என் ஆயுள்காலம் மனக் குமுறலில்தான் கடந்துபோகிறது.+
நான் செய்த பாவத்தால் என் சக்தி கரைந்துபோகிறது.என் எலும்புகள் பலவீனமாகின்றன.+
11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+
பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+
12 நான் ஏதோ செத்துவிட்டது போல என்னை அடியோடு மறந்துவிட்டார்கள்.நான் உடைந்த ஜாடிபோல் ஆகிவிட்டேன்.
13 என்னைப் பற்றி நிறைய வதந்திகளைக் கேள்விப்படுகிறேன்.எங்கே திரும்பினாலும் திகிலாக இருக்கிறது.+
எதிரிகள் எனக்கு எதிராக ஒன்றுதிரண்டு,
என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார்கள்.+
14 ஆனால் யெகோவாவே, நான் உங்களை நம்பியிருக்கிறேன்.+
“நீங்கள்தான் என் கடவுள்” என்று சொல்கிறேன்.+
15 என் வாழ்நாள் உங்கள் கையில் இருக்கிறது.
என்னை எதிர்க்கிற ஆட்களிடமிருந்தும் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்தும் காப்பாற்றுங்கள்.+
16 உங்களுடைய ஊழியன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.+
உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள்.
17 யெகோவாவே, உங்களைக் கூப்பிடுகிறேன்; நான் வெட்கப்பட்டுப்போவதற்கு விடாதீர்கள்.+
ஆனால், பொல்லாதவர்கள் வெட்கப்பட்டுப்போகட்டும்.+கல்லறையில் அவர்கள் அமைதியாகக் கிடக்கட்டும்.+
18 பொய் பேசுகிற வாய் ஊமையாகட்டும்.+நீதிமானுக்கு எதிராக ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும்அவமரியாதையோடும் பேசுகிற உதடுகள் திறக்காமல் போகட்டும்.
19 நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்!+
உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.+உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்காக எல்லார் முன்னாலும் அவற்றைப் பொழிந்திருக்கிறீர்கள்.+
20 மனிதர்களுடைய சதித்திட்டங்களில் சிக்காதபடி,அவர்களை உங்களுடைய சன்னிதியின் மறைவில் நீங்கள் ஒளித்து வைப்பீர்கள்.+அபாண்டமாகத் தாக்கிப் பேசுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக,அவர்களை உங்களுடைய கூடாரத்தில் மறைத்து வைப்பீர்கள்.+
21 சுற்றிவளைக்கப்பட்ட நகரத்திலே,+யெகோவா மாறாத அன்பை எனக்கு அற்புதமான விதத்தில் காட்டினார்.+அதனால் அவருக்குப் புகழ் சேரட்டும்.
22 பதற்றத்தில் நான்,
“உங்கள்முன் இல்லாதபடி ஒழிந்துபோய்விடுவேனே” என்று சொன்னேன்.+
ஆனால், உதவிக்காக நான் கதறியதை நீங்கள் கேட்டீர்கள்.+
23 யெகோவாவுக்கு உண்மையாக* இருக்கிறவர்களே,+ அவரை நேசியுங்கள்!
உண்மையாக இருக்கிறவர்களை யெகோவா பாதுகாக்கிறார்.+ஆனால், ஆணவமாக நடக்கிறவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறார்.+
24 யெகோவாவுக்காகக் காத்திருக்கிறவர்களே,+தைரியமாக இருங்கள், நெஞ்சத்தில் உறுதியோடு இருங்கள்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “குனிந்து.”
^ வே.வா., “உண்மையுள்ள.”
^ வே.வா., “விசாலமான.”
^ வே.வா., “பற்றுமாறாமல்.”